Thursday, August 30, 2012

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்


essay
பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்!
செந்தூரி

"ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம்
பூச்சாண்டியும் கடவுளும்
கொக்குப் போகும் பருத்திப்பூக்கள், நகங்களில் விழுந்தால்
உடைகளாய் மலர்வதைப் போலொரு
சுவாரசியம், பெரியவர்களின் பொய்களில்
"சாமி கிட்ட இருக்கா உன் அம்மா'
என்பதை மட்டும் மறுக்கிறது குழந்தை
"அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா?
எனும் எதிர்க் கேள்வியுடன்!''

உன்னிப்பின் உச்சமாய் எம்மை நாமே திருத்தி எழுதிக்கொள்கின்றபோது, நடுத்தரம் கடந்துவிட்ட வயது, அனுபவம், ஆளுமை, அதிகாரம் போன்ற பெயரிலுள்ள யாவையுமே சுலபமாக எம்மை ஏய்த்துவிடும் வழக்கத்தை தொடர்வது கடிதினும் கடிது.

 ஆனால் சுதாகரிக்க மறக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துளிகளி லும், பின்னந்தலை தொடங்கி பிட்டமூடாக புறக்குதிக்கால் வரையிலும் "மூட்டாள்கள் நீங்கள் '' என்று கண் தேடா இடங்களில் முத்திரை குத்துவது சில பெரியோர்களின் பீடுடைத்த இயல்புகளில் ஒன்று!
ஈழத்தின்  இசைப் பாரம்பரியம் கொஞ் சம் "தனிமைகளுடன்' கூடிய தவத்துவ மானது.

 போரும், தொடர்பாடல் குறைவும் எம்மூரின் கலைஞர்களையும், கலைப் பண்புகளையும் தனித்துவமானதாகவும், விளம்பரக் குறைவுடன் கூடிய கேள்வி நிரம்பலுடையதாகவும் வைத்திருந்தது எனவும் ஊகிக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே "ஆலையில்லா ஊரின் சர்க்கரைக்குபிரதியிடும் இலுப்பைப் பூக்கள்'' அல்ல என்பதும் உறுதி.

சர்வதேச தரம், புதுமை விருப்பம், புத்தாக்க நுணுக்கம், கடும்பிரயோக பயிற்சி என்பன மூலம் மேடையாற் றுகைகளும் இணைக்கலைகளும் சற்றும் "சோடை' போகாமல் சுற்று வேலிகளுக் குள் வீற்றிருந்தன என்பதை எடுத்த எடுப்பில் எவருமே வெட்டிப் பேசிவிட முடியாது.  ஆனால் இன்றைய வடபுலத் தமிழர்களினால் உட்படும் ரசிகர்கள் என்கின்ற அவதானிகளை எம் பெரியோர் கள்  அந்தக் கவிதைக் குழந்தையின் எத் தனத்தில் ஏமாற்றத் துணிந்தது எங்ஙனம் நியாயமாகும்?

இவ்வருடத்துத் தைப்பொங்கல் திருநாளின் அதிகாலை ஆறுமணி தொடக்கமான அரைமணிநேரத்துக்கு, இந்தியத் தொலைக்காட்சியும், உலகத்தமி ழர்களின் "ரிமோட்' விரல்களில் அதிகம் அடிபடும் அலைவரிசையுமான "சன் ரீவி' யில் நாதஸ்வர இசை பொழியும் அற்புதமான வாய்ப்பை அநாயாசமாக பெற்ற ஈழத்து இளம் மேதை ஒருவனின் அறச்சீற்றத்தை "அட!அதுக்கென்ன'' வென்று பூசிப் பொய் மெழுகியிருக்கின்றது எம் கலையுலகம்!

 துள்ளிசைப் பண்ணும், உச்ச தாளக் கூட்டமும், சாந்தத்தை மீறிய ஆரவாரமும் கொண்ட கேரளத்துச் செண்டை மேளமும், போர்முனையில் பயன்படும் பேரிகைக் குழல்களும், "போ' புறமென்று தள்ளியதை அருளொழுகும் விழிகளால் வேடிக்கை பார்த்தான் நல்லை நாயகனும் தன் வீதிகளில்!

"நாம சகஜம் ' கொண்ட எமக்கேயான கடல்கடந்த பெருமைகளை தன் விரல்களிலும், குரல்வளையிலும் சிறுகச் சிறுகச் சேமித்து இசைஞானம் பெற்ற மண்ணின் "பாலகனை' ஒதுங்கிநில் ஓரமாய் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் எம் பண்பாட்டுப் பொரி வாய்களுக்கு?

"சிங்காரி மேளம்' என்கின்ற புறப் பெயரினால் சுட்டப்படுகின்ற அவ்வகை வாத்தியங்கள் தமிழிசைக் கேற்ற சாந்த இயல்புடையவை அல்ல என்பதும், திருமுறை போற்றுகின்ற சைவப் பாரம் பரியத்திற்கு நேரெதிர்ப் பண்புள்ள ஆரியப் பழமைக்குரியவை என்பதும் தெரியாதவர்களா எம் பெரியவர்கள்?

தென்னிந்தியாவில் தமிழக இந்துக் கோயில்களின் மூன்றாம் வெளி வீதிகளுக்கு கூட அனுமதிக்கப்படாதவர்களை ஆரத்தழுவி ஆராதித்ததில் என்னென்ன "உள்குத்துகள்' என்பது ஆறுபடையப் பனின் பன்னிரு விழிகளின் மூடிய இமைகளுக்கும் சமர்ப்பணம். சுற்றுப்பிர காரம் முழுவதும் சற்றுக் கவனித்தவர்கள் நிச்சயம் இனங்கண்டிருக்க முடியும், செண்டை மேள இசையினது ஆரோகணமும், கலைஞர்களினது அசைவும் உடல் மொழியும், கண்டியச் சிங்கள நடன மற்றும் இசைக்கலைஞர்களினது இசைவையும் அசைவையும் இறுக ஒட்டியிருந்தமையை!

சென்னை விமான நிலையம் வரை வந்த மனோ "ஈழத் தமிழச் சகோதரர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்ற படி திரும்பியிருக்கின்றார். ஹரிகரனின் இசைநிகழ்வுக்கான மெகா விளம்பரங்கள், தவிர்க்க முடியாத காரணமென திருத்தி எழுதி நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடைய எவரையும் இலங்கை அரசாணைக்குள்ளான நிகழ்வுகளுக்கு இலகுவில் அனுமதித்து விடாமல், கண்ணுக்குள் எண்ணையூற்றிய தமிழக உறவுகளையும் மீறி, "உன்னி' எப்படி ஓரமாய் பாய்ந்து திரும்பியது? "நல்லூரின் ஆன்மிகப் பெருவிழா' என்கிற ஒற்றைச்சொல், எதிர்ப்புக் குரல்களை அடக்கியிருக்கும், அனுமதித்திருக்கும் என்பதே எம் எண்ணம்! உண்மையும் அதுதான்!

ஆனால் நல்லூரானின் பெயர் சொல்லி நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் தனித்த ஏற்பாட்டாளர்கள் "வடமாகாண சபையினர்' என்பதும், நல்லூர் திருவிழாவை காரணம் காட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியக்கலை விழாவொன்றின் அங்கமே, இது எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே."DIVINE ECSTASY''என்ற  தலைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே காணப்பட்டது.
 
திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதனை விநியோகிப்பதை கருத்தில் கொண்டு அச்சிடப்பட்டதே தவிர சாதா ரண இசை ரசிகர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படவில்லை.

"நிச்சயம் வருவார்கள்'' என்ற துணிச்சலுடன் அலர் மேல் வள்ளியையும், உன்னி கிருஷ்ணனையும், ரி.எம். கிருஷ்ணாவையும் அழகுறு புகைப்பட அழைப்பிதழில் அச்சிட்டவர்கள் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடம் நல்லூரின்  "சங்கிலியன் தோப்பு '

 ""புதிதாக ஏதாவது உருவாக்கி வைத்திருப்பார்களோ'' எனும் பிரமை பிடரியில் அறைய ஆர்வத்தோடு காத்திருந்தால், ஏற்பாடுகளின் போதே தெரிந்தது ""கிட்டுப்பூங்கா'' என்று அழைப்பதில் அவர்களுக்கு தொடரும் "தீட்டு'. அவ்விடத்தை "சங்கிலியன் தோப்பு ' என்று சிலாகிக்க வைத்திருக்கின்றது. எவனாவது எதிர்க் கேள்வி கேட்டாலும் கூட, "பாருங்கள் தமிழ் மன்னனான சங்கிலியனை மறுதலிக்கின்றார்கள்'' என்று முகாரியில் முடித்து நாவடக்கம் செய்யும் முன்னேற்பாட்டுடன் எம் தமிழ்த் தேசிய மூக்கில் குத்தியிருந்தார்கள்.

துப்புரவாக்குதல் என்கின்ற பெயரில் "இடித்துத் துடைத்தழிக்கப்பட்ட' கொவ்வைச் செவ்வாயும் குழந்தை மனமும் கொண்ட போராளியொருவனின் நினைவிடத்தையும், பூங்காவையும்  நீளமறந்து விட்டு நிலத்தில் அமர்ந்திருந்தோமா இல்லையா? கொஞ்சம் உண்மை சொல்லுங்கள் அன்பர்களே!

அன்றைக்கு உங்களை விழிமூடி வாய்திறக்க வைத்த "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! '' என்கின்ற வரிகள் அட்சர சுத்தப் பொய் இல்லையா?
யாழ்ப்பாணத்தின் சுவாசமாய், பல்லின உயிர்ப்பரம்பலோடிருந்த பழைய பூங்காவினை, இயற்கைச் சிதைவினுக்குள்ளாக்கி மனித நடமாட்டம் மிகுந்த "கொங்கிறீட்' கல்லறையாக வர்ணம் பூசி வைத்த ஏமரா மன்னனும், எடுப்பார் பாவை அமைச்சர்களும் , "உள்நோக்கம் எதுவுமே இல்லாத நல்லெண்ணத்துடனேயே, முத்திரைச் சந்தியில் இருந்த பூங்காவைத் துப்புரவுபடுத்தி கச்சேரி வைத்து எம் கலையார்வத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார்கள்'' என்பதை எத்துணை சுலபமாய் நம்பிவிட்டோம் நாம்.

பம்பாய் வெங்காயம் பாய்ந்திறங்கி உள்ளூர்க் காய்களை ஊசிப்போக வைத்தால், எதிர்க் கேள்வி கேட்கச் சம்மேளனம் இருக்கின்றது. ரம்புட்டானோ, மங்குஸ் தானோ வீதிகளில் நிறைந்து தேன் கதலியையும் ஊர் முந்திரிகையையும் விளை நிலத்திலேயே வெட்டிப்புதைக்க வைத்தால், மனுப்போட சங்கம் இருக்கின்றது. ஆனால் "பாலக்காடுகளின் படையெடுப்பி னால் இம்முறை மண்மூடிப் போன ஈழநல்லூரின் பண்டைத் தனித்துவத்தைப் பாதுகாக்க கலைக் குடும்பத்தின் எந்தச் சங்கமும் கதவைத் திறக்காத மர்மத்துக்குப் பதிலென்ன?

அளவுப் பிரமாணக் குறைவினால் ஐந்து மாதக் குதிரைக் குட்டியில் சங்கிலியனை ஏற்றி உட்கார வைத்து "செத்தும் மிருகவதை செய்யும் மாண்புறு மன்னனாய்' எம்முன்னோனை பழி சுமக்க வைத்த ஆர்வக் கோளாறுகளே நயினையின் கோபுர வாயிலில் கற்பனைக்கு மீறிய தொந்தி சுமக்கும் காவற் பெண்களின் தோற்றத்தால் திராவிடரெல்லோரும் அரக்கர்கள் என்று பூடகம் பேசும் கற்சிலைகள் இன்னும் பல கோயில்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பது, கண்ணிருக்குமிடத்தில் இரு புண்களை நீவிர் சூடியதால் வந்த வினைப் பயனே!

"இறக்குமதிச் சரக்கு'' எதுவுமே இல்லாமல் ஈழத்து இளைஞர்களின் தனி முனைப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் எண்கோண நீர்த்தடாகத்தை நோக்கி இன்னமும் பத்திரிகை வெளிச்சங்கள் பாயாதிருப்பது துர்ப்பயன்!

"யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள பண்பாடு, கலாசாரம், மரபுரிமை போன்றவற்றுக்கான வரைவிலக்கணங்களில் உள்ள "தேசிய இனம் ஒன்றினது' என்கின்ற சொற்களை எடுத்தெறிந்து விடுங்கள் தயவுடன். அர்ச்சனைக்கு சமஸ்கிருதம், ஆடலுக்கு மராட்டியம், பாடலுக்கு கர் நாடகம், பின்னணிக்கு மலையாளம் , தொழிலுக்கு ஆங்கிலம், ஆட்சிக்கு சிங்களம், அவலத்தில் "ஐயோ' வென்று அலற மட்டும் தானே ""தமிழ்'' எமக்கு?
மிக்க நன்றிகள் கவிஞர் இளையநிலா  ""அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா? ''

என்று உற்றுக் கவனித்து கேள்வி  கேட்காத ஈழத்தமிழனின் ஊமைக் குளத்தில் நீங்கள் தூக்கிப் போட்ட ஒற்றைக் கல்லுக்கு! அறுதுயில் கலையாயோ ஆண்ட என்னினமே?
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3909235230299092

Monday, August 27, 2012

தோற்றுப் போனவனின் தொடர் தூக்கம்


essay
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து பக்ஸில் பறந்து வந்தது அந்தக் கடிதம். தங்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள மாநாட்டின் பெயரில் ஈழம் என்கின்ற சொற்பதம் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. அதை நீக்கிய பின் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னெடுப்பதே உசிதமாகும்.


எனும் சாரப்பட ஆறேழு வரிகளுக்குக் குறைவான அம்மடல் "தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம்'' எனப்படும் டெசோவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. இந்தச் சலசலப்புகளின் பின் ஒரு வாரம் கழித்து இராணுவப் படைப்பிரிவொன்றின் வருடாந்த அணி வகுப்பு விழாவொன்றினையொட்டி உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி, ""ஈழத்துக்கான முன்னெடுப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.

 இது எம்மை ஓய்வெடுக்க விடும் செய்தியல்ல'' என்று உறைப்பாக உசுப்பேத்தினார். தன் வீரர்களை இந்தியாவோ, இலங்கையோ இரண்டு மத்திய அரசுகளையும் அவ்வப்போது அலறடிக்கும் இந்தச் சொல்லான "ஈழம்' உண்மையில் அர்த்தப்படுவது "இலங்கை'' என்பதையே!

முகமாலையின் தமிழ்ப் போராளிகளின் எல்லைக் காவலரண் ஒன்றின் முன்புறமாக அழகு படுத்தப்பட்டிருந்த, வெற்று ரவைக் கூடுகளினால் எழுதப்பட்டிருந்த "உ'' திடீரென ஒருநாள் காணமல் போனது எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த நிகழ்வுக்கு இன்றைக்கு அகவை பத்தினை அண்மிக்கின்றது. L.T.T என்று மட்டும் மீள் குறுவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக "தமிழ் ஈழம் என்று பகுத்துப் பாவிப்பதனை விடுத்து, ""தமிழீழம்'' என இணைத்து கையாள்வதனை உறுதிப்படுத்தவே அந்த "ஈ' எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

 இலங்கை என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்தாக SL என பரவலாகப் பாவிக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா என எழுதப்படும் ஆங்கில எழுத்துக்களிடையே "வலிந்த' இடைவெளி எதுவும் விடப்படுவதில்லை என்பதை நினைவூட்டுவது இவ்விடத்தில் சாலப் பொருந்தும்.

ஆக மேற்கூறிய சண்டப்பிரசண்டர்களின் மூலம் வந்தடையக்கூடிய தெளிவு ஈழம் எனும் சொல் இலங்கை முழுவதையும் அர்த்தப்படுத்தும் என்பதனாலேயே ""தமிழர்களின் இலங்கைப் பகுதிகள்'', தமிழர்களின் ஈழமாக "தமிழீழமாக' சொற்சுருக்கத்திற்கும், எண்ண விரிவுக்கும் உட்படுத்தப்பட்டன என்பதேயாகும். எண்பதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கப்பட்ட "டெசோ'' அமைப்பின் புத்துயிர்ப்பினை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி மீண்டும் கையிலெடுக்க ஏக காரணம் அவரது சுயநல அரசியல் சண்டித்தனம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லைத்தான்.

 ஆனால் தன் அரசியல் எதிரியான ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பற்றிப் பேச வைக்கும் அழுத்தத்தை மறைமுகமாக ஏற்படுத்திய சால்பு கருணாநிதியினுடையது.

"அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நிகழ்த்த திட்டமிட்டது'', ""மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் நேரில் கையளிக்கத் துணிந்தது'' போன்ற மிரட்டல் முடிவுகள், சிங்களப் பேரினவாதத்தின் இரத்த அழுத்தத்தை இன்னுமின்னும் எகிறவே செய்துள்ளன. இந்திய இலங்கை தமிழின உணர்வுகளில் மெல்லிதாக இழையோடிருக்கும் கருத்துவேற்றுமைகளில் அவ்வளவாக "ஊறித்திளைக்காத'' சர்வதேசங்களின் பார்வையில், இதுவும் கூட இன்னுமொரு இன விடுதலைக்கான எழுச்சித் தீர்மானமாகவே நோக்கப்படும்.

 உண்மையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மீது ""பனிக்கண்டனம் கொட்டும் மாயை'', ""சரிந்து போன மாநில வாரியாக செல்வாக்குக்கான புனரமைப்பு '', கட்சி மீது கண்டபடி பாய்ந்துள்ள ஊழல், நில அபகரிப்பு புகார்களுக்கான திசை திருப்பல் என பல்நோக்கங்களை உள்ளே பொதிந்திருப்பதே "டெசோ' சுக்கல் சுக்கலாக கிழிந்து போன தனது இறுதிக்கட்ட அரசியல் முகமூடியினை கோர்த்து மறு சீரமைக்கும் தனிப்பட்ட முயற்சிகளை மற்றவர்களின் உழைப்பினால் சாதிக்க எண்ணும் முதிர் சாணக்கியனின் எதுகை மோனை மிதக்கும் பேச்சுக்களுக்கு இலகுவில் மயங்கிவிடாத கூட்டம்  தமிழகத்தில் கருக்கொள்ளத் தொடங்கியிருப்பதும் தெட்டத்தெளிவு.

 தமிழீழக் கோரிக்கையைத் தீர்மானமாகக் கொண்டுவருவதில் இருந்து டெசோ அமைப்பினர் பின் வாங்கிய போது, " வடகிழக்குத் தமிழர் தாயகப் பூமிகளை தமிழரின் தேசிய வாழிடமாகவும், ஈழத்தமிழர்களை தனித்தேசிய இனமாகவும்' எண்பிக்கும் தீர்மானங்களையாவது நிறைவேற்றுங்கள் என உறுதியான எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுள் கொளத்தூர் மணி, சீமான், விடுதலை  இராஜேந்திரன், தி.இராம கிருஷ்ணன் ஆகிய உண்மை உணர்வாளர்கள் முதன்மையானவர்கள்.

 தமது எதிர்ப்புக் குரல்களை கருணாநிதி அசட்டை செய்வதைக் கண்டு தனியான "தமிழீழ மாநாடு' ஒன்றினை நடத்தும் நோக்கில் திரண்ட கூட்டத்தில் "ஈழத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகளாக எவர் "டெசோவுக்கு வந்தாலும் எதிர்ப்போம் ' என்று மிரட்டி வைத்தவர்களும் அவர்களே தான்.

இன்றைய தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வேகமாக நிராகரிக்கப்பட்டமைக்கு மேற்கூறிய தமிழக இன உணர்வாளர்களின் எதிர்ப்பினை சமாளிப்பதில் இருந்த சவால்கள் மட்டுமே காரணம் என்று நம்புவோமானால் எம்மைப் போல் முட்டாள்கள் வேறெவருமே இருக்கமுடியாது.

"தமிழீழம் கோரும் தீர்மானம்'' நிறைவேற்றப்படாது என்பது, அழைப்புக் கிடைக்கப் பெற்ற காலப்பகுதியில் தெரிந்திருக்குமேயானால் இந்த மாநாட்டிலும் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் எனும் பெயரிலான பொம்மைகளைப் புகைப்படங்களில் பார்க்கும் வாய்ப்பு யாவருக்கும் வாய்த்திருக்கலாம். டாக்டர் விக்கிரமபாகு கருணரட்ணவின் துணிச்சலின் மிகக் குறைந்த சதவீதமேனும் எம்மவர்களில் எவருக்கும் எழவில்லை என்பதற்கு டெசோவின் இந்த வருட மாநாடு முடிவடைந்த பின்னாலும் நீடிக்கும் அறிக்கை மௌனமே நேரிய சாட்சி!

"முந்தைய மாதம் கூட தமிழகத்துக்கு விஜயம் செய்தோமே? கருணாநிதியின் சுயநல அரசியல் மாநாடு என்பதால்தான் கலந்து கொள்ள மறுத்தோம் '' என்று நல்ல பெரிய இன செவ்வரத்தைப் பூ எடுத்து எம் காதுகளில் சொருகி விட எத்தனிப்பவர்களின் கால்களைக் கட்டிப் போட்ட இன்னொரு கயிறு "ராஜ பக்ஷே'க்களின் மீது அண்மை நாள்களாக வலுப்பெறத் தொடங்கியுள்ள குருட்டு விசுவாசமேயன்றி வேறில்லை.

தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பற்றினும் மீறிய பெரிய நம்பிக்கைகளை வெகு சுலபமாக போட்டுடைக்கும் அழுகுணித்தனம் எம்மவர்களால் இன்னுமின்னும் தொடர்கின்றது. நோய்வாய்ப்பட்டதனால் இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன்னிரு கண்களிலும் முற்றாக பார்வையிழந்த போதும், இன்றும் தமிழ் மாணவனாக தொடரும் தீவிர இன மொழிப் பற்றாளரான கோவை மாவட்டம் துடியலூர் வாசி தமிழறிஞர் "ஞானி' அவர்கள் செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இலங்கையின் இனவழிப்புத்துயர் இடம்பெற்ற சூட்டோடு இடம்பெறுவதைக் கண்டு மனம்வெதும்பி கருணாநிதிக்கு கைப்படக் கடிதம் எழுதிய பழுத்த தமிழுணர்வாளர். நடைப்பயிற்சி போகும் பொன்மாலைப் பொழுதொன்றில், "நாம் அவன் குடி! கூப்பிட்டால் போயே ஆக வேண்டும்.

ஆனால் ஈழத்திலிருந்து எவரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன். குறிப்பாக பேராசிரியர்.... அவர்கள் நிச்சயம் அழைப்பை நிராகரிப்பார்கள், உடல் நிலையை காரணம் காட்டியாவது!'' இன்றைக்கும் காதுகளில் மெல்ல மீளொலிக்கும் மேற்படி வார்த்தைகளை ""பாய்ஞ்சு விழுந்து'' பொய்யாக்கியது எம் அளவு கடந்த மொழிப்பற்று.

""அவர் வந்தார் குழுவோடு! வென்றார் திடலோடு! உண்டார் வெண்பொங்கலோடு'' என்று தனது டயரியின் அந்த ஜூன் மாதத்துப் பக்கங்களில் புளுகிவைத்திருக்கக் கூடும் கருணாநிதி.

முதல் மாநாட்டின் போது அழைப்பை ஏற்றுக்கொண்டமையிலும், நேற்றய மாநாட்டின் போது அழைப்பை நிராகரித்தமையிலும் எமது இயலுமைகளை மேவிய "இன எதிரியின் தலையீடுகளால் சூழப்பட்ட அசிங்க அரசியல்' மாற்றுக் காரணமாக மறைந்திருப்பது என்றாவதொரு நாள்  தமிழக உண்மை உணர்வாளர்களால் அறியப்படும் போது, எங்கே கொண்டு போய் வைக்க எம் முகங்களை? முடிந்துபோன தமிழனின் அவலங்களை காலகாலமாக தோண்டியெடுத்து தமது வாக்குப் பொக்கற்றுக்களை நிரப்பிவிட முடியும் என்ற மூடிய சிந்தனைக்குள் தேர்தல்களை சந்திக்கும் அசட்டுத் துணிச்சல், ""மக்கள் பிரதிநிதிகள்'' என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்பவர்களின் "களஉழைப்பை' களவாடித் தின்று விட்டது தான் நிஜம். நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதாகவும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களான எஞ்சியவர்கள் எல்லோரும், ""கடுமையான போட்டிப் பரீட்சைகள்"" மூலம் பதவிக்கு வந்தவர்கள் போலவும் வீம்புக்கு வாளாவிருப்பது, நிச்சயமாக இன்னுமொரு தெரிவில் "பழையன கழிந்து, புதியன புகவே' வழி செய்யும்.

"அடித்துக் கொலை செய்யப்பட்ட அரசியல் ஏதிலிகளின் சாவுக்கு எதிரான போராட்டங்கள்', "வாழ்வாதாரமான தமது சொந்த நிலங்களை மீட்க அந்தரிக்கும் வீதிப் போராட்டங்கள்', "சுயாதீனமான இயல்புவாழ்வுக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களை அறவழி எதிர்க்கும் நிகழ்வுகள்' உட்பட சாதாரணமாக பிரதேச மட்டத்தில் கூட மக்கள் கருத்தறியும் சிறு கூட்டங்களைக்கூட முன்னெடுக்கவோ, மக்களைத் திரட்டவோ, கருத்துக்களைக் கொண்டு சேர்க்கவோ, மாதமொரு முறையாவது கலந்து பேசவோ மறுக்கும் பிடிவாதக்காரர்களான மாகாண, மாநகர, பிரதேசசபை உறுப்பினர்களும் கூட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகுதிக்குள் வருபவர்கள் தானே?

"நேற்றய வெற்றி' எமதில்லை என்று தெரிந்த பின்னரும் உழைப்பில் குறைந்து, உறக்கம் நிறைந்தபடி தொடரும் எம் வரும் நாள்களின் வர்ணம் கருமை சூழ் இருள் தவிர வேறில்லை! ஆங்கில அரச ஊடகம் ஒன்றில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உரை முதன்மைச் செய்தியாக வார்க்கப்பட்டிருந்த வார்த்தைகள் எமக்கும் இறுகப் பொருந்துகின்றன. Eelam Proposals Still Alive We Are Not Suppose To Rest'
""ஈழத்துக்கான பரிந்துரைகள் இன்னும் உயிர்ப்புடன் ஓய்ந்தவர்களாக நாம் கருதப்படக்கூடாது'' ஆழ்ந்துறங்கும் தமிழன் ஒவ்வொரு வனையும் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவே படுகின்றன இவை.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7611934927454907

Sunday, August 26, 2012

உயிரோடு மலர்வளையம் வைக்கும் மகிந்தவின் கொலைக் கலாச்சாரம்!

 - தாயகத்தில் இருந்து எழுவான்
1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களத்தின் ஆட்சியாளர்கள் தமிழர்களை பணயம் வைத்துத்தான் ஆட்சியமைத்தனர். காலப் போக்கில் தமிழர்களின் போராட்டங்களை பணயம் வைத்து ஆட்சியமைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியாளர்களும் சரி ஒரே ஒரு விடயத்தைத்தான் மையப்படுத்தினர்.
இலங்கைத்தீவிலுள்ள சிறுபான்மையினரை அடிமைப்படுத்த அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளில் இன்று மதம், நிலம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மகிந்த அரசாங்கம் ஆட்சி செய்கின்றனர். திசைதெரியாது கரையதிங்கிய சிங்கள இனம் இன்று, பூர்விக நிலங்களில் வாழ்கின்ற மக்களை விரட்டுவதில் சாதனை படைக்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் பாலஸ்தீன மக்களை விரட்டுகின்றார்கள், ஒரு பகுதியில் தான். ஆனால் இலங்கைத் தீவில்  செறிந்து வாழும் தமிழர்களை விரட்டுவதில் கரையதிங்கிய சிங்கள இனம் தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட சிங்கள ஆட்சியாளர்களின் ஆதிக்கப் போட்டியினால், சிறுபான்மை இனத்தின் தமிழ் இளைஞர்கள் தமது உரிமையைப் பெற முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், சிறுபான்மை இனத்தின் போராட்ட வரலாறு தெரியாத வல்லரசுகள் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.
விடுதலையை நோக்கிப் புறப்பட்ட அமைப்பைப் பார்த்தார்களே தவிர, அந்த அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கு தயாராக இருக்கவில்லை. அதன் விளைவுகளை இன்று உலக நாடுகள் சந்திக்கின்றன. தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இன்று பல்வேறு நெருக்குதல்களை கொடுப்பதை இன்று அந்ததந்த நாடுகள் உணர்கின்றன. போர்க்காலத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வாறு கொலைகள், கொள்ளைகள் இடம்பெற்றதோ அதைவிடவும், மிகவும் மோசமான சூழ்நிலைகள் உள்ளதைக் காணலாம்.
பட்டப்பகலில் வீதியால் செல்லும் பெண்களை மறித்து கழுத்தை நெருக்கி கொள்ளையடிக்கின்றனர், சில வேளைகளில் பெண்களை கொலையும் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் எப்பாகத்தில் ஒரு கொலை நடந்தாலும் அதற்கு எந்த விசாரணையும் இல்லை. உடனே விடுதலைப் புலிகளின் தலையில் பழியைப் போட்டுவிடுவார்கள். இதற்கு சிறீலங்காவின் ஊடக அமைச்சு ஒரு அறிக்கையும் வெளியிட்டுவிடுவார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டால், நாட்டில் இடம்பெற்ற கொலைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று கொலைகள், கொள்ளை, சிறுவர் துஸ்ப்பிரயோகம் என அனைத்தும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடுநிசியில் தனிய ஒரு பெண் வீதியால் சென்று தனது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய காலம் இருந்தது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இன்று யாழ், குடாநாட்டில் உள்ள மக்களை சூழ சிறீலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. பயிரை வேலி மேய்வது போன்று, பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட படையினராலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கென்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை.
முன்னர் பர்மா என அழைக்கப்பட்ட மியன்மாரில் படையாட்சி இடம்பெறுவதினால் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பாகவும் படையினர் இரகசியமாக பதுங்கியிருப்பார்கள். இரவு நேரத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் காணாமல் போவதுதான் வழக்கம். அவ்வாறான சூழ்நிலை யாழ் குடாநாட்டில் ஏற்பட்டிருப்பது என்பது தற்போதைய நிலையில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் காட்ட அரசாங்கம் முற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரினதும் மனங்களில் தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்திய வங்ரோத்து அரசியல் ஆட்சியாளர்களினால் இன்று புலிகளின் பேச்சை எடுக்க முடியாத நிலையில், இரவு வேளையில் மலர் வளையங்களை வைத்து தமது ஏகாதிபத்திய ஆட்சியை நடாத்த மகிந்த அரசு முற்படுகின்றது.
கன்னியமான தொழில்களில் ஈடுபடும் நீதியரசர்கள், மருத்துவர்கள், தொழிச்சங்க வாதிகள் என அனைவருக்கும் இன்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. சிலரின் வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, இன்னும் சிலருக்கு கழிவு எண்ணை மற்றும் கல் வீச்சித் தாக்குதல் நடாத்தப்படுகிறது.
மன்னாரில் நீதிவானுக்குப் பாதுகாப்புயில்லை, கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொழிச்சாங்க வாதிகளுக்கு பாதுகாப்புயில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
சிறீலங்காவின் ஆட்சி இன்று மாபியாக்களின் கைகளில் சிக்கிவிட்டது. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிருந்த பகுதிகளை மீட்ட பின்னர் சிறீலங்காவின் அதிபர் மகிந்த தெரிவிக்கையில், இந்த நாட்டை மாபியாக்களின் கையில் விடமாட்டேன் என்றார். அந்த சொல் இன்று தனது குடும்பத்தினருக்கே பொருத்தமாக அமைந்துள்ளது.
சிறீலங்காவின் எந்த நிர்வாகத்துறையை எடுத்தாலும் கையூட்டல் தலைவிரித்தாடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடக்கம் ஓய்வூதியம் வரை நடைபெறுகின்றது. தனது குடும்பத்தினரும், சொந்தக்காரர் மாத்திரம் தான் இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதில் மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இவற்றுக்கெல்லாம் எந்த அரசியல் வாதியினாலும் சரி, எந்த நாட்டினாலும் சரி எதனையும் செய்து விட முடியாது. இனியாவது இனவேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாட்டால் மாத்திரம் இந்த வெறிபிடித்த ஆட்சியாளர்களை துரத்த முடியுமே தவிர வேறு எந்த சக்தியினாலும் எதுவும் செய்ய முடியாது என்பதில் மகிந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்கால மாற்றங்களை அவதானித்தால் புரியும், அங்கு மக்களின் சக்தி மிகப் பெரும் சவாலாக அமைந்தது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு. ஐம்பது வருட ஆட்சி கொண்ட லிபியா அரசாங்கத்தையே மக்கள் புறட்டியெடுத்தார்கள் என்றால் மக்கள் சக்தியின் முன் எதுவும் பொடிப்பொடியாகிவிடும் என்பதற்கு அதுதான் உதாரணம்.
இன்று அதன் ஒரு பகுதியைக் காணக் கூடியதாக இருக்கிறது. சிறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிழப்பக்கு பின்னர் இன வேறுபாடின்றி சில முற்போக்குவாதிகளும் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதை அவதானிக்கலாம்.
சிறீலங்காவில் பாமர மக்கள் தொடக்கம் கல்விமான்கள் வரைக்கம் தமது எதிர்ப்பினை மகிந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றனர். இதனை ஒவ்வொரு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மற்றும் தனியார் துறைகளின் அதிகாரிகள் ஊடாக அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க வெறியினால் அனைத்துத் துறைகளும் ஒழுங்கான வினைத்திறன்கள் பயன்படுத்தப்படாமையினால் படுநட்டத்தில் இயங்குகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக தொழிச்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மகிந்த அரசாங்கத்தின் அஸ்த்தமன் எதிர்வரும் மாதம் 8ம் நாளுடன் தெரிந்து கொள்ளலாம். அதாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஏற்படப் போகும் தோல்வி மகிந்த ஆட்சியின் முதற்கட்ட நகர்வாக அமையும் என்பதை அனைவரும் உணரலாம்.
நன்றி : ஈழமுரசு
http://www.pathivu.com/news/21799/57//d,article_full.aspx

Saturday, August 25, 2012

இனிமேல் இரணைமடு யாருக்கு?-வன்னிமகன்



Saturday, August 25, 2012, 4:56தமிழீழம்

இரணைமடு யாருக்கு? ஏழை விவசாயிகளுக்கா? சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கா? இத்தகைய கேள்விகள்தான்

தற்போது தமிழ் மக்கள் மனங்களெங்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய சொத்தில் யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்களுடைய சொத்தை யார் யாரோ தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சொத்துக்குரியவர்கள் மட்டும் வயிற்றில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு படுக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இரணைமடுக் குளத்தினதும், குளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயக் குடும்பங்களினதும் பரிதாபகரமான நிதர்சனம். இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள்ளே அமைந் துள்ளபோதும் அதன் பயன்பாடும், நிர்வக நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றது.

குளத்தின் உருவாக்கம், அதற்கான காரணம் குறித்தெல்லாம் பேச நாம் விரும்பவில்லை. தற்போது குளத்தை அடிப்படையாக வைத்து நடாத்தப்படும் அரசியல் குறித்தும், காரசாரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாதம் குறித்துமே நாம் பேச விளைகின்றோம். இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள செய்திகள் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.இதனையே முன்னிறுத்திக்கொண்டே கிளிநொச்சி மக்களுக்கே போதாமலிருக்கும் நிலையில் யாழ்ப்பாண மக்களுக்கு எப்படி நீரைக்கொண்டு செல்லமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. நியாயமான கேள்விதான். யாரும் மறுக்கமுடியாத கேள்வியும் கூட. ஆனால் அதை பிரதேசவாதமாக யாரும் முன்னெடுக்கவேண்டாம். அறிவியல் ரீதியாக நடைமுறைச்சாத்தியமான வழிகளுக்கூடாக அதனை அணுகலாம். அது பற்றி விரிவாகவும் பார்க்கலாம்.இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிகளாகும்.

இறுதியுத்தத்தின் போது எறிகணைத் தாக்குதலினால் நீர் வெளியேற்றுப் பாதையின் கதவு ஒன்று சேதமடைந்திருந்தது. மற்றொன்று அணைக்கட்டுகள் நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் தளர்வடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த முறை பருவமழையின் போது 32அடி தண்ணீரை சேமிக்ககூடியதான நிலையிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த உள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்குள் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்க, நீர்வரத்தும், நீர்மட்டத்தின் உயர்வும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் குளத்தின் ஒரு புறத்தில் தற்போது இராணுவ பயன்பாட்டிலுள்ள விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை மற்றும் இராணுவத்தினர் அமைத்திருக்கும் தங்குமிடங்களுக்கும் நீரினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என இராணுவத்தலைமை அச்சங்கொண்டது.

இதன் தொடர்ச்சியாகவே குளத்தின் நீர் மட்டத்தை 5அடி தொடக்கம் 6அடி வரை குறைக்க வேண்டும் என இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். ஏனெனில் குறித்த இரணைமடு தளமே தற்போது வன்னிக்கான கட்டளை மையமாகவும் இருந்து வருகின்றது.

வன்னி முழுமையாக கைப்பற்றப்பட்டதும் ஜனாதிபதி தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்ததும் இதே இரணைமடு தளத்திலேயேயாகும்.இங்கு தங்கியுள்ள இராணுவ அதிகாரிகளது உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பொறுப்புவாய்ந்த சிவில் அதிகாரிகள் பெருமளவு நீரைத்திறந்து விட்டனர்;. அந்த நீர் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பல இடங்களில் தேங்கி நின்றிருந்தமை மக்கள் அனைவரும் அறிந்தவொரு விடயமே. இதனை அதிகாரத்திலுள்ள சிலர் பூசி மெழுக முற்பட்டாலும் அதுவே மாற்றமில்லாத உண்மையாகும். மேலும் இதற்கு மக்களிடம் சாட்சிகளும் நிறையவே இருப்பதை அந்த அதிகாரிகள் புரிந்து கொண்டால் சரி.

இன்று 4ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை நிலம் எரிந்து கருகிப் போயுள்ளதற்கும் அதனை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக கண்ணீரோடு நிற்பதற்கும் குளத்துநீர் திறந்துவிடப்பட்டமையே காரணமாகும். நாங்கள் நாய்களைப் போல் எங்கு அடிவிழுந்தாலும் பின்காலை தூக்குவதில்லை. வீழ்கின்ற எச்சில் துண்டங்களுக்காக பொய்களை விற்பவர்களுமில்லை. துப்பாக்கி முனை ஆட்சியில் வேலிக்கு ஓணான் சாட்சியாக அதிகாரிகளை அழைத்து வந்து பொய்ச் சாட்சியமளிக்க அச்சுறுத்துபவர்களுமில்லை.

நடந்தது இதுதான் இதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் சாட்சிகளும் இருக்கின்றது என்பதை அவர்கள் அனைவரும்; புரிந்து கொண்டால் சரி.இந்த விவகாரத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கலாம் இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கென சுமார் 8ஆயிரம் ஏக்கர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இரணைமடுக் குளத்திலிருந்த 28அடி நீரை வைத்துக் கொண்டுதான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட 8ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமானளவு வயல்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி கூடுதலாக விதைத்தவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களும், பதவி நிலைகளில் உள்ளவர்களுமாவர். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியின் அரசியல் வாதிகளது துணையுடனேயே இவர்களால் இவ்வாறு பயிரிட முடிந்தது. இவ்வாறு மேலதிகமாக விதைக்கப்பட்டுள்ளமை பற்றி தாங்கள் அறியவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர்.

எனினும் விவசாய அமைப்புக்களது கடுமையான எதிர்ப்புக்கள் காரணமாக அதுபற்றி விசாரிப்பதற்கு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஆளுந்தரப்பு அரசியல் வாதிகளதும், ஆளுந்தரப்புக்கு எடுபிடிகளாக இயங்கும் கட்சி அரசியல் வாதிகளதும் அழுத்தங்களே காரணமாகும். இதனைப் பயன்படுத்தி அதிகாரிகளும் உரிய நடவடிக்களை மேற்கொள்ளாது அனுமதியின்றி நெல் விதைத்தவர்களிடம் எதையாவது பெற்றுக்கொண்டு அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்களா, கிளிநொச்சியில் முக்கியமான பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒன்றரை நீர்ப்பங்கை வைத்துக் கொண்டு அதிகளவு நிலத்தில் விவசாயம் செய்திருக்கின்றார்.

அதனை அறிந்து கொண்ட கமக்கார அமைப்பு மேலதிக விதைப்பிற்கான தண்ணீரை வழங்க மறுத்தபோது அந்த அதிகாரி ஒரு தொலைபேசி அழைப்புத்தான் கொடுத்தாராம், அடுத்த சில மணிநேரத்தில் போதுமானளவு தண்ணீர் மேலதிகமாக விதைக்கப்பட்ட நிலத்திற்கு வழங்கப்பட்டது. குறித்த அதிபர் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த நீரை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை. இது ஒன்று மட்டுமல்ல இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அனுமதியின்றி நெற்செய்கையில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு கொள்வதுடன், அனுமதியுடன் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு குளத்துநீர் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாறாக அங்கு தங்கியிருந்து கட்டைப்பஞ்சாயத்து அரசியல் செய்யும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்குப் பயந்து அல்லது அவர்களது கைப்பொம்மையாக இருந்தவாறு அனுமதியின்றி நெல்விதைத்தவர்களுக்கு நீர் வழங்குவதுடன், அனுமதிபெற்று நெற் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு நீர் வழங்காது அவர்களது வயல்கள் அழிவடையவும் காரணமாக இருந்துள்ளனர்.

கடந்தசில தினங்களுக்கு முன்னர் நீர்பாசனத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நிர்ணயிக்கப்பட்ட ஏக்கருக்கும் அதிகமானளவு நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஊடகமொன்றிற்குத் தெரிவித்த கருத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிரச்சினையொன்று வருகின்றபோது மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டு தான் தப்பிக்க முயன்றிருக்கின்றார். மக்கள் பொறுப்பற்று நடந்திருக்கின்றார்கள் என கூறியிருக்கின்ற அந்த அதிகாரி அதற்காக தமது தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கூற மறந்துவிட்டார் .

அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குளறுபடிகள் காரணமாக ஒட்டுமொத்தமாக 4ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த நெல் அழிந்து போயிருக் கின்றது. ஏற்கனவே 2010 ம் ஆண்டு சிறுபோக விதைப்பிற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை மக்கள் இன்னமும் மீளச் செலுத்தாத நிலையில் வங்கி அதிகாரிகள் பொலிஸாருடன் விவசாயிகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலையில் இவ்வாண்டும் சிறுபோகம் எரிந்து நாசமாகிப் போனால் அந்த விவசாயிகளின் நிலை என்ன? விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்யுமா? அல்லது பயிர் அழிவுக்கான நஸ்ட ஈட்டை வழங்குமா? எதுவுமே கிடையாது. எனவே வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு மக்களை குற்றம் சாட்டுவதை அதிகாரிகள் முதலில் கைவிடவேண்டும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி இருந்தபோதும், இவ்வாறான வறட்சியும், அளவுக்கதிகமான மழைவீழ்ச்சியும் இருந்தது. அப்போதும் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில்தானிருந்தது. ஆனால் அப்போது குளத்துநீரை மக்கள் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் முகாமை செய்தார்கள். இப்போதுபோல் வயல் வரம்புவரை அரசியல் வந்து நிற்கவில்லை. எனவே ஒட்டுமொத்த அதிகாரிகளினது பாராமுகமும், அரசியல் அதிகார மமதையும் சேர்ந்து ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்திருப்பதே உண்மையான கதை.

இவ்வாறாக ஒரு புறத்தில் இரணைமடுக் குளத்திற்கு மேற்பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இரகசியமான இராணுவமயமாக்கல் திட்டங்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக குளத்தின் பெரும்பகுதி நீர் திறந்துவிடப்படுவதனாலும், மறுபுறத்தில் அரசியல் வாதிகளதும், அதிகாரிகளதும் பொறுப்பற்ற செயற்பாடுகளாலும் அப்பாவி விவசாயிகளது நெற்செய்கை பாதிக்கப்படும்போது அதனை மூடி மறைப்பதற்காக பிரதேச வாதத்தை தூண்டி தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

எங்கள் மக்களுக்கே நீரில்லை அதில் யாழ்ப்பாண மக்களுக்கு வேறு நீரைக் கொண்டு செல்ல வேண்டுமா? என சிலர் பிழைப்பு வாதத்திற்கு பிரதேசவாதத்தை கிளப்பிவிடுகின்றார்கள்.மக்கள் ஒருவிடயத்தை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ளவேண்டும், நாங்கள் இன்று இவ்வளவு தூரம் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு, அழிந்து இழிந்துபோயிருப்பதற்கு காரணம் எங்கள் மத்தியிலுள்ள சாதி, பிரதேசவாதம் போன்ற காரணங்களே.

இந்தப் பேய்களை நாங்கள் துரத்தும் வரையில் எங்களை அழிப்பதற்கு வேறுயாரும் தேவையில்லை. ஒரு கட்டத்தில் நாங்களாகவே அழிந்துபோவோம்.நாம் பிரச்சினைகளை சரியாகவும், யதார்த்தபூர்வமாகவும் அணுகவேண்டும். பிரச்சினைகளுக்கான காரணம் வேறு எங்கோ இருக்கின்றது. அதை நாங்கள் சரியாக புரிந்து கொண்டாகவேண்டும், குறிப்பாக பருவமழையின் போது மேலதிக நீரைத் திறந்துவிடும்படி இராணுவத்தினர் கேட்டதுங்கூட இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையில் ஒரு பிரச்சினையினை தோற்றுவிப்பதற்காக கூட இருக்கலாம். உண்மையில் இரணைமடு தமிழருக்கானதே.
http://www.tamilthai.com/newsite/?p=13736

Thursday, August 23, 2012

சிறிலங்காவை குறிவைத்து அக்னி ஏவுகணையை நிறுத்தியுள்ளது இந்தியா?

[ வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2012, 00:48 GMT ] [ தா.அருணாசலம் ]
அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க, இரத்மலானை, மற்றும் மத்தால விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல் மின்நிலையம். கரவலப்பிட்டிய- களனிதிஸ்ஸ மின்நிலையங்கள் உள்ளிட்ட பல கேந்திர நிலைகளை இலக்கு வைத்தே இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்த அக்னி ஏவுகணைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1000 தொடக்கம் 2000 கிலோ எடையுள்ள அணுவாயுதத்தை சுமந்து கொண்டு 1000 தொடக்கம் 8000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை விரிவாக்கப்பட்டுள்ளது.

அக்னி 5 ஏவுகணை மூலம் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கமுடியும்.

ஈரான், பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் வழியான சீனாவின் விநியோகப் பாதையை துண்டிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இரகசியமாக இணைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா விருத்தி செய்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
http://www.puthinappalakai.com/view.php?20120823106850

இந்திய - இலங்கை முறுகுநிலை மோசமடைவதற்கான அறிகுறி


essay
இந்தியா வாங்கவிருந்த காணி சீனாவுக்கு விற்கப்பட்டதின் எதிரொலி
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் காணித்துண்டு ஒன்றை வாங்குவதற்கு இந்தியா பேரம் பேசி முடித்திருந்த நிலையில் அது சீன இராணுவ நிறுவனத்துக்கு விற்கப்பட்டதால் இந்தியா பெரும் கடுப்படைந்துள்ளது. புதுடில்லியில் இலங்கை உயர் ஸ்தானிகர் வெளிநாட்டமைச்சுக்கு அழைக்கப்பட்டு ஆட்சேபம்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி விமரிசனத்திலிருந்து ஒரு பகுதி 
தொகுப்பு: கோகுலன்

இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையில் ஏற்பட்டுள்ள ஒருமுறுகல் விடயம் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம் பெற்ற இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தினவிழாவின் போது உரை நிகழ்த்துகையில் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கருத்து வெளியிட்டார்.

இலங்கை அரசுடன் எமக்கு பிரச்சினைகள் உண்டு. நாங்கள் நட்புரிமை கொண்ட அண்டை நாடுகள் என்ற முறையில் தீர்த்துக் கொள்ள முயன்று வருகிறோம் என்று உயர் ஸ்தானிகர் கூறினார். இந்திய சமூகத்தவர்கள், ராஜதந்திரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், இலங்கை பிரஜைகளான இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு ஊடகத்துறையினர் என்று பலரும் கூடியிருந்த நிகழ்வில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

முன்னரும் இப்படியான நிகழ்வுகளில் முன்னாள் இந்திய ஸ்தானிகர்கள் உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவை கடுமையானவையாகவும் சில சமயம் கருத்துச் செறிவுடையவையாகவும் இருந்ததுண்டு. ஆனால் காந்தா நாட்டின் சுதந்திர தின விழாவில் இந்தக் கருத்தை ராஜதந்திரமான முறையில் வெளியிட்டிருப்பதானது முன்னொரு போதும் நடைபெறாதது கவனத்துக்குரியதுமாகும்.

இந்திய ஸ்தானிகர் காந்தாவின் இந்தச் செய்தியானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசுக்கு மிகத் தெளிவாகவே உறைத்துள்ளது. அரசின் உயர்மட்ட அளவுக்கு அதன் பிரதிபலிப்புகள் சென்றுள்ளன. அதன் மீது ஆழமான பகுப்பாய்வு விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பற்றி என்னதான் வெளியில் நல்லவைகள் கூறப்பட்டாலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் புதிய மட்டத்திலான கீழ் நிலைக்குச் சரிந்துவிட்டன.

கடைசியாக ஏற்றப்பட்ட வைக்கோல் துண்டுதான் ஒட்டகத்தின் முதுகை முறித்தது என்று கூறப்படும் பழமொழிக்கு ஒப்பாகக் கொழும்பில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்காக இருந்த காணித்துண்டு ஒன்று இப்பொழுது சீனாவுக்கு வழங்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.

இது தொடர்பான இந்தியாவின் கடுமையான எதிர்ப்பு புதுடில்லியிலுள்ள எமது ஸ்தானிகர் பணிமனையில் மட்டுமன்றி கொழும்பிலும் வெளிநாட்டமைச்சிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

287 பேர்ச் காணித்துண்டு இப்பொழுது ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரியது. இது சொத்து அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமாகும்.

இது 162 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம் லீ ஹெட்ஜஸ் அன்ட் கொம்பனி லிமிட் நிறுவனத்தின் இணை நிறுவனமாக இருந்து வருகின்றது. புதுடில்லியிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சுக்குப் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம் அழைக்கப்பட்டு இதுபற்றிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு துண்டைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை வெளியுறவு அமைச்சு கால தாமதம் காட்டி வருவது தொடர்பாக இந்தியாவின் கடும் அதிருப்தி அவருக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இந்தியா எவ்வாளவு பாரதூரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது புதுடில்லியிலும் கொழும்பிலும் அந்த நாடு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருப்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

பல வாரங்களாக ஷோ வாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிர்வாக சபை அதிபர் எஸ்.றிச்சார்ட் வாமதேவனுடன் ஸ்தானிகர் காந்தா குறித்த காணி குறித்து பேச்சு நடத்தி வந்துள்ளார். டுப்ளிகேஷன் வீதி முன்பக்கமாக இந்திய கலாசார மண்டபம் ஒன்று கட்டுவதற்காக ஒரு துண்டு காணியைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தப் பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நோக்கத்தில் இந்தக் காணியை ஒரு பேர்ச் ஏழு மில்லியன் ரூபா வீதம் பெற்றுக் கொள்வதற்குப் பேச்சு வார்த்தைகள் முடிக்கப்பட்டிருந்ததாக இந்தியாவின் வாதமாகும்.

 இவ்வாறு இலங்கையில் வெளிநாட்டு தூதரகம் ஒன்று காணி வாங்குவதானால் வெளியுறவு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதனால் இந்திய ஸ்தானிகரம் வெளியுறவு அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. நடைமுறையிலுள்ள வழக்கமான செயற்பாடுதான் இது என்று ராஜதந்திரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக வெளியுறவு அமைச்சு மௌனமாக இருந்து வந்துள்ளது என்று இந்தியா கூறுகிறது. எதுவித பதிலும் கிடைக்கவில்லை. அதேசமயம் சீன நிறுவனமான  சைனா நேஷனல் ஏரோ ரெக்னொலொஜி இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கேப்பரஷேன் என்ற நிறுவனம் அதன் பிரதான பணிமனையை இந்தக் காணியில் கட்டிக் கொள்வதற்கு வெளியுறவு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

டுப்ளிகேஷன் வீதியை நோக்கியுள்ள காணியில் 60 பேர்ச்சஸ் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இது சீனா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்றாகும் இது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட போரின்போது இராணுவ மற்றும் தொடர்புடைய உதவிகளை இந்த நிறுவனம் வழங்கியிருந்தது.

ஆனால் இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வித்தியாசமான விளக்கதைக் கொடுத்துள்ளது. ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு பகுதியை விற்பதற்கு எடுக்கப்பட்ட முடிவானது முழுக்கவும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையாளர்களின் தீர்மானம் என்று பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 அதில் எந்த வகையிலும் அரசு பங்களிப்பு வகிக்கவில்லை. தனிப்பட்ட உரிமையாளர்களிடம் சீன நிறுவனம் அந்தக் காணியை வாங்கியிருப்பதால் அவர்கள் அதற்கு உரிமையாளராகிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால் இந்த விளக்கம் எதுவும் இந்திய கவலையைப் போக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா இன்னமும் கவலையிலேயே இருக்கிறது என்பதையே காந்தாவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியா கொழும்பிலும் புதுடில்லியிலுமாக ராஜதந்திர முறையில் இரு ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்திருப்பதன் பின் விளைவுகள் குறித்து அரசின் தலைவர்கள் கடந்த வாரம் முழுவதும் ஆலோசனைகள் நடத்தியிருந்தார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளைக் கையாளும் மூவர் குழு அங்கு செல்வதை தாமதப்படுத்துவதாகும்.

இந்தக் குழுவில் இருப்பவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியவர்களாவர். இவர்கள் மூவரும் அடுத்த மாதம் புதுடில்லிக்குச் செல்வதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அவர்களின் பயணம் தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகப் புதுடில்லியிலுள்ள இலங்கை ஸ்தானிகர், இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். நவம்பர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறவிருப்பதையொட்டி இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக இவர்களின் பயணம் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது உலக நாடுகள் தொடர்பான பருவகால ஆய்வுகள் நடைபெறவிருக்கின்றன.
இந்த ஆய்வுக் குழுவுக்கான உறுப்பு நாடுகளைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தன் விருப்பப்படி தெரிவு செய்து இருந்தார் என்பது தவறாகும்.

ஆய்வுக் குழுவுக்கான மூன்று உறுப்பு நாடுகளும் சீட்டிழுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றன. சபை இலங்கை தொடர்பாக நடத்தும் விவாதங்களை அவதானித்து அவர்கள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் என்பனவாகும். சபையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது இந்த அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் முறுகு நிலை அடைவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த ஒரு பேட்டியையும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் முதல் தடவையாக இந்தியா பற்றி ராஜபக்ஷ வாய்திறந்து குறை கூறியிருந்தார். அது இந்திய மத்திய அரசுக்கு ஒரு இறுக்கமான செய்தியை வழங்குவதாக இருந்தது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கி வந்திருக்குமானால் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானம் இலங்கைக்கு எதிராக வந்திருக்கமாட்டாது என்று அவர் கூறியிருந்தார். தீர்மான வாசகத்தை தணியச் செய்வதற்கு இந்தியா உதவி புரிந்துள்ளது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது தொடர்பான ரைம்ஸ் ஒப் இந்தியா கேள்விக்கு ஜனாதிபதி அளித்திருந்த பதில் வருமாறு:
அந்தத் தீர்மானத்திலிருந்து நாம் விலகிச் செல்வதுதான் இனி நல்லது. நல்லெண்ணங்களும் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவையே.
ஆனால், இந்தியா எம்முடன் இருந்திருக்குமானால் கால அவகாசம் வேண்டும் என்ற எமது கோரிக்கையை இந்தியா ஆதரித்திருக்குமானால் யாருக்குத் தெரியும் அப்படி ஒரு தீர்மானமே வந்திருக்காது. இந்தப் பிரதேசம் இந்தியாவை எதிர்நோக்கி நிற்கின்றது.

அண்டை நாடுகளுடன் தான் நடந்து கொள்ளும் முறை சரியா? இல்லையா? என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5148734623139749

Tuesday, August 21, 2012

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" - கொரட்டூரில் சீமான் முழக்கம்!


[Tuesday, 2012-08-21 11:20:05]

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,

http://www.youtube.com/watch?v=6mmwvp8lSmA&feature=player_embedded

Sunday, August 19, 2012

அடுத்து யாருக்கு படையலும் குளுத்தியும் வைக்கலாம்...



[Sunday, 2012-08-19 22:05:36]

ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது... எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான் (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள்.

எனவே அவர்களின் வாரிசுகளுக்கு நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அனுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின் கிடைப்பதை வைத்துக்கொண்டு நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று ஒருசாராரும் மற்றெரு சாரார் அமெரிக்கா பெரியபிரித்தானியா போன்ற வல்லரசுவுகள் பெரிய மனது பண்ணி எப்போதாவது விடுதலை பெற்றுத் தரும் போது நாம் இருகரம் நீட்டி வேண்டிக்கொண்டால் போதுமானது.

அது மட்டும் அவர்களுக்கு எதோ காரணத்தால் (என்ன காரணம் என்றும் அறுதியாக எவர்களுக்கு தெரியாது) எங்களின் போராட்டத்தை நசுக்கியதால் இனி போராட்டம் தமிழீழம் என்றெல்லாம் கதைப்பதோ அல்லது அதன் குறியீடுகளாக உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட சின்னங்கள் கொடிகள் எல்லாவற்றை பிடித்து அவர்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாவதோ இல்லாமல் அடிபெட்டிக்குள் வைத்து விட்டு வேண்டுமென்றால் இங்குள்ள (தமிழர்கள் மட்டுமே வரும்) கோயிலில் தாயகத்தில் உள்ள மக்களுக்காக (போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்காது பல்லின மக்களுக்கும் தெரியாத வகையில் தமிழ் இணைத்தளங்களில் மட்டும் படங்கள் தாரளமாக வரக்கூடிய வகையில்) சாந்தி பூசைகள் யாகங்கள் மற்றும் கூட்டுப்பிராத்தனை போன்றவற்றில் ஈடுபடுவது அவ்வல்லரசுகளுக்கு நல்ல படையல் வைப்பது போன்றது.

வல்லரசுகளை பகைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? நல்ல கேள்வி அதே நேரம் காலடியில் போய்நின்று பாதபூசை செய்து கொண்டிருப்போமேயானால் எங்களோடு கதைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் போகிறது அல்லவா. காலை நக்கிக்கொண்டிருப்பவர்களை யாராவது தட்டி எழுப்பி கதிரையில் இருத்தி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு தீர்த்து வைப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது. கொடுக்காவிட்டாலும் என்ன காலை நக்குவது என்ன குறையவா போகிறது?

ஒரு நாட்டுக்கும் பறந்து திரியாமல் ஒருவருடனும் தொலைபேசியில் அளவளவாத எங்கையே ஒரு உலகப்படத்தில் புள்ளி போல இருக்கும் நாட்டின் காட்டுக்குள் தனது மக்களும் அவர்களுக்கான போராட்டமும் என்று இருந்த எமது தேசிய தலைவனை காண ஆளுக்கு மேல் ஆள் என நாட்டுக்கு மேல் நாடு எனச் சொல்லப்பட்டவர்களும் அவர்களின் தூதுவர்களும் போய் சந்தித்தற்கு காரணம் என்ன?

மில்லியன் கணக்கில் அவர்களின் புலன்ஆய்வுத்துறைக்கு செலவழித்து எமது விடுதலை இயக்கத்தின் பலம் என்ன? பல்லாயிரக்கணக்கான வேறுவேறு நாடுகளில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் கூட அதிகம் இன்றி வாழும் ஈழத்தமிழ் மக்களை வாழ்க்கையில் ஒருதடவை கூட சந்தித்திராத மறைமுகமாக வாழும் ஒருவரின் பெயரை சொன்னதும் தெருவில் இறங்குகிறார்; பல லட்சம் பேர் ஒரு தொலைபேசி குறும் செய்தியில் கேள்வியின்றி அணிவகுக்கிறார்கள் அந்த கொடியை பார்த்துமே விடுதலை உணர்வும் தியாகமும் தன்மானமும் தூய்மை தன்னலமின்மை என்ன பல் உணர்ச்சிகளோடு தமிழன் என்ன ஒருமிக்கிறார்கள் என அதிசயம் இது எப்பிடி சாத்திமாகிறது.

படித்தவர்கள் படிக்காதவர்கள் பணத்தில் புரள்பவர்கள் ஒருநாள் கூலிக்கு வேலை செய்பவர்கள் தமிழ்ஈழத்தில் பிறந்தவர்கள் சிறீலங்காவில் கூட கால் பதிக்காத இங்கு பிறந்த அடுத்த தலைமுறை முதியவர்கள் இளைஞர்கள் ஏன் சிறுவர்கள் என எல்லோரும் இணைவதுவும் ஒரு கொடியின் கீழ் நிற்பதுவும் நடப்பதுவும் எப்பிடி சாத்தியமாகின்றது இந்த சிறிய பகுதி மக்களால் அதிசயத்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாத கொள்கைபற்றை பார்த்து பயந்தார்கள்.

விடுதலை அடையமுதலே இருக்கும் அரசியல் பொருளாதார இராணுவக்கட்டமைப்புகள் வெடிபொருள் கணிணி இலத்திரனியல் தொழில்பிரிவு போர்கருவி தொழிற்சாலை இராணுவ விஞ்ஞான கல்லூரி பரப்புரை பிரிவு பொறியியல் துறை விளையாட்டுத்துறை ஆங்கில கல்லூரி திரைப்படபுத்தக மொழிபெயர்ப்புத்துறை கல்வி மேம்பாட்டு கழகம் கலை பண்பாட்டு கழகம் சுகாதாரப்பபிரிவு சு10ழல் நல்லாட்சி ஆணையம் வனவள பாதுகாப்புப் பிரிவு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பொருண்மிய மதியுரைகம் காலநிலை அவதானிப்பு நிலையம் ஒளிக்கலைப்பிரிவு என ஜம்பத்தாறு வகையான பிரிவுகளால் எதிர்காலத்தை திடமாக திட்டமிட்டு நடத்தியதோடு போரும் புரித்தார்கள்.

அவர்கள் கதிரைக்கு ஆசையுள்ளவர்களாகவோ மதிநுட்பம் இல்லாது தன்னிறைவை நோக்கிய தூர நோக்கில்லாதவர்களாக இருந்திருந்தால் நாடுகடந்த அரசை வளர்த்தெடுத்தது போல அவர்களையும் வளர்த்தெடுத்து தாங்கள் சொல்லும் போது வாலாட்டுவதற்கெனவும் மக்கள்சக்தியை இரண்டாக உடைப்பதற்கெனவும் வைத்திருந்திருப்பார்கள். கருணாவை கொண்டு உள்ளாட்டிலும் வெளிநாட்டில் கேபி போன்றவர்களிலும் கண்வைத்தார்கள். வெளிநாட்டு அரசாங்களுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இல்லாதபோதும் எமது உறுதியையும் மக்கள் பலத்தையும் ஒருகுறியீடு ஓருகொடி என அவர்களைக்போல பகுத்தறிவுள்ள தேசியபற்றுள்ள இனமாக உள்ளதைப் பார்த்து பயந்தார்கள். இதை அழித்து விட்டு கொஞ்சம் அறிவு குறைந்த பதவி பட்டம் என ஆசைகள் உள்ள தமக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒன்றை கொண்டுவர எண்ணினார்கள்.

சில பயணங்களுக்கு ஒருவழி பாதை (one way) மட்டுதான். அதில் பயணம் செய்தால் சேரும் இடம் வரும் வரை பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும் இடையில் திரும்பமுடியாது ஏனெனில் அது போவதற்கு மட்டும் உரிய பாதை. விடுதலையை நோக்கிய பாதையும் அப்படித்தான். கிணறு தோண்டும் போது தண்ணி வருவது நிச்சயம் ஆனால் வருவதற்கு ஒரு அடிக்கு முன்னும் நாம் களைத்துப்போய் நிற்பாட்டி விடலாம். ஆனால் எம்மை தோண்டுவதற்கு உந்துசந்தியாக இருக்கும் சிங்கள பேரினவாதம் எம்மை நிற்கவிடாது. ஓன்றுமே இல்லாத வெளி நாட்டில் பயங்கரவாதம் என்று பயப்படுகிறார் உன்னுடைய மனைவியை அடுத்தவன் நடந்தை கெட்டவள் என்று சொன்னால் உடனே நீங்கள் தள்ளிவைத்து விடுவீர்களா? சொந்த புத்தி வேண்டாம்.

அவ்வளவு அடக்கமுறைக்குள்ளும் அங்குள்ள மக்கள் இந்த வெளிநாட்டில் இருக்கும் வியாக்கியானம் கதைப்பவர்களின் தங்கியிருக்காது அங்கு நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறைக்கெதிராக உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுக்கிறார்கள். அடக்குமுறையால் போராட்டம் வந்ததா? போராட்டம் இருப்பதால் அடக்கு முறை வந்ததா? சீறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாமரம் வீசுபவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் சிங்கள மக்களும் கூட தலைமுறையை போருக்கு அடகு வைக்காமல் சிந்திக்கும் நேரமிது.

வாழ்க சிங்கள பேரின அடக்கு வாதம்! வளர்க தமிழ் ஈழம்!!

ஒரு பேப்பருக்காக - சுகி
http://seithy.com/breifNews.php?newsID=65453&category=TamilNews&language=tamil

‘இசோ’வாகிய ‘டெசோ’… ‘சோ’வாக மாறும்:


 இதயச்சந்திரன்

டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது.

‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார்.

‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தபோது, சுப வீரபாண்டியனும், கனிமொழியும் அதனை எதிர்த்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய மத்திய அரசு, அரசியல் தீர்வாக முன்மொழியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கும்படி கூறினால், தி.மு.க. அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது தான்.

காங்கிரஸ்-தி.மு.க. உறவின் அடிமடியில் கைவைக்கும் விடயமல்லவா அது.

நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், பொதுவாகப் பார்க்கும்போது, கடுமையானவை போன்று காட்சியளிக்கலாம். இருப்பினும், போர்க்குற்ற விசாரணை, பொதுசன வாக்கெடுப்பு என்கிற விடயங்களை நடைமுறைப்படுத்த, இந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு என்ன வேலைத் திட்டத்தை வைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

தீர்மானங்களை நிறைவேற்றுவது அரசியல் சடங்காக நிகழும் இக்காலகட்டத்தில், இதற்காகப் போராட முன்வருபவர்கள் குறைந்தளவிலே காணப்படுகின்றனர்.

அரசியல் கோஷங்கள் ஊடாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றப் போடும் நாடகங்களாக இவை மாறிவிட்டன.

இந்திய முதலாளித்துவ ‘கார்ப்பரேட்’ வடிவமெடுத்துள்ள கருணாநிதியின் குடும்ப உயர்குழாம், இழந்துபோன அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கு, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அவலப்படும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முனைகிறது.

அதேவேளை இந்திய மத்திய அரசின் அதிகார மையத்தோடு முரண்பாடுகளை ஏற்படுத்தாதவாறு, மிகக் கவனமாக தமது காய்களை நகர்த்துகிறார் கருணாநிதி.

இவை தவிர, கருணாநிதியா, இராஜபக்சேவா, தமிழ் மக்களின் எதிரி? என்கிற திராவிடக் கழகத் தலைவர் வீரமணியின் அனல்பறக்கும் உரையாடல்களும் அம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் நண்பராக இருந்து, எதிரியாக மாறியவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

நினைவில் இல்லாத கனவுகள் போல் ஆகிவிட்டது, கருணாநிதி குறித்தான தமிழ் மக்களின் பார்வை என்பது தான் நிஐமானது.

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலிற்கு முன்பாக, இன்னும் பல ‘இசோ’ மாநாடுகள் வரும்.

‘கார்ப்பரேட்’ சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்தாலும், மத்திய ஆட்சியிலாவது தமது பங்கு இருக்க வேண்டுமென கருணாநிதி குடும்பம் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

ஆகவே, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அதிகளவு எண்ணிக்கை தி.மு.க.விற்கு கிடைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எதிர்பார்ப்பு.

அடுத்த தேர்தலின் போது, வட மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியடையுமாயின், மாற்றுத் தெரிவான பாரதீய ஐனதா கட்சியோடு கூட்டுச் சேர முயற்சிப்பார்கள்.

ஏற்கனவே இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டவர்தான் கருணாநிதி.

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின், காங்கிரசோடு சேராமல், ஏனைய சிறிய கட்சிகளோடு இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அப்போது தமது சொந்த வாக்கு வங்கிலேயே தி.மு.க. தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை முன்கூட்டியே உணர்ந்துள்ள, தேர்தல் வியூகம் அமைப்பதில் கில்லாடியான கருணாநிதி, டெசோ ஊடாக தனது முதல் நகர்வினை மேற்கொண்டுள்ளார்.

தமது அரசியல் எதிரியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தாலும், 2009க்குப் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை இரண்டாவது எதிர்நிலையில் வைத்துப் பார்க்கின்றது தி.மு.க.

கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களுக்குச் சென்று, அதற்கெதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, அதன் படுமோசமான பின்னடைவிற்குக் காரணகர்த்தாவாக விளங்கினார் சீமான்.

தற்போது சீமானின் பார்வை கருணாநிதியின் பக்கம் திரும்பியுள்ளது.

இவைதவிர, ‘பெரியார்’ வழிகாட்டி, ‘பிரபாகரன்’ எனது தலைவன் என்கிற சீமானின் நிலைப்பாடு, ஈழ ஆதரவு திராவிடக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மத்தியில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தோடு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பிற்கு உதவிபுரிந்த காங்கிரசையும், அதற்கு ஆதரவளித்த கருணாநிதியின் தி.மு.க.வையும் தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிவது தான் தனது முதன்மையான தேர்தல் அரசியல் வேலைத் திட்டமென சீமான் கூறுகின்றார்.

ஆகவே, கருணாநிதியின் தேர்தல் வியூகத்தின் முதன்மைத் தெரிவாக, ஈழ ஆதரவுப் போராட்டங்களினூடாக இளைஞர்களைப் பெருமளவில் திரட்டும் சீமான் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.
ஈழ ஆதரவு நிலைப்பாட்டின் மூலம் அதனை உடைக்கலாமென்று மேற்கொள்ளப்படும் நகர்வு தான் டெசோ மாநாடு.

அதேவேளை, இம்மாநாடு, சர்வதேச அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விளக்கங்கள் எல்லாம் பொருத்தமானதல்ல.

கருணாநிதியின் அடுத்தகட்ட நகர்வு, தமிழகத்தை விட்டு விரிந்து செல்லப்போவதில்லை.

அவ்வாறு நகர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமேன விரும்புவொர், கருணாநிதியின் பலவீனமான அரசியல் நிலையையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர் போடும் ‘மனோகரா’ நாடகங்களையும் புரிந்து கொள்ளவில்லை என்று நம்பலாம்.

முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இணைந்து ஈழ ஆதரவு அரசியல் மையமொன்றினை உருவாக்க வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள்.

ஆயினும், தமிழக அடித்தட்டு மக்களின் போராட்டங்களையும், ஈழ மக்களின் விடுதலையையும், இணைத்து செயற்படும் அமைப்புகளின் ஒன்றியமே பலமாக இருக்கும்
http://www.puthinamnews.com/?p=34483

Saturday, August 18, 2012

தமிழீழ விடுதலைப் போர் அடைந்த இடைக்காலப் பின்னடைவு.!


தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான்.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.
அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது.
இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம் பென்ரகன் மீது மோதிக் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தியது. நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை நோக்கிப் பறந்தபோது ஒரு வனப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியது.
இந்த நான்கு விமானங்களும் சரியாக 102 நிமிடங்களில் 3000த்திற்கும் கூடுதலான உயிர்களைக் குடித்தன. அடுத்த மாதத்தோடு இந்தப் பேரழிவுச் சம்பவம் நடந்து பதினொரு ஆண்டுகள் முடிகின்றன. கி.மு.கி.பி. என்பதைப் போல் காலத்தை அளவிடும் எல்லைக் கோடாக 9 -11 மனித வரலாற்றில் பதிவாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் தாக்கம் உணரப்படுகிறது. பாதுகாப்பு ஒழுங்குகள் இறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலின் போது அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் டிபிள்யூ புஷ் (George W.Bush) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War Against Terror) என்ற கோசத்தை எழுப்பினார்.
பயங்கரவாதத்தை நசுக்கும் பொறுப்பை உலக நாடுகள் அனைத்தும் வகிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை அமெரிக்கா ஜநாவில் உலக நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியது. அத்தோடு ஈராக் ஆப்கானிஸ்தான். ஆகிய நாடுகளுக்கு எதிரான போரையும் அமெரிக்க அரசு நேற்ரோ (Nato) நாடுகளின் உதவியோடு முன்னெடுத்தது.
மேற்கூறிய இரு நாடுகளுக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது. இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசியல் நிபுணர்கள் ‘றெஷீம் சேஞ்ச்’ (Regime Change) என்று அழைக்கிறார்கள். பயங்கரவாதத்திற்குப் பரிகாரமாக ஆட்சி மாற்றம் என்று பொருள்படும்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் மிக முக்கியமான தாக்கத்தை தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்திய அமைப்புக்கள் உணர்கின்றன. முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகப் பெருமளவு உலக நாடுகளால் பிரகடனஞ் செய்யப்பட்டது. அதே நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்தன.
புலிகள் அமைப்பிற்கு உதவுதல், நிதி வழங்கல், சார்பாகப் பேசுதல் போன்றவை பாரதூரமான தண்டனைக்குரிய குற்றங்களாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமைவாக இயற்றப்பட்ட சட்டங்கள் கூறித் தண்டித்தன. இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உலக நாடுகள் பார்க்க மறுத்துவிட்டன.
நீண்ட தூரம் பறக்கக் கூடிய சக்தி வாய்ந்த சிலின் (Zlin) ரக செக் தயாரிப்பு தாக்குதல் விமானங்களைத் தமது விமானப் படையில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உலக நாடுகளின் கண்கள் திரும்பின. விமானப்படை வைத்திருந்த உலகின் ஒரேயொரு விடுதலை அமைப்பாகப் புலிகள் இடம்பெற்றனர்.
புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்த சிங்களப் பேரினவாத அரசிற்கு உதவ 40 வரையான உலக நாடுகள் முன்வந்தன. சலுகை விலையில் அந்த நாடுகள் இலங்கை அரசிற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்தன. ஆளணி உதவிகளைச் செய்தன. தமக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுகூடி அரசுக்கு உதவின.
எதிரும் புதிருமாக நின்ற இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தமிழீழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கக் கூடாது என்பதில் ஒற்றைக் கருத்து கொண்டிருந்தன. சமச்சீரற்ற போரில் விடுதலை புலிகள் இறுதி வரை தாக்குப் பிடித்தனர். தீராப் பகை கொண்டிருந்த நாடுகளை ஒன்றிணைத்த சிறப்பு புலிகளுக்கு உண்டு. இதற்காகவே அவர்களுக்குப் பரிசு வழங்க வேண்டும்.
இப்படி ஒன்று சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியான உள்நோக்கங்கள் இருந்தன. 21ம் நூற்றாண்டின் அதியுச்ச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பகுதியாக இந்து மாகடல் இடம் பெறுகிறது. உலகின் மொத்த எண்ணைத் தேவையின் 25 விழுக்காடு வளைகுடா நாடுகளில் இருந்து கிழக்கு நோக்கி இந்து மாகடல் ஊடாகச் செல்கின்றன.
மிக முக்கியமான ஆலைத் தயாரிப்புக்கள் இந்து மாகடல் ஊடாக மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. இந்து மாகடலின் மையப் பகுதியில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இந்து மாகடலில் ஆதிக்கம் செய்யத் திட்டமிடும் வல்லரசு கட்டாயமாக இலங்கைத் தீவில் கால்பதிப்பதோடு திருகோணமலைத் துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
1980 களில் தொடங்கி இன்றுவரை இலங்கைத் தீவில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் இந்து மாகடலின் முக்கிய கடல்,வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா, சீனா இந்தியா நாடுகள் இடையே ஆதிக்கப் போட்டி நடக்கிறது.
நான்காம் ஈழப் போர் 2006 ய+லை 26ம் நாள் தொடங்கியது. இலங்கையில் ஆழமாகக் காலூன்றிய சீனா, இராணுவ, பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தது. சிங்கள அரசுக்கு உதவுவது மூலம் சீனாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நப்பாசையில் இந்திய உதவிகள் குவிந்தன.
இலங்கையில் இடம் பிடித்தால் இந்தியாவின் தென் மாநிலங்கள் மீது தேவைப்படும் போது தாக்குதல் நடத்தலாம் என்ற திட்டத்துடன் பாக்கிஸ்தான் இலங்கை அரசின் அணியில் இணைந்தது. பாக்கிஸ்தான் விமானிகள் இலங்கை விமானப்படையின் கிபீர், மிக் விமானங்களில் ஓட்டியாக அமர்ந்து தமிழீழ இலக்குகளைத் தாக்கினர்.
ஏற்கனவே பூமத்திய ரேகைக்குத் தெற்கே இந்து மாகடலின் மத்திய பகுதியில் (Central Indian ocean) டீகோ கார்சியா தீவில் (Diego Garcia) அமெரிக்கா பாரிய குண்டு வீச்சு விமானங்கள் அடங்கிய இராணுவ தளத்தை அமைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் போhக் களங்களில் ஈடுபட்ட அமெரிக்காவால் நேரடியாக இலங்கைப் போரில் பங்கு பற்ற முடியவில்லை. 1987ல் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டது போல் இறுதிப் புலி இருக்கும் வரை அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போர் நடக்கும் என்ற அச்சத்தில் சிங்கள அரசிற்கு உதவுவது மூலம் புலிகளை அழிக்க முடியும் என்று அது திட்டமிட்டது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ருஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முனைப்பாகச் செயற்பட்டன. எத்தனை அப்பாவிகளை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவை உதவிகளை வழங்கின. வன்னியில் மனிதப் படுகொலை நடந்த போது உலக நாடுகளும் ஜநாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிறி லங்காவின் போர் குற்றங்களில் ஜநாவுக்கும் பங்கு உண்டு. பல்வேறு தருணங்களில் அது போர் குற்றங்களுக்கு இடமளிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளது. 2008 செப்ரம்பரில் ஜநா தனது வெளிநாட்டுப் பணியாளர்களை வன்னியில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது. இது மனிதப் பேரழிவுக்கு இடமளித்தது.
தமிழீழத்தில் நடந்தது தாய் மண்ணிற்கான போராட்டம். உலக அரங்கிலே தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டம் நடக்கிறது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழீழத்திற்கான இறுதிப் போர் தொடங்கிவிட்டது. தமிழகத்திலும் அது அரங்கேறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீழ்ச்சி என்று சொல்வதை தமிழ் உணர்வு உள்ள ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் பேச்சிலும் சிந்தனையிலும் ஈழப் போராட்டம் உயிர் மூச்சாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழீழம் என்ற உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. அதனால் தடங்கல்களை எதிர்கொள்ள முடியும். காலப் போக்கில்  தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்பட்டிருப்பது பின்னடைவே தவிரத் தோல்வி அல்ல. “ஒரு விடுதலைப் போரட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது. பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கின்றது.” என்று தேசியத் தலைவர் கூறியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டங்களை கொண்டது ஆபிரிக்க கண்டம். தெற்கு ஆபிரிக்காவில் வெள்ளை நிற வெறி அரசிற்கு எதிரான கறுப்பின மக்களின் போர் பல தசாப்தங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1954ல் தொடங்கிய ஆயுதப் போர் 1962ல் வெற்றிகரமாக முடிவுற்றது.
தெற்கு சூடான் மக்கள் முதலாவதாக ஜனநாயக முறையில் விடுதலைப் போர் நடத்தினார்கள். பிறகு ஆயுதம் தூக்கினார்கள். 25 வருட காலம் விடுதலைப் போராட்டம் வலிமையாக பல இழப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமாகிவிட்டது.
தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது. தளராத மனதுடன் சர்வதேச அரங்கில் ராஜதந்திர முயற்சிகளை நகர்த்தி நாம் விடுதலை பெற முடியும்.