Thursday, August 23, 2012

சிறிலங்காவை குறிவைத்து அக்னி ஏவுகணையை நிறுத்தியுள்ளது இந்தியா?

[ வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2012, 00:48 GMT ] [ தா.அருணாசலம் ]
அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க, இரத்மலானை, மற்றும் மத்தால விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல் மின்நிலையம். கரவலப்பிட்டிய- களனிதிஸ்ஸ மின்நிலையங்கள் உள்ளிட்ட பல கேந்திர நிலைகளை இலக்கு வைத்தே இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்த அக்னி ஏவுகணைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1000 தொடக்கம் 2000 கிலோ எடையுள்ள அணுவாயுதத்தை சுமந்து கொண்டு 1000 தொடக்கம் 8000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை விரிவாக்கப்பட்டுள்ளது.

அக்னி 5 ஏவுகணை மூலம் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கமுடியும்.

ஈரான், பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் வழியான சீனாவின் விநியோகப் பாதையை துண்டிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இரகசியமாக இணைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா விருத்தி செய்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
http://www.puthinappalakai.com/view.php?20120823106850

0 Comments: