Thursday, July 23, 2009

கறுப்பு ஜூலை கடுகு அளவுதான்! கடல் அளவு ஈழத் தமிழன் சோகத்தில்

இலங்கை அரசுக்கு எதிராக பல கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளேன் என ஐ.நா. பொதுச் செயலர் திரு. பான் கீ மூன் தனது பணியின் சாதனையாக அழுது வடித்துள்ளார். அதுவே அவரது பதவிக்கான அதிஉயர் தகுதியாக அவர் நினைத்திருப்பது போல் தெரிகிறது. அவரது சாதனைகளின் இறுதித் தொகுப்பாக எல்லாப் போர் விதிமுறைகளும் மீறப்பட்டு உடைந்து சிதிலங்களாகவும், பாதிப்பு அடைந்தோருக்கு நீதியும் மறுக்கப்பட்டுள்ள நிலையே நிலவுகிறது.

ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கு அதிகமான அப்பாவித் தமிழர் முட்கம்பி வேலிகள் போடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போரின் போது இருந்த ஹிட்லரின் கொலைக்கூடங்களை ஒத்த முகாம்களுள் அன்றாடம் அல்லலில் அவதிப்பட்டு மடிந்து மறைகின்றனர்.

எனினும் அவர்களுக்கு நீதியும் நிவாரணமும் மனிதாபிமான உதவிகளையும் வழங்க வேண்டிய ஐ.நா.வின் கடமையை வற்புறுத்தவோ அல்லது செயலற்றுவிட்ட புலிகள் இயக்கத்தின் மீதான தடைகளை நீக்க முற்படவோ நினைக்காது நிலைமையை நியாயப்படுத்துவதுதான் பரிதாபமானது. புலம்பெயர் தமிழரின் கோரிக்கைகளும் கூட அவரது காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.

கொசோவாவில் நிகழ்ந்ததை விடப் பல நூறுமடங்கு அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் வன்னித் தமிழர் அனுபவித்த நிலையிலும் ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வாய் இருந்தும் ஊமைகளாகவும் கண் இருந்தும் குருடர்களாகவும் உள்ளனர். இது பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதத்து எடுக்கக்கூட முடியாது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு ஒப்பான பாரிய குற்றங்களை பாராட்டுவது போன்றும் அதனைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தீர்மானங்களை நியைவேற்றி உள்ளமை உலகில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிர்ச்சி போரின் இறுதி இரு நாட்களில் இருபதினாயிரம் தமிழர் படுகொலை ஏற்படுத்தில அதிர்ச்சியைவிடப் பெரிதாக தமிழரால் உணரப்படுகிறது.

இலங்கை அரசினால் 1983 இல் நடத்தப்பட்ட பயங்கர வன்செயல்களால் 3000 தமிழர் கொல்லப்பட்டு அவர்களின் 300 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு, 4 சரக்குக் கப்பல்களில் அரசு தமிழ் அகதிகளை வடக்கு - கிழக்குக்கும் இந்தியாவுக்கும் அனுப்பி வைத்தது. மேலும் 3 இலட்சம் வரையான தமிழர் உலகில் 45 நாடுகளில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர். அன்று மிகப் பெரும் நிகழ்வாக இன்றும் பார்க்கப்படும் கொடுமைகள் இன்று மிக அற்பமாக்கும் விதத்தில் அரசு நடத்திய மனிதாபிமானப் போரும் அதன் பின் இன்றும் நடக்கும் நிகழ்வுகளும் காட்டி நிற்கின்றன.

இந்திய அரசின் கருணையினால் சர்வதேச தரத்திலே ஈழத் தமிழருக்கு என ஒரு நீதி நியாயத் தரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. முதன் முதலாகச் சிங்களவர்கள் 1915 இல் நடத்திய இனவெறி வன்செயலால் 146 இஸ்லாமியர் கொல்லப்பட்டும் 405 இஸ்லாமியர் காயப்பட்டும் அவர்களின் 405 கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டும் 85 மசூதிகள் எரிக்கப்பட்டும் உள்ள நிலையிலும் அதனை எவரும் பயங்கரவாதம் எனக் குற்றம்சாட்ட நினைப்பதில்லை.

அதற்கும் மாறாக ஒரு தமிழரான சேர் பொன். இராமநாதன் பிரித்தானியா சென்று குடியேற்ற செயலரின் அலுவலகம் சென்று வாதிட்டு இந்த வன்செயலில் குற்றவாளிகளாகச் சிறைவைக்கப்பட்ட சிங்களவரின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்து ஆபத்பாந்தவராக அவதாரம் எடுத்தார். இப்படியாக சிங்களவரின் இந்த முதல் இன வன்முறை இப்படியாக பாவமன்னிப்புக் கொடுக்கப்பட்டு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு விட்டது.

எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து வந்த பூர்வீக தமிழ் மக்களை காடையரைக் குடியேற்றி இரகசியமாகத் தமிழரை விரட்டிச் செய்யப்பட்ட அரசின் திட்டமிட்ட சிங்களக குடியேற்றத் திட்டங்களை இனச் சுத்திகரிப்பு எனப் படித்த அறிஞர் சமூகமும் சுட்டிக்காட்டவில்லை என்பது புத்திஜீவிகளின் புலமைசார் தகமை பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது உலகப் போரின் போது மலேசியாவில் வேலை பார்த்துவந்த யாழ்ப்பாணத் தமிழர் தமது பணத்தில் போர் விமானம் வாங்கி அதனை பிரித்தானிய அரச விமானப்படைக்கு அன்பளிப்புச் செய்து தமது பிரித்தானிய அரசுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

அதே பிரித்தானிய அரசு மகிந்த அரசின் தமிழ் இன அழிப்புப் போரில் பங்களித்துத் தமிழரைப் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இதனைவிட ஆபத்துக் காலத்தில் உதவிய உண்மை நண்பனுக்குச் செய்யப்படும் சிறந்த பிரதி உபகாரம் எதுவும் இருக்க முடியாது. ஜூலியஸ் சீசருக்கு அவனது நண்பன் புறூட்டஸ் செய்ததுக்கு ஒப்பான அதே செயலையே இன்றைய பிரித்தானிய அரசும் செய்துள்ளது.

1956 இல் பண்டா அரசு தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை அமைதி வழியில் எதிர்த்து காலிமுகத் திடலில் தந்தை செல்வா தலைமையில் நடத்திய சத்தியாக்கிரகத்தை சிங்களக் கடையர் தாக்கித் தமிழ் தலைவர்களை ஏரியில் வீசி எறிந்தும் தமிழரின் கடைகளை எரித்தும் தாக்கியும் நடத்திய வன்செயலை அரசு மௌனம் காத்து காடையரின் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியது. இருந்தும் அடிவாங்கிய தமிழரே இன்றும் இனவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்களத்தின் இனவெறித் தாக்குதல் வரிசையில் 1958 கலவரமும் முக்கியமானதாகும். தமிழ் அகதிகளை அரசே கப்பல்கள் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பிவைத்தது. இதனால் வடக்கும் கிழக்கும் தமிழரின் பரம்பரை வாழிடங்கள் என்பதை அரசே மறைமுகமாக ஏற்று அங்கீகரித்தமை வெளியாகிறது. இதனை இன்று சிங்கள அரசு மட்;டும் அல்ல இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியும் பாகிஸ்தானில் பிறந்த மன் மோகன் சிங்கும் இலங்கைத் தனி அரசுகளைக் கொண்டிருந்த தமிழருக்கு தன்னாட்சி அதிகாரமும் இறைமையும் கிடையாது என வாதிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதே பேர்வழிகள் ஈழத் தமிழருக்கான சர்வதேச நீதி முறையைப் பயங்கரவாதமாக உலக அரங்கில் முன்னிறுத்தி வருகின்றனர். 'ஆட்சி மாற்றம்;" என்ற கொள்கையில் நின்று சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இன அழிப்பை ஊக்கத்துடன் பங்களித்து வழி நடத்தியதோடு ஐ.நா. சபையையும் ஒரு கேலிக்கூத்தாக்கி மனித உரிமைச் சாசனத்தையும் கருவழித்து அதனை மலடாக்கி விட்டனர்.

ஐ.நா. சபையும் பொதுச் செயலர் அலுவலகமும் சந்தேகப்படும்; நடவடிக்கைகளின் கூடமாக மாறி ஒரு சாமானியனின் புரிதலுக்குத் அப்பாற் பட்டதாக உள்ளது. பொதுச் செயலரின் நிர்வாகத் தலைமை அதிகாரி திரு.விஜய் நம்பியார் இலங்கைக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டார். அவரால் போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சும் மீண்டும் ஏற்படும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்ட்டது. அங்கு சென்றவர் தமது தம்பியாரும் இலங்கை அரசின் இராணுவ ஆலோசகர் சதீஸ் நம்பியாரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி சென்று திரும்பியவர் அது பற்றி ஐ.நா. சபைக்கே அறிக்கை கொடுக்காது மாயமாக இருந்தார்.

அவருக்கும் அவரது தம்பியார் மற்றும் புதுடில்லி அதிகார பீடத்துக்கும் இடையே என்ன நடந்தது என்பது எவரும் ஊகிக்கக் கூடிய விடையம்தான். அந்த அனுமானம் ஐ.நா.வின் நற்பெயருக்கும் அர்த்தமுள்ள செயற்பாடுகளுக்கும் கௌரவத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட சதியாகவும் கொள்ளப்படலாம். அய்யகோ! ஐ.நா. சபையே நீயுமா எமக்குத் துரோகி?

எண் இல.13 உலகத்தில் உள்ள எல்லா தரப்பினராலும் பயத்துடனும் பீதியுடனும் பார்க்கப்படும் அதிர்ஷ்டம் கெட்ட ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை முழு உலகமும் அதனை ஒரு சர்வரோக நிவாரணி என நம்ப வைக்க மந்திரம் போல் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர்.

1987 இல் அனைத்துத் தமிழர் தரப்பினராலும் வீசி எறியப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை 100,000 தமிழரின் உயிரைப் பறித்து 50,000 பேரை ஊனப்படுத்தி, கப்பம், கடத்தல், கற்பழிப்பு, கொலைகள், என 22 வருட அவலங்களையும் போரின் அழிவுகளையும் அனுபவித்து வரும் நிலையிலும் அதே ஒற்றை ஆட்சிக்குள் அடைபடும் நிலையே ஈழத் தமிழருக்கு அற்புதமான தீர்வு என நம்ப வைக்க ஆர்வமாக உள்ளனர். இத்தகைய இழிவான தீர்;வைப் பெறுவதை விடவும் இன்று உள்ள அவலமே மேலானது இல்லையா?

இன்று ஈழத் தமிழர் 1983 ஜூலைப் படுகொலைகளை மட்டுமே தம் வாழ்வில் பெரிதாக நினைக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. இனப்படுகொலைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனத் தமிழர் எம்மதத்தவராயினும் அன்றாடம் வதைபட்டு அழிந்து வருகிறார்கள். போரின் வெற்றிப் போதையில் மிதக்கும் சிங்கள இனம் முழு அளவில் எம் இன அழிப்பு நடவடிக்கைகளில் முற்றிலுமாக ஈடுபட்டுச் செயற்பட உறுதி கொண்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டு முதல் இருபத்தோராம் ஆண்டின் தொடக்கம் வரை ஒரு நூற்றாண்டுக் காலத்தை சிங்களம் தமிழின அழிப்பில் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வெற்றி கண்டும் உள்ளது. நடந்து முடிந்த போரில் உலகின் எல்லா அரசுகளும் ஸ்ரீலங்காவின் இன அழிப்புப் போருக்கு உதவித் தமிழரின் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் பத்து ஆண்டு காலச் சிறந்த ஆட்சி ஆளணிக் கட்டுமான அமைப்புகளையும் அரசையும் பொது மக்களையும் அழித்துவிட்டுள்ளன.

பகிரங்க விசாரணைகளில் இலங்கை அரசின் மனிதப் படுகொலைப் போர்க் குற்றங்களில் இந்த நாடுகள் வழங்கிய நேரடி மற்றும் மறைமுக ஆதரவுகளும் பங்களிப்பும் வெளியாக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிரான எவ்வித விசாரணைக்கும் இவர்கள் உதவமாட்டார்கள் என்பது தெரிகிறது.

எனவே இந்திய அரசின் நற்கருணையினால் உலகில் ஈழத் தமிழருக்கான புதிய குற்றவியல் நீதி விசாரணை நெறி முறை முன்னெடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் புலம்பெயர் மக்களுக்கு 1983 ஜூலை பற்றிப் பேசுவது இனிமேலும் அவசியமா? அல்லது அடுத்துச் செய்ய வேண்டியதைத் திட்டம் இட்டுச் செயற்படுவது அவசியமா? சொல்லுங்கள்!

உண்மை நிலையைப் புரிந்துகொண்டு விட்டால், வெற்றிக்களிப்பில் மிதக்கும் சிங்களத்தின் வெறியை வெற்றி கொள்ள தமிழர் நாமக்காகத் தேசம் கடந்த தமிழீழ அரசமைக்க ஒன்றுதிரளுவதே இன்று தேவையானது என்பது தெளிவாகி விடும். மானம் ரோசம் உள்ள தமிழராக வாழ விரும்பினால் உலக அதிசயங்களுக்காக, அவதார புருஷர்களுக்காகத் தவம் இருப்பதை விட்டுவிட்டு கே.பி.அண்ணாவும் உருத்திரகுமாரனும் செல்லும் வழியில் சேர்ந்து உழைக்க முன் வாருங்கள்.
நன்றி
- தமிழ்நாதம் -

Tuesday, July 7, 2009

அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுமா இலங்கை அரசு?

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது.புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கை அரசு இந்த விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பõடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவ ரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டி ருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.

அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
வீரகேசரி வாரவெளியீடு