Friday, February 27, 2009

வன்னி மக்களுக்கு மனித நேயம் கிட்டுமா?

இலங்கை அரசாங்கம் அந்த நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளியிடவில்லைஎன்று அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டிருக்கிறது. கவலையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் தலைவரும் ஜனநாயகக் கட்சியை ஆளும் கட்சியை சேர்ந்தவருமான செனட்டர் பொப் கசே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகச் செய்திகள் வெளிவந் துள்ளன.

இலங்கையில் அரசியல் உடன்பாடு ஒன்று ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் போலத் தென்படவில்லை. அதே வேளை, விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடான சக்திகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஆர்வம் காட்டவில்லை; தமிழ் மக்களுக்கு நம்பகத் தன்மை மிகுந்த மாற்றீடு ஒன்று முன்ø வக்கப்படவும் இல்லை என்றவாறு செனட்டர் பொப் கசே கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கள் பூடகமாகவும், உள் ளார்ந்தம் பொதிந்ததாகவும் இருப்பதை அவதானிக் கலாம். அவரது கருத்திலிருந்து முக்கிய அம்சங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

ஒன்று: இலங்கையின் இப்போதைய பிணக்கில் அரசாங்கம் தான் நினைத்ததையே செய்யப்போகிறது. எந்த வெளிநாட்டினதும் ஆலோசனையையோ அன்றி அழுத்தத்தையோ பொருட்படுத்தமாட்டாது. தான் வகுத்து வைத்திருக்கும் அரசியல் அட்டவணைப் பிரகாரமும் அதனை அடியொற்றிய இராணுவ அட்ட வணைப் பிரகாரமுமே, நாட்டுப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு முடிவு செய்துள்ளது. இது விடயத்தில் எவ ராலும் அமெரிக்கா போன்ற பலம் மிகுந்த நாட்டாலும் கூட தனது அட்டவணையில் திருத்தமோ அன்றி மாற் றமோ செய்ய இடம்கொடுக் கமாட்டாது என்பது தெளி வாக்கப்பட்டுள்ளது.

இரண்டு: இலங்கை தனக்கென இறையாண்மை கொண்டிருக்கும் நாடு என்பதனால் அதனைத் தட்டிக் கேட்கும் நிலையில் அமெரிக்காகூட இல்லை. ஆகவே சர்வதேசங்கள் வன்னியில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தவோ, அங்கு தமிழ்ப் பொதுமக்களுக்கு உண் டாகும் அழிவுகளையும் அவலங்களையும் நிறுத்தவோ வலிமை உள்ளனவா என்ற கேள்வியே மேலெழுந்து நிற்கிறது.

புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்கியோ அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தோ அரசு ஒருபோதும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்ல மாட்டாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா இடித்துக் கூறியதை ‹ளுரைத்தமையை ஒருவகை யில் மெய்ப்பிப்பதாக அமெரிக்க ஆளுங்கட்சி செனட்டர் பொப் கசேயின் கூற்று கவலை ஒப்புவிக்கிறது எனக் கொள்ளலாம்.

இலங்கை நிலைவரத்தை இடர்கால அடிப்படையில் அணுகவேண்டும். தனது பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு என்று கொழும் பில் முன்னர் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த ஜெவ்ரி லன்செட் கூறியிருப்பது இந்நாட்டு அரசாங்கத் தின் காதில் விழுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியதே.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், சிறுபான்மை சமூகத்தினரின் உரிமை களைப் பறிக்கும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறி யிருப் பதும் இந்தத் தருணத்தில் கவனத்தை ஈர்க்கிறது.

ஸ்ரீலங்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கென பிரிட்டிஷ் பிரதமர் நியமித்த சிறப்புப் பிரதிநிதியையே நிராகரித்துவிட்டது இலங்கை அரசாங்கம். அவ்வாறி ருக்கையில் அந்த நாடோ அல்லது அந்த நாட்டின் அமைச்சரோ சுட்டிக்காட்டும் கருத்தை கொழும்பு அரசு காதில் போடுமா?

வன்னியில் முல்லைத்தீவில் நாளாந்தம் தமிழ்மக் கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துகொண்டிருக் கிறார்கள். பெரும் சுகாதார நெருக்கடிகளை எதிர்நோக் குகின்றார்கள். மோதல் நடைபெறும் பகுதிகளில் சுகா தார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. இவை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இந்தப் பெரும் மனிதாபிமான அவலத்தையாவது அரசு கண்கொண்டு பார்க்குமா, அதனைத் தீர்ப்பதில் நாட்டம் கொள்ளுமா என்பதும் கேள்விக்குரியதே.
நாளாந்தம் நடைபெறும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் அவதியுறும் மக்களின் நிலை நினைத் துப் பார்க்கவே பயங்கரமானது, பரிதாபகரமானது என்று செய்தி ஏஜன்சிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

ஷெல்கள் விழும் பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரேயொரு தறப்பாள் கூடாரத்தில் கடற்கரையிலோ அல்லது நெல் வயலிலோ தங்குகிறார் கள். அதனால் சுகாதாரக் கேடுகள் தொற்றுநோய்கள் ஏற் படும் போராபத்து உருவாகவுள்ளதாகவும் அவை சுட் டிக்காட்டுகின்றன.

இத்தகைய ஒரு ‹ழ்நிலையிலேனும் மனிதநேயம் பேணுமாறு இலங்கை அரசுக்கு வெளிநாடுகளாலும், சர்வதேச நிறுவனங்களாலும் இடித்துக்கூறுவதற்கு இயலாது என்ற நிலைமையே உருவாகியிருக்கிறது!

மனிதனின் ஆகக்கூடிய உச்ச மதிப்புள்ளது அவனின் உயிரே. அதனைப் பேணுவதற்கு அத்தியாவசிய வைத் திய, சுகாதாரத் தேவைகளைச் செய்வதில் நாட்டம் காட்டா மல் அரசு மேற்கொண்டிருக்கும் வன்னி மீதான "மனிதா பிமான நடவடிக்கை" எந்தவகையில் அர்த்த முடையது....?

Uthayan

Thursday, February 26, 2009

சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூறும் கடமை இலங்கைக்கு உரியது

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய உள்நாட்டு யுத்தத்தில் எழுந்துள்ள மனிதப் பேரவல நிலையை அடுத்து, சர்வதேச உலகின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச சமூகத்தின் முக்கிய அங்கத்துவத் தரப்புகள் ஒவ்வொன்றும் இலங்கை விவகாரத்தை ஒட்டிப் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து முன்மொழிந்து வருகின்றன.
ஆனால், மோதலில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அந்தக் கருத்துக்களையும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களையும் கவனத்தில் கொள்வதாகவே தெரியவில்லை.

இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மோதல்களை இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட இரு தரப்புகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டியுள்ளார்.
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான நம்பகத்தன்மை மிக்க நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியிருக்கின்றது இந்தியா.

இதேபோன்று, இலங்கையில் எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் அரசையும் விடுதலைப் புலிகளையும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளது.

இதேவேளை, மோதலில் சிக்கியுள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாகக் கோரியிருக் கின்றனர்.

இப்படி சர்வதேச சமூகத்தின் பல தரப்புகளினாலும் இலங்கை நிலைவரத்தை ஒட்டிப் பல்வேறு கோரிக்கைகள் வரிசையாக முன்மொழியப்படுகின்றன.

புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிடவேண்டும், ஆயுதங்களைக் கீழே வைத்து நிபந்தனையின்றி சரண டைந்து, இலங்கை அரசின் மன்னிப்பு வழங்கும் திட்டத்தைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், வன்முறை வழியைநிரந் தரமாகக் கைவிடுவதாகப் புலிகள் அறிவிக்க வேண்டும், தம்மால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களைப் புலிகள் விடுவிக்க வேண்டும், இடம் பெயர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும், அமைதித் தீர்வுக்கான பேச்சுகளை ஆரம்பித்து அதற்கான திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளும் மேற்படி சர்வதேசத் தரப்புகளால் முன் வைக்கப்படுகின்றன.
எனினும், அவை முன்மொழியும் கோரிக்கைகள் அனைத்திலும் இத்தகைய விடயங்கள் தவிர பொதுவானதாக ஒரே அம்சம் பொதிந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, இலங்கையில் போரில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இரண்டும் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் அல்லது யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும்.

ஆனால் சர்வதேச சமூகத்தின் இக்கோரிக்கையைப் போரில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளில் ஒன்று மட்டும் பற்றி நிற்க விரும்புகையில், மற்றையது அதனை எட்டி உதைத்து நிராகரிக்க எத்தனிக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று யுத்த நிறுத்தம் ஒன்றைச் செய்வதற்குத் தமது அமைப்புத் தயார் எனப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவித்துள்ளார்.

ஆனால், புலிகளின் அந்த யுத்தநிறுத்த அழைப்பை, இலங்கை அரசு உடனடியாகவே அடியோடு நிராகரித்து விட்டது.

மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் புலிகளுடன் எந்தவிதமான உடன்பாடும் செய்ய அரசு தயாரில்லை என்றும், யுத்தத்தின் மூலம் புலிகளை அடியோடு இல்லா தொழித்த பின்னரே மறுவேலை என்பதே அரசின் ஒரே இலக்கு என்றும் இலங்கையின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ இதற்கும் சற்று மேலேபோய் யுத்தநிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு எந்த நாடும் அழுத்தம் தரவே கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். இது விடயத்தில், சர்வதேசத் தரப்புகளின் எந்த அழுத்தத்துக்கும் அரசு அடி பணிந்து யுத்த நிறுத்தத்துக்கு இணங்காது என்றும் உறுதிபட அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஆக, "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா" என் பது போல யுத்த மூர்க்கத்தில் போர் வெறித் தீவிரத்தில் நிற்கும் கொழும்பு அரசின் கண்களைப் போரியல் வெற்றி மமதையும், பேரினவாதச் சிந்தனைப் போக்கும் மறைத்து நிற்பதால் அது இந்தப் போர் வெறிமூர்க்கத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்பது தெளிவு.

அதனால் இவ்விடயத்தில் சர்வதேசத் தரப்பின் கோரிக் கைகள், வேண்டுகோள்கள், ஆலோசனைகள் என்பன ஆட்சிப்பீடத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டு, புறம் ஒதுக்கப்படுகின்றன.
"கெடுகுடி சொற் கேளாது!" என்பார்கள். அதைத்தான் பின்பற்றுகின்றது போலும் இலங்கை அரசு.

இலங்கை அரசைப் பொறுத்தவரை புலிகளின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அந்த அமைப்பு அடியோடு அழிக்கப்பட்டுவிடும் எனக் கொழும்பில் பாதுகாப்புத் தரப்பினரும் அரசுத் தலைவர்களும் சூளுரைத்து வருகின்றனர்.
அவர்களின் கணக்குப்படியும் சில சர்வதேச தரப்புகளின் கருத்துப்படியும் புலிகள் விரைவில் அழிந்து போகும் தரப்பு என்பதால், சர்வதேச சமூகத்துக்குப் பதிலும் பொறுப்பும் கூறும் கடமை அவர்களுக்கு இல்லை எனலாம். அவர்கள் தொடர்ந்து நீடித்தால் அல்லவா அவற்றை அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்........!

ஆனால், தன்னை இறைமையுள்ள தேசம் எனக் கூறும் இலங்கையின் அரசுத் தரப்போ நின்று, நிலைத்து, நீடிக்கப் போகின்ற ஆட்சிப்பீடம்.
அதனால் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசுதான் சர்வதேச தரப்புக்குப் பதிலும், பொறுப்பும் கூறக்கடமைப்பட்டுள்ளது.

இதை இலங்கை அரசுத் தலைமையும், அத்தலைமையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் சர்வதேசத் தரப்புகளும் ஒரு தடவை கவனத்தில் எடுப்பது நல்லது.

thanks
Uthayan

Wednesday, February 25, 2009

அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு

இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார்.
இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசு தான் வெற்றி பெறும் நிலை யில் உள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள தால், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனோ நிலையில் ஐ.நாவோ அதன் செயலாளர் நாயகமோ இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இது தான் இன்றைய இலங்கை நிலைமை. ஓர் இனத் தின் உரிமைக் கோரிக்கைக்கான ஆயுதப் புரட்சி அல்லது கிளர்ச்சி இராணுவ ரீதியிலேயே அடக்கப்படக்கூடிய வாய்ப்பும், சூழ்நிலையும் தென்படும்போது, அடங்கி விடப்போகும் அத்தரப்புக்கு, நியாயம் பற்றிப் பேசி, உயிர் வாயுவை ஏன் ஊட்டுவான் என்ற சிந்தனையே இப் போது சர்வதேச மட்டத்தில் மேலோங்கி நிற்கின்றது.
1994 1995 இலும், பின்னர் 2001 2006 இலும் இடம் பெற்ற இலங்கை அமைதிப் பேச்சுகளின் போது விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கை இராணுவத்துக்கு சவால் விடக்கூடிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கியது.
அதனால், இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரையுமே ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பேச்சு மேசைக்கு வந்து, அமைதித்தீர்வு காணுங்கள் என்று சர்வதேசம் வற்புறுத்தியது.
ஆனால் இப்போதோ இராணுவ வலுச் சமநிலையில் மட்டுமல்லாமல், அதையடுத்து சர்வதேச நிலைப்பாட் டிலும் பெரிய மாற்றம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் றொபின்ஸன் குறிப்பிடுகின் றமை போல, விடுதலைப் புலிகளை நிரந்தரமாக அடக்கி இலங்கை அரசு வெற்றி கொண்டுவிடும் இராணுவ மேலாதிக்கத்தை நிரந்தரமாக நிலைநாட்டிவிடும் என்ற நம்பிக்கை இலங்கை அரசுத் தரப்பின் செய்தி மட் டங்கள் ஊடாக உலகுக்கு உணர்த்தப்பட்டு நம்பவைக் கப்பட்டுள்ளது.
அதனாலேயே முன்னர் இலங்கை அரசுக்கு சமனான இராணுவ வலுச்சமநிலையில் இருந்த புலிகளை ஆயுதங் களுக்கு ஓய்வு கொடுத்து அமைதித் தீர்வுக்கு முயலுமாறு வலியுறுத்திய சர்வதேசம், இப்போது ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடையுங்கள் என்று கோருகின்றது.
அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட சமயம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் அனு சரணைத் தரப்பாகச் செயற்பட்ட நோர்வே, இப்போது கடலில் வேகமாக ரோந்து சென்று கண்காணிக்கும் அதிவேகப் படகுகள் தொடர்பான தனது தொழில்நுட்பத் தகைமையை இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு உதவியாக வழங்கி, இலங்கை அரசுக்கு இராணுவ ஒத் தாசை செய்கின்றது.
அதேபோல இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவுவதற்காக அப்போது தனது விசேட சமாதானத் தூது வர் ஒருவரையே இலங்கைக்கென நியமித்து, சமாதான முயற்சிகளில் ஈடுபாடு காட்டிய ஜப்பான், இப்போது ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலின் சுழற்சி முறைத் தலை மைத்துவம் தன்னிடம் இருக்கும்போது அதை வைத்துக் கொண்டு புலிகளுக்கு எதிராக நெருப்பெடுக்கின்றது.
இப்படியெல்லாம் முன்னர், அமைதி முயற்சிக ளுக்கு ஒத்துழைக்கும் சமாதானப் பிரியர்களாகக் காட் டிக் கொண்ட நோர்வே, ஜப்பான் போன்ற தேசங்களே, புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்து, சரணாகதி அடையுங்கள் என்று கூறும் அளவுக்குத் தடம் மாறியுள்ளன என்றால், அதற்குக் காரணம் ஐ.நாவின் மனித உரி மைகளுக்கான முன்னாள் ஆணையாளர் றொபின்ஸன் குறிப்பிடுகின்றமை போல இந்த யுத்தத்தில் இலங்கை அரசுப் படைகள் இறுதியாக வெற்றியீட்டிவிடும் என்ற நம் பிக்கை சர்வதேச தரப்புக்கு ஊட்டப்பட்டிருப்பதுதான்.
இலங்கையில் அமைதி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர வேண்டும் என்றால், இங்கு இலங்கை அரசுக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிலவும் இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று அமைதி முயற்சி சமயத்தில் அனு சரணைத் தரப்பாக இருந்துகொண்டு முன்னர் வற்புறுத் திய நோர்வே, இப்போது ஆயுதங்களைக் கீழே வைத்து இலங்கை அரசுப் படைகளிடம் புலிகள் சரணாகதி அடை யவேண்டும் என்று கூறும் அளவுக்கு "குத்துக் கரணம்" அடித்திருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் துரதிஷ்டமே.
அதற்குக் காரணம், தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவாகக் கருதப்பட்ட புலிகளின் இராணுவ வலி மையை விட இலங்கைப் படைகளின் வலிமை மிகவும் மேலோங்கிவிட்டது என்ற நம்பிக்கைதான்!
Thanks
Uthayan.

Monday, February 23, 2009

மீண்டுமொரு 87-க்காக காத்திருந்த இந்தியாவின் முகமும் முகமூடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று.

ஆனாலும் இந்தியா தான் அணிந்திருக்கும் முகமூடியையே முகமாக காட்டி வருகின்றது.

இந்தியாவின் ஈழம் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை படிப்படியாக சிறிலங்கா படைகள் கைப்பற்றியிருப்பதும், அதற்கு சகலவிதங்களிலும் இந்தியா ஒத்துழைப்பும் ஆலோசனைகள் வழங்கி வருவது குறித்துமே இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலைமையானது ஏலவே இந்தியா கடைப்பிடித்து வந்த இலங்கை தொடர்பான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

முன்னர் இந்தியாவின் விடுதலைப் புலிகள் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் அபிப்பிராயம் தெரிவித்து வந்தவர்கள் சிலர் இந்தியா முழுமையாக விடுதலைப் புலிகளின் அழிவு குறித்து அக்கறை கொள்ளவில்லை என்றும், ஆனால் அவர்களை பலவீனப்படுத்துவது குறித்தே அக்கறை கொள்கின்றது என்ற வகையான அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் இலங்கையின் அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியாதளவிற்கு உருச்சிதைந்து போனால், சிறிலங்காவை கட்டுப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டை இந்தியா இழந்துவிட நேரலாம் என்ற அர்த்தத்திலேயே இவ்வாறான அபிப்பிராயங்களை அவர்கள் தெரிவித்திருக்கலாம்.

ஆனால் இன்று களநிலைமைகளை உற்று நோக்கினால் இந்தியா மகிந்தவின் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்தொழித்துவிட வேண்டுமென்ற முனைப்பிற்கு உறுதுணையாக இருப்பதாகவே தெரிகிறது.

குறிப்பாக 87 போன்றதொரு நிலைமைக்காக இந்தியா காத்திருப்பது போன்றே தெரிகிறது.

விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பல இராணுவ நோக்கர்களும் அபிப்பிராயப்பட்டு வரும் சூழலில்,

இந்தியாவின் சார்பில் பேசி வரும் இந்திய அதிகார மட்டத்தினர் பலரும் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கூறி வருவதையும் இந்த இடத்தில் நாம் நினைத்துக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பின் பின்னணி என்ன என்று பார்ப்போம்.

கடந்த மாதம் (05.01.2009) டீடீஊ தமிழ் சேவைக்கு கருத்துத் தெரிவித்த தெற்காசிய விவகாரங்களுக்கான ஜவர்கால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சகாதேவன், இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தற்போதைய நிலையில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்றும், அவ்வாறனதொரு கொள்கை முன்னெடுப்பினை மேற்கொள்ளக்கூடிய அரசியல் தலைவர்கள் எவரும் இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக இப்போதைய இலங்கை தொடர்பான கொள்கைகளை அதிகாரிகளே திட்டமிடுவதாகவும் அதற்கு ஏற்பவே அனைத்தும் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதே சகாதேவன் முன்னர் கொழும்பில் பங்கு கொண்ட ஒரு கருத்தரங்கின் போது, இந்தியா தொடர்பில் குறிப்பிட்டிருந்த சில விடயங்களையும் இங்கு குறித்துக் கொள்வோம்.

தமிழீழம் உருவாகுவது இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்படுவதை துரிதப்படுத்தி விடும் என்றவாறான அச்சங்கள் இந்தியாவிற்கு இல்லை என்றும் அது பிழையான வாதம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் தற்போது இந்தியா கடந்த கால அனுபவங்களில் இருந்தே இலங்கையின் அரசியல் விடயங்களை அவதானித்து வருகின்றது.

தன்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதில் இந்தியாவிடம் தெளிவு உண்டு என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் சில வருடங்களுக்கு முன்னர் அவரால் தெரிவிக்கப்படதாகும்.

ஆனால் இன்று, இந்தியா நடந்து கொள்வதை கருத்தில் கொண்டு பார்த்தால் அவரது கணிப்பு முற்றிலும் தவறானதாக இருக்கின்றது.

பொதுவாக இந்தியாவின் இலங்கை தொடர்பான அதிலும் குறிப்பாக தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளைச் செய்வோர், இந்தியாவின் ஆளும் கட்சியை கருத்தில் கொண்டு தமது கணிப்புக்களைச் செய்யாமல் பொது நிலையில் இந்திய மத்திய அரசு என்ற அடிப்படையிலேயே தமது கணிப்புக்களைச் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே அவர்களது கணிப்பு சிக்கலுக்குள்ளாகின்றது.

இந்தியாவின் மத்திய ஆட்சி காங்கிரஸ் தலைமையில் இருக்கும் போது ஈழத் தமிழர்கள் தொடர்பில் காட்டப்படும் தீவிரம், மத்தியில் ஆள்வது பாரதிய ஜனதாவாக இருக்கும் போது அதேயளவு தீவிரம் காணப்படுவதில்லை.

இந்தியா தொடர்பான மதிப்பீடுகளின் போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

(பாரதிய ஜனதா வந்தால் தமிழீழம் தந்துவிடுமென்பதல்ல இதன் அர்த்தம்) ஆனால் சகாதேவன் இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் குறிப்பிட்;டிருக்கும் விடயம் சரியானதென்றே நினைக்கிறேன்.

சகோதேவன் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் தற்போது இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பினை முன்னெடுக்கும் அந்த அதிகாரிகள் நாராயணன் போன்றவர்கள் என்பதுதான் முக்கியமான விடயம்.

87 காலப்பகுதியில் ஐடீ என அழைக்கப்படும் உளவு அமைப்பான ஐவெநடடபைநவெ டீரசநயர இன் பணிப்பாளராக இருந்தவர்தான் தற்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகரான நாராயணன் என்பதையும், அன்று உள்நாட்டு பாதுகாப்பு அலுவல்களுக்கு பொறுப்பாக இருந்தவர்தான் தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்பதையும் குறித்துக் கொள்வோம்.

அதாவது, முன்னர் இலங்கை விடயத்தில் பங்குகொண்ட குறிப்பாக ராஜீவ் கால அரசியலை கையாண்ட அனுபவம் கொண்டவர்கள் பலர் இணைந்துதான் தற்போதைய இலங்கை யுத்தம் தொடர்பான இந்திய அணுமுறைகளை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் தற்போது மகிந்த நிர்வாகத்தினால் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் உக்கிர யுத்தத்தை, நாம் மேலே பார்த்த வகையான இந்திய அதிகார வர்க்கம் ராஜீவ் கால அரசியலை தொடர்வதற்கான வாய்ப்பாக கருதுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது.

சந்தேகம் என்பதற்கு அப்பால் இதுதான் சரியான கணிப்பென்றே நான் கருதுகிறேன்.

தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க தலைமை பற்றி குறிப்பாக கருணாநிதியின் அரசியல் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் நாராயணன் போன்றவர்கள் அதற்கு ஏற்பவே இலங்கை தொடர்பான கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகம் மிகவும் தீவிரமான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய போதும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்திய மத்திய அரசு இருப்பதற்கு மேற்படி அதிகார மட்ட கொள்கை முன்னெடுப்பே காரணமாகும்.

இந்த அதிகார மட்டத்தினருக்கு ராஜீவின் மனைவியும் காங்கிரஸ் தலைவியுமான சோனியாவின் முழுமையான ஆதரவு இருப்பதாகவே நாம் கணிக்கலாம்.

மேற்படி அதிகாரப் பிரிவினர் சோனியாவை பயன்படுத்துகின்றனரா அல்லது சோனியா இவர்களை பயன்படுத்துகின்றாரா என்பது பற்றி தெளிவான கணிப்பினை செய்ய முடியாதுள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் இருந்தது போன்று றோவின் முழு இயக்கமும் சோனியாவின் கட்டுபாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக்கொள்ள முடியும்.

இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட இந்திய வெளி விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பும், இந்திய வெளியுறவுக் கொள்கையை திட்டமிடும் அமைப்புமான றோ (சுநளநயசஉh யனெ யுயெடலணiபெ றுiபெ - சுயுறு) இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்டதாகும்.

1968 இல் உருவாக்கப்பட்ட றோ இந்திராவின் ஆட்சிக்காலத்தில்; அவரது ஆட்சி நலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவின் இன்றைய இலங்கை தொடர்பான அணுகுமுறையில் சோனியாவின் குடும்பம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால், இந்த அணுகுமுறை இந்தியாவின் ஒட்டுமொத்த அணுகுமுறையல்ல என்பதை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாக்கிஸ்தான் இருக்கின்றது என்பது நிரூபணமான பின்னரும் கூட, ஒருவகையில் அதனை மன்னிப்பது போன்று நடந்து கொள்ளும் இந்திய காங்கிரஸ் தலைமை, விடுதலைப் புலிகள் விடயத்தில் மிகத் தீவிரமான வெறுப்பைக் காட்டுவதானது ஒருமித்த கொள்கை என்பதை விட ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பங்கள் செல்வாக்குச் செலுத்துவதையே குறித்து நிற்கிறது.

இன்றைய இந்திய அணுகுமுறையின் உள்ளடக்கமாக இரு விடயங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

ஓன்று ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் விடுதலைப் புலிகளை மீண்டுவர முடியாதளவிற்கு அழிப்பது குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனை இல்லாதொழிப்பது.

இரண்டு 87 இல் இந்தியாவிற்கு பெருத்த அவமானத்தை குறிப்பாக இந்தியாவின் றோ செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திய தோல்வியை சரிக்கட்டுவது.

அதாவது, ஈழத் தமிழர்களுக்கு பொருத்தமான தீர்வென அன்று ராஜீவ் முன்மொழிந்த தீர்வை மீளவும் உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவது.

இதில் முக்கியமான புள்ளி, விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது புலிகளால் கட்டமைக்கப்பட்டு பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை (னுந - கயஉவழ - ளவயவந) இல்லாதொழிப்பதாகும்.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்தத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தை தீர்வு எதனையும் நமது தேசத்திற்கு கொண்டு வராவிட்டாலும், பிறிதொரு வகையில் புலிகளால் பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை சர்வதேச மட்டத்தில் பிரபல்பயப்படுத்தியதுடன் அதற்கான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பங்காற்றியிருக்கின்றது.

பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழர் தேசம் அடைந்த நன்மை என்றும் இதனைச் சொல்லலாம்.

ஆனால் இந்த விடயத்தை இந்தியா கூர்மையாக அவதானித்திருக்கின்றது என்பதை நாம் கணித்திருந்தோமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றே.

அதேவேளை, கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கமும் புலிகளால் பேணப்படும் நடைமுறை அரசை எவ்வாறாயினும் அழித்தொழித்து விட வேண்டுமென்பதில் குறியாகவே இருந்தது.

அதற்கானதொரு பொருத்தமான நபர் என்ற வகையிலேயே மகிந்தவின் பின்னால் கொழும்பு அணிதிரண்டது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக கணிப்பிட்ட இந்தியா பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து களமிறங்கியது.

சுருக்கமாக சொல்வதானால் கொழும்பு தனது நோக்கத்தை இந்தியாவின் மூலமும், இந்தியா தனது நீண்ட நாள் இலக்கை குறிப்பாக ஆளும் காங்கிரசின் இலக்கை கொழும்பின் மூலம் நிறைவு செய்வதற்கான முயற்சிதான் தற்போதைய தீவிர யுத்தம்.

ஆனால் இந்தியா தாராளமாக வழங்கி அவரும் அறிக்கைகளின் படி ஏலவே தோல்வியடைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமா? இது பற்றி பிறிதொரு ஆய்வில் விரிவாக பார்ப்போம்.

நன்றி
- தாரகா -
தமிழ்நாதம்

தமிழகத்தில் சூடு பிடிக்கும் ஈழத் தமிழர்கள் விவகாரம்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் தமிழகத்தில் எழும்போதெல்லாம் வழமையாக ஒரு கருத்து அங்குள்ள ஆட்சித் தரப்புகளால் முன்வைக்கப்படுவதுண்டு.
அது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, நெடுமாறனின் உலகத் தமிழர் இயக்கம் என்பன போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சொற்ப தரப்பினரே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சிப் போக்கைக் காட்டுகின்றனர். இத்தரப்பினரின் அரசியல் வலு அப்படி ஒன்றும் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தனித்து நிர்ணயிக்கத்தக்கதல்ல. அது புறக்கணிக்கப் படக்கூடியதே. அதனால் அத்தரப்பினர் கிளப்பும் ஆரவா ரங்களுக்கு ஊடகங்கள் இடம்கொடுத்து, அவற்றைப் பிரசாரப்படுத்தினாலும் கூட, அத்தரப்பினர் தமிழகத்திலும், மத்தியிலும் அரசியல் விடயங்களில் ஏற்படுத் தக்கூடிய தாக்கம் அப்படி ஒன்றும் பெரிதுபட்டதல்ல என்றே விளக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போதும் கூட தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் சக்திகள் மேற்படி கட்சிகள் தாம். இவற்றோடு தேசிய முற்போக்குத் திரா விடர் கழகத்தின் விஜயகாந்தும் மற்றும் சினிமாத்துறை யினர் சிலரும் தற்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோர் அணியில் சேர்ந்துள்ளார்கள். அவ்வளவே.
தமிழகத்தின் பிரதான இரு அரசியல் கட்சிகளான ஆளும் தி.மு.கவும் அதற்கு மாற்றான அ.தி.மு.கவும் அப்படி ஒன் றும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி நிலைப் பாட்டைக் கைக்கொள்ளவே இல்லை.
ஆனால், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்று தமிழகத் தில் கொப்பளிக்கும் உணர்வலைகளை முன்னைய காலம் போல் சிறிய கட்சிகளின் செயற்பாடு என்று புறம் தள்ளி ஒதுக்கி உதாசீனப் படுத்தி விடவே முடியாது. அந்த அளவுக்கு அந்த உணர்வலைகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி, அனைவரினதும் சிந் தனையைச் சுட்டெரிக்கும் சூடான விவகாரமாகிவிட்டது.
தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தங்களது சுய நன்மை கருதிய நிலைப்பாடு காரணமாக, ஈழத் தமிழரின் அவல நிலை குறித்துப் பாராமுகமாக நடப்பதால், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்புகள் சில அரசியல் கட்சி பேதத்துக்கு அப்பால் சென்று, இப்பிரச் சினையைத் தாமாகவே கையாண்டு, தங்கள் கருத்தைப் பிரதிபலித்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன் னெடுக்க முன்வந்திருக்கின்றன.
தமிழகம் உட்பட்ட இந்தியா போன்ற சமூகக் கட்ட மைப்பில் சட்டத்தரணிகள் என்ற தரப்பினர் முக்கிய நிலைக்களனான மட்டத்தினராவர். ஒரு சமுதாயக் கட்ட மைப்பில் சட்டம் ஒழுங்கைச் சரிவரப் பேணச்செய்து நீதியை நிலைநாட்ட வைப்பதில் இத்தரப்பினருக்குப் பிரதான பொறுப்பு உண்டு.
சட்டத்துக்கும், நீதிக்குமாக உழைக்கும் சட்டத்தரணி களான இத்தரப்பினர் பொதுவாக சட்டம் அசட்டை செய் யப்படும்போதும் நீதி புறமொதுக்கப்படும்போதும் தாமாகவே கொதித்தெழுந்து அதற்காகக் குரல் கொடுப் பது வழமை. அது அவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயமுமாகும்.
அதையே தமிழக சட்டத்தரணிகளும் இப்போது செய்ய முயன்றிருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர் விவகாரத்தை இலங்கையின் உள்நாட் டுப் பிரச்சினைபோலக் காட்டி, அதைப் புறமொதுக்கி விட்டு, அங்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரம் எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதை அனுமதித்துப் பார்த்திருப்போம் என்ற மமதையில் புதுடில்லியும், தமிழக மாநில அரசுத் தரப்பும் செயற்படும்போது மிகக் கொடூ ரப் பேரவலத்துக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக் காக நாமே குரல் எழுப்பி, வழி காண்போம் எனப் பிரகடனப் படுத்தும் வகையில் தமிழக சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு போராடப் புறப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தச் செயற்பாடும், அவற்றை ஒட்டி அம்பலமாகும் வெளிப்பாடுகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ கம் கொதிக்கத் தொடங்கிவிட்டது என்பதைப் பறைசாற் றும் அம்சங்களாகும்.
இலங்கை மீது அனுமான் இட்ட தீ போல, ஈழத் தமிழ ருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கிளம்பியிருக்கும் சூடு தமிழகத்தை ஓர் ஆட்டு ஆட்டுவித்து, தமிழக அரசியலை சூறாவளியாக்கி, பல அரசியல் தலைமைத்துவங்களை ரணகளப்படுத்திப் பலரை பதவிக் கதிரைகளில் இருந்து விரட்டியடிப்பதோடு, ஈழத் தமிழரின் நலனில் அக்கறையில்லாமல் விட்டேத்தியாக நடப்பவர்களையும் அரசியலில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவிடும் வகையில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் நான்கு அப்பாவிப் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே தீ மூட்டித் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியிருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக சட்டத்தரணி களின் எழுச்சியைச் சமாளித்து, அடக்குவதற்காக, தமிழக மற்றும் அருகில் புதுவை மாநில அரசுகள், தமது பிரதேசங் களில் நீதிமன்றச் செயற்பாடுகளை இன்றும் நாளையும் முற்றாக இடைநிறுத்தி விட்டிருக்கின்றன.
அதே சமயத்தில், ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் காகப் போராடும் ஏனைய தமிழகத்தின் பல கட்டமைப்பு களும் இவ்விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வீதிக்கு இறங்கத் தயாராகிவிட்டன.
தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் எட்டி, அங்கு ஒரு கலக்குக் கலக்கி வரும் இப்பிரச்சினை, தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களுக்கும், புதிய பல அரசியல் நிகழ்வு களுக்கும் வழி செய்யலாம் என எதிர்பார்க்கப்படு கின்றது. அவை விரைவில் கட்டவிழும் என நம்பலாம்.

Uthayan

Sunday, February 22, 2009

வான் புலிகளின் கரும்புலித் தாக்குதல்

கொழும்பு நகரில் வான்புலிகள் மீண்டு மொரு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். வழமையாக நடத்தும் வான்தாக்குதலைப் போலல்லாது இம்முறை வான் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை தாங்கள் முறியடித்து வான்புலிகளது இரு விமானங்களையும் வெற்றிகரமாக அழித்து விட்டதாக படைத்தரப்பு கூறினாலும், கரும்புலித் தாக்குதலை நடத்த வந்த வான்புலிகளின் விமானங்கள் அழியுமென்பது நிச்சயம். அதேநேரம், புலிகள் வான் கரும்புலித் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்களென்ற சேதி அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சியடையச் செதுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகள் வசமிருக் கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தங்கள் வசமாகி விடுமென படையினர் கூறிவரும் நிலையிலேயே அந்தப் பகுதியிலிருந்து வந்த புலிகளின் விமானங்கள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளன. புலிகள் மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதாக படையினர் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பே புலிகள் வசமிருக்கும் கடைசி நகரெனவும் புதுக்குடியிருப்பும் போவிட்டால் புலிகளே இல்லையெனவும் படையினர் கூறிவந்த போதே அங்கிருந்து வந்த வான்புலிகள் கொழும்பு நகரில் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வன்னியில் தற்போது புதுக்குடியிருப்பை அண்டிய கடலோரப் பகுதிக்குள் சுமார் 75 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்ளேயே புலிகள் இருப்பதாக படையினர் கூறுகின்றனர். புலிகள் நிலைகொண்டுள்ள பகுதியை படையினர் சகல முனைகளிலும் சுற்றி வளைத்துள்ளனர். மூன்று முனைகளில் எட்டுப் படையணிகள் நிறுத்தப்பட்டு தினமும் புலிகளின் அனைத்துப் பகுதிகளிலும் இடைவிடாது ஆட்லறி ஷெல், பல்குழல் ரொக்கட்டுகள், மோட்டார் குண்டுகள், பீரங்கித் தாக்குதலையும் அவ்வப்போது விமானத் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதைவிட முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் பாரிய பாதுகாப்பு வேலியை அமைத்தது போல் 25 இற்கும் மேற்பட்ட அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தினமும் வன்னியில் விழும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதலில் சராசரியாக 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துவரும் நிலையில் பதுங்குக் குழிகளுக்கு வெளியே எவர் தலை நீட்டினாலும் தலை தப்புவதற்கான சாத்தியமே இல்லையென்றதொரு நிலையே அங்குள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிக ளின் இரு விமானங்கள் எங்கிருந்து, எப்படி வந்தன என்ற கேள்வியை சாதாரண மக்களும் எழுப்புகின்றனர். புலிகள் வசமிருந்த அனைத்து (ஏழு) விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதால் வான் புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டுவிட்டதாக படையினர் கூறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் புலிகளின் விமானங்கள் வன்னிக்குள்ளிருந்து கொழும்பு நகருக்கு வந்தது நாட்டு மக்கள் அனைவரையும் திகைப்படையச் செதுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புலிகளின் இவ்விரு விமானங்களும் கொழும்பு நகரை சமீபித்த பின்புதான் இரு விமானங்களும் கொழும்பை நோக்கி வருவதை படையினர் அறிந்துள்ளனர். அதுவரை, புலிகளின் விமானங்கள் கொழும்பு நோக்கி வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இலங்கை வரைபடத்தில் தற்போது புலிகள் வசமிருக்கும் பகுதி ஒரு சிறு துளி போன்றே காண்பிக்கப்படுகிறது. அந்தச் சிறிய பகுதியையும் கைப்பற்றிவிடுவதற்காக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தொடர்ந்தும் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபட்டுமுள்ளனர். புலிகளின் பகுதியில் சிறு சத்தம் கேட்டாலும் அதனை உணர்ந்து சத்தம் வந்த அந்த இடத்தை நோக்கி அடுத்த நிமிடமே ஷெல்கள், பல்குழல் ரொக்கட்டுகள், பீரங்கித் தாக்குதலை நடத்தக்கூடிய வல்லமையுடன் படையினர் இருப்பதாக அரசு கூறுகிறது. புலிகள் வசமிருந்த அனைத்து விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதாலும் புலிகளை மிகச் சிறியதொரு நிலப்பிரதேசத்திற்குள் முடக்கிவிட்டதாலும் வான்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முற்று முழுதாக செயலிழக்கச் செயப்பட்டு விட்டதாக படைத்தரப்பு கூறிவந்தது. அத்துடன் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியிலிருந்து ஒரு காகம் பறந்தால் கூட அதனைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுடன் படையினர் மூன்று முனைகளிலும் புலிகளைச் சுற்றிவளைத்துள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சாலையிலும் பாரிய கடற்படை முகாம் இருப்பதால் கடல்வழியாகவும் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் படைத்தரப்பு கூறிவந்தது.

இப்படியிருக்கையில் வான்புலிகளால் அங்கிருந்து புறப்பட்டு எப்படி கொழும்பு வரமுடிந்த என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர். வவுனியாவிலும் மன்னாரிலும் இந்தியா வழங்கிய ராடர்கள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு கடலிலும் தரித்து நிற்கும் கடற்படைக் கப்பல்களிலும் சக்திவாந்த ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் அடுத்த கணமே அவற்றை கண்டுபிடித்துவிடக்கூடிய ஆற்றலுடன் வன்னியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் படையினர் தயார் நிலையிலுள்ளனர். அத்துடன் புலிகளின் விமா னங்கள் முல்லைத்தீவு கடல்வழியாக பயணத்தை மேற்கொள்ள முடியாது. கடல் கண்காணிப்பு தீவிரமாயிருப்பதுடன் திறந்த வெளியென்பதால் கடற்படை பீரங்கிப் படகுகள் அவற்றைத் தாக்கி அழித்துவிடக் கூடிய வாப்புமுள்ளது. தங்களது விமானங் கள் புறப்பட்ட இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் விமானப் படை விமானங்களும் உடனடியாக அங்கு வந்து தாக்குதலை நடத்திவிடலாமென்பது புலிகளுக்கு நன்கு தெரியும். இதனாலேயே முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் விமானங்கள் புறப்படவில்லை. அத்துடன் கொழும்பு வருவதற்கு அந்தப் பாதையும் தேவையில்லை.

புதுக்குடியிருப்பிலிருந்து இரவு சுமார் 8.30 மணியளவில் இவ்விரு விமானங்களும் புறப்பட்டு மாங்குளம் ஊடாக "ஏ9' வீதியைக் கடந்து அங்கிருந்து மடுக்கோயில் ஊடாக மன்னார் சிலாவத்துறைக் கரைக்கு வந்து மேற்கு கரையோரத்தால் கற்பிட்டி, புத்தளம், சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி இவை வந்துள்ளதாக படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது புதுக்குடியிருப்பிற்கு தென்மேற்கிலேயே கடும் சமர் நடைபெற்று வருகிறது. புலிகளின் இவ்விரு விமானங்களும் கடும் சமர் நடைபெறும் புதுக்குடியிருப்பின் தென்மேற்கு திசையூடாக கிளம்பியே, 24 மணிநேரமும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் புதுக்குடியிருப்பு மாங்குளம் பகுதியூடாக மாங்குளத்திற்குச் சென்று பின்னர் மேற்கூறிய பாதைகளூடாக கொழும்பை நோக்கி பறந்துள்ளன. புதுக்குடியிருப்பிலிருந்து புறப்பட்ட இவ்விரு விமானங்க ளும் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே பறந்துள்ளன. இவ்விரு விமானங்களும் புறப்பட்டு மாங்குளம் நோக்கி யும் அங்கிருந்து மடு பின்னர் சிலாவத்துறையூடாக மேற்கு கடற்கரையோரத் திற்குச் சென்று கொழும்பு நோக்கி பறக்கத் தொடங்கியதை படையினரோ அல்லது அவர்களது ராடர்களோ கண்டுபிடிக்கவில்லை. இவ்விரு விமானங்களும் புத்தளத்தையும் தாண்டி கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோதே இரவு 9.20 மணியளவில் இரு விமானங்கள் வருவதை படையினர் அறிந்து கொண்டனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் கொழும்பு மாநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விமானப் படையினரின் வான்பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டது. கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சிலநிமிட நேரத்தில் புலிகளின் இரு விமானங்களும் கொழும்பு மாநகர எல்லைக்குள் கட்டுநாயக்கா பக்கமூடாக நுழைந்துவிட்டன. நகரின் அனைத்து பகுதிகளிலுமுள்ள படை முகாம்களிலிருந்தும் புலிகளின் விமானங்களை நோக்கி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. நகரின் சகல பகுதிகளின் அனைத்து முனைகளிலிருந்தும் புலிகளின் விமானங்களை கண்டுபிடிப்பதற்காக "சேர்ச்லைற்'கள் வானத்தை நோக்கி ஒளிவெள்ளத்தை பாச்சித் தேடின. இந்த நேரத்தில் ஒரு விமானம் கோட்டைப் பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் விமானப் படைத் தலைமையகத்திற்கு முன்பாகவும் "ரான்ஸ் ஏசியா' ஹோட்டலுக்கு அருகிலுமுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிடம் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய பின் அந்தக் கட்டிடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அந்தப் 13 மாடிக் கட்டிடத்திற்கு பாரிய சேதமேற்பட்டதுடன் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது.

இந்தத் தாக்குதல் சுமார் 9.45 மணியளவில் நடைபெற்றுள்ளது. வான் கரும்புலிகளின் இலக்கு இந்தக் கட்டிடமா அல்லது அருகிலிருந்த விமானப் படைத் தலைமையகமாக என்பது சரியாகத் தெரியவில்லை. விமானப்படை தலைமையகம் ஒருசில மாடிகளைக் கொண்ட கட்டிடம். ஆனால், இறைவரித் திணைக்களம் பல மாடிகளைக் கொண்ட கட்டிடம். இதனால் தாக்குதலை நடத்த வந்த விமானக் கரும்புலிகளுக்கு இரு கட்டிடங்களும் நன்கு தெரிந்திருக்குமெனக் கருதப்படுகிறது. எனினும், அவர்களது இலக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமாயிருந்திருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கட்டிடம் மீது புலிகளின் விமானம் கரும்புலித் தாக்குதல் நடத்தியதை படையினர் முதலில் உணரவில்லை. முதலில் புலிகள் குண்டை வீசியதால் குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதாகவே அவர்கள் கருதியுள்ளனர். எனினும், பின்னர் அந்த விமானம் அந்தக் கட்டிடத்தின் மேற்குப் புறப்பக்கமாக சென்று அதனுடன் மோதிவெடித்துச் சிதறியுள்ளது. அப்போது கூட அங்கு புலிகளின் விமானம் குண்டு வீசியுள்ளதாகவே படையினர் கருதியுள்ளனர். இந்தத் தற்கொலை விமானத் தாக்குதலால் கட்டிடம் பலத்த சேதமடைந்ததுடன் அங்கு பாரிய தீயும் பரவியது. இந்தத் தாக்குதலையடுத்து புலிகளின் விமானங்கள் மீது படையினர் சகல பகுதிகளிலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுக்கவே கொழும்பு நகரமே அதிர்ந்தது. வானமெங்கும் வாணவேடிக்கை போன்று ஒளிப்பிளம்புகளாக காட்சியளித்தது.

இவ்வேளையில் புலிகளின் மற்றைய விமானம் கட்டுநாயக்கா பகுதி நோக்கிச் சென்றுள்ளது. விமானப்படைத்தளமே அதனது இலக்காக இருந்திருக்க வேண்டும். இந்த விமானம் அந்தப் பகுதிக்கு வருவதை படையினர் அறிந்து அதன் மீதுதாக்குதலைத் தொடுத்துள்ளனர். இங்கும் அந்த விமானம் கரும்புலித் தாக்குதலையே நடத்த வந்ததால் அது மிகவும் தாழ்வாகச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், ஒரே நேரத்தில் அந்த விமானத்தை நோக்கி நடத்தப்பட்ட கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதலுக்கு அந்த விமானம் இலக்காகி விமானம் படைத்தளத்தின் பின்புறமாக விமானப்படைத் தளத்திலிருந்து சற்றுத் தூரத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விமானமும் கரும்புலித் தாக்குதலை நடத்தவே வந்துள்ளது. எனினும் இந்த விமானம் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வீழ்ந்த போதும் அதிலிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை. உள்நாட்டு இறைவரித் திணைக்கள பகுதியில் நொருங்கிய விமானம் உருத்தெரியாது உலோகத்துண்டுகளாயிருந்தது. ஆனால் கட்டுநாயக்காவில் வீழ்ந்த விமானம் பெருமளவு நொருங்கிச் சிதையவில்லை. அதன் விமானியினது உடலும் பலத்த சேதமின்றி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. படையினரின் தாக்குதலுக்கு விமானம் இலக்காகியபோது அல்லது அந்த விமானம் நிலத்தில் வீழ்ந்து நொருங்கிய போது கூட விமானத்தினுள்ளிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் அந்த விமானம் எந்த ரகத்திற்குரியதென்பதையும் புலிகள் அதனை எவ்வாறு தங்கள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தினார்களென்பதையும் பெரும்பாலும் அறிந்துவிட முடியும்.

அதேநேரம் விமானக் கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகள், வழமையான விமானத்தை விட சிறிய விமானத்தையே பயன்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. வழமையாக குண்டு வீச்சை நடத்தும் விமானங்களில் இரு விமானிகளிருப்பர். அந்த விமானம் சற்றுப் பெரியது. ஆனால் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலை நடத்திய விமானங்கள் இரண்டும் மிகச் சிறியவை. இரண்டிலும் தலா ஒரு விமானியே வந்துள்ளனர். இதிலொருவர் கேணல் ரூபன், மற்றவர் லெப்.கேணல் சிரித்திரன். இவ்விருவரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து நின்று எடுத்த புகைப்படங்களை, தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரத்தில் புலிகள் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். புலிகள் இந்தக் கரும்புலித் தாக்குதலுக்கு தங்களது உயர்மட்டத் தளபதி ஒருவரை பயன்படுத்தியுள்ளனர். வான் புலிகள் இதுவரை ஒன்பது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதல் எட்டுத் தாக்குதல்களிலும் அவர்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அவையெல்லாம் சாதாரண தாக்குதல்கள். ஒன்பதாவதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலானது வான் புலிகளது முதல் கரும்புலித் தாக்குதலாகும். அதுவும் இந்தத் தாக்குதலில் வான்புலிகளின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான கேணல் ரூபன் பங்கேற்றுள்ளார்.

வான் புலிகள் நடத்திய முதல் எட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்ட வான் புலிகள் நீலச்சீருடை அணிந்தவர்கள். இந்தக் கரும்புலித் தாக்குதலை நடத்திய வான்புலிகள் இருவரும் கரும்புலிகள் அணியும் பச்சை நிறச் சீருடையுடனேயே வந்துள்ளனர். இதிலும் விடுதலைப் புலிகள் தங்ளது வழமையான நடைமுறையை கடைப்பிடித்துள்ளனர். அத்துடன் இதுவரை புலிகள் தரப்பில் உயிர் நீத்த உயர்மட்ட தளபதிகளில் (கேணல்) முதல் கரும்புலித் தாக்குதலை நடத்தியவர் கேணல் ரூபன். அதேநேரம், இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக படைத்தரப்பு கூறுகின்றது. புலிகளின் ஒரு விமானம் இலக்கை எட்டிய போதும் மற்றைய விமானம் இலக்கை எட்டவில்லை. இந்தத் தாக்குதலுடன் புலிகள் வசமிருந்த அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்டு விட்ட தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி வான்புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு விமானம் அழிக்கப்பட்டதாகவும் தற்போது மிகுதி இரு விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகமும் கட்டுநாயக்கா விலுள்ள விமானப் படைத் தளமுமே வான் புலிகளால் இலக்காயிருந்திருக்க லாமென படையினர் கருதுகின்றனர். எனினும் புலிகளால் அந்த இலக்குகளை அடைய முடிய வில்லையெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்புக்குள் வந்துவிட்டதால் முழுமையாகத் தோல்வியடைவதற்கு முன்னர் அரசுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த முனைவதாகவும் அதனொரு கட்டமே இதுவெனவும் படையினர் கூறுகின்றனர். புலிகள் வசமுள்ள ஏனைய சிறு பகுதியையும் படையினர் மிக விரைவில் முழுமையாகக் கைப்பற்றி விடுவரென்பதை அறிந்துள்ள புலிகள் தங்கள் விமானங்களை படையினரிடம் இழக்க விரும்பாமலும் அதனை வீணாக அழிக்க விரும்பாமலும் இவ்வாறானதொரு தாக்குதல் மூலம் தாங்கள் வலுவாக இருப்பதாகக் காட்ட முற்பட்டு, கடைசியாக இருந்த இரு விமானத்தையும் அழித்துள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர். எனினும் அவர்களது கடைசி முயற்சியில் கூட அவர்களால் இலக்குகளை எட்ட முடியவில்லையெனவும் புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்து அவர்கள் வசமிருந்த இரு விமானங்களையும் அழித்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். முன்னைய காலங்களைப் போல புலிகளால் விமானங்களை நாட்டுக்குள் கடத்திவந்து அவற்றை இனிமேல் பயன்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறும் படைத்தரப்பு, வான் புலிகளது அச்சுறுத்தலுக்கு வெள்ளிக்கிழமையுடன் முற்றுப் புள்ளி வைத்து விட்டதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே படைத்தரப்பு இதுபோல கூறிய நிலையிலேயே வெள்ளிக்கிழமை இரவு இவ்விரு விமானங்களும் வந்துள்ளதை படைத்தரப்பு நினைவில் கொள்ள வேண்டுமென வேறு சில தரப்புகள் கூறுகின்றன.

வெள்ளிக்கிழமை இரவு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீது வான்புலிகள் தற்கொலை விமானத் தாக்குதலை நடத்தியிருந்த போதும் புலிகள் அங்கு தற்கொலை விமானத் தாக்குதலை நடத்தியது படையினருக்கு உடனடியாகத் தெரியவரவில்லை. தாக்குதலையடுத்து கட்டிடத்தில் தீ பரவவே அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்த பின் அப்பகுதியில் படையினர் சுற்றி வளைத்து தேடுதலை நடத்திக் கொண்டிருந்த போதே, கட்டிடத்திற்கு கீழே விமானத்தின் சிதைவுகள் இருப்பதைக் கண்டனர். இவ்வாறு, அங்கு தாக்குதல் நடைபெற்று சுமார் ஒன்றரை மணிநேரத்திற்குப் பின்பே அந்தப் பகுதியில் புலிகளின் விமானம் வீழ்ந்ததை அறிந்துள்ளனர். இந்த விமானம் இங்கு வீழ்ந்த பின்னரே கட்டுநாயக்கா பகுதியில் புலிகளின் மற்றைய விமானம் வீழ்ந்துள்ளது, எனினும் கட்டுநாயக்கா பகுதியில் ஒரு விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் மற்ற விமானம் கோட்டைப் பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்வதாகவுமே முதலில் படைத்தரப்பு கூறியிருந்தது. நள்ளிரவு 11.45 மணிக்குப் பின்னரே கோட்டைப் பகுதியிலும் விமானமொன்று வீழ்ந்திருக்கின்றதென்ற செதிவெளியானது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறையை வைத்து அது தற்கொலை விமானத் தாக்குதல் தான் என்பதை படையினரால் உடனடியாக ஏன் ஊகிக்க முடியவில்லையென்பது ஆச்சரியமானது.

இதற்கிடையில் தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் வான் வழித் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்களென்ற கேள்வியும் எழுகிறது. வன்னியில் அவர்கள் வசம் மிகப் பெரும்பாலான பகுதிகள் இருந்த போதும் விமானப்படை விமானங்கள் ஆரம்பம் முதலே அவர்களுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தபோதும் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தை தற்கொலை விமானத் தாக்குதல் மூலம் இலக்கு வைக்க முயலாத புலிகள், இலங்கை படையினர் புலிகளின் விமானங்களுக்கெதிராக கடும் தாக்குதலை நடத்தக்கூடிய ஆயுத மற்றும் தொழில்நுட்ப பலத்தை (ராடர்கள் கொள்வனவு உட்பட) நன்கு பெற்றுவிட்ட நிலையில் இவ்வாறானதொரு தாக்குதல் எந்தளவுக்கு வெற்றியளிக்குமென புலிகள் ஏன் அறிந்திருக்கவில்லையென்ற கேள்வியும் எழுகிறது. வெள்ளிக்கிழமை இரவு கூட கொழும்பு நகரின் வான்புலிகளின் இலக்கு விமானப்படைத் தலைமையகமாயிருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற கடும் தாக்குதலால் புலிகளின் விமானி பதற்றமடைய அந்த இலக்கு தவறியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது. புலிகள் குறித்து படையினர் தொடர்ந்தும் பிழையான மதிப்பீட்டை கொண்டிருப்பதாலேயே வன்னியில் இந்த நெருக்கடி நிலையிலும் புலிகள் கொழும்பிற்கு விமானங்களை அனுப்பி தற்கொலைத் தாக்குதலை நடத்துமளவிற்கு படையினர் அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான விமானத் தாக்குதல்களைப் போன்று வான் வழித் தற்கொலைத் தாக்குதலை புலிகள் ஆரம்பித்துள்ளதால் அரசும் படைத்தரப்பும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளது. முன்னர் வான் புலிகள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும் போது தாங்களும் தங்கள் விமானங்களும் பத்திரமாகத் திரும்பவேண்டுமென்ற எண்ணமிருந்ததால் சில வேளைகளில் தாக்குதல்கள் வெற்றியளிக்காது போயிருக்கலாம். ஆனால், தற்போது புலிகள் வான்வழித் தற்கொலைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அதில் வருவோருக்கு தங்களைப் பற்றியோ, விமானங்களைப் பற்றியோ கவலையில்லை என்பதால் இலக்கை அவர்கள் நெருங்க முற்படுவார்களெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நன்றி

விதுரன்
-தினக்குரல்=

மீண்டுமொருமுறை கால்பதிக்க காத்திருக்கிறதா இந்தியா?

விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி அண்மையில் வெளியிட்ட கருத்தொன்று, தமிழ் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படத்தக்கது.
அதாவது, உலகெங்கும் வாழ்கின்ற மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசிப்பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும் என்று யோகி கூறியுள்ளார்.
மக்களை அணிதிரட்டும், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடும் இதுவாகவே இருக்க முடியும்.

தமிழக மக்களின் போராட்டமும், புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினரின் எழுச்சியும், உலக மக்களை தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகளை உணர வைக்கின்றது.

பார்வையாளராகவிருக்கும் சர்வதேச மக்களை, பேரினவாதத்திற்கெதிரான போராட்டத் தளத்தினுள் உள்வாங்க வேண்டும்.

அதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி கண்டு அச்சமுறும் பேரினவாதமும், அதற்கு முண்டு கொடுக்கும் வல்லாதிக்கங்களும் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும், அரசியல் பரப்புரைகளையும் முறியடிக்க வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுகின்றன.

கொடூரத் தாக்குதலில் பேரவலத்தை தினமும் எதிர்கொள்ளும் தமிழ் மக்களின் அழிவுகள், இனப்படுகொலை என்கிற வடிவத்தை தொட்டு விட்டதாக உலகின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஆகவே, யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இன அழிவு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை நிராகரிக்க, விடுதலைப் புலிகள் மீது அதற்கான குற்றச்சாட்டுக்களை சுமத்த இவர்கள் முற்படுகின்றார்கள்.

வன்னி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்களென்றும், தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுகிறார்களென்றும் கூறுவதன் ஊடாக, புலிகளைத் தனிமைப்படுத்துவதோடு இனப்படுகொலையை மறைக்கலாமென்றும் இந்த பேரினவாத கூட்டுச்சக்திகள் எண்ணுகின்றன.
அதேவேளை வன்னியிலிருந்து வெளியேறி, வவுனியாவிற்கு வந்த மக்கள், முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட திறந்த வெளிச் சிறைகளில் அடைக்கப்பட்டு, வெளித் தொடர்பு அற்ற நிலையில் உயிர் வாழ்கிறார்கள்.

குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்டு, வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்கின்றது.

அதாவது ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இலங்கை அரசு மீது எதுவித அழுத்தங்களையும் சுமத்த இவர்கள் தயாரில்லை. காயப்பட்டவரை, கீறிப் பார்க்கும் உத்தியைக் கையாள முயல்கிறார்கள். அதில் பயங்கரவாதமென்கிற மருந்தைத் தடவிப் பார்க்கலாமென்றும் விரும்புகிறார்கள்.

வன்னி மக்களின் உண்மையான நிலையை நேரில் சென்று அறிந்து கொள்ள இவர்கள் பின்னிற்பது எதனால் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழமான சந்தேகமாகும்.

உலக நாடுகளின் உயிர் மையமான ஐ.நா.சபையின் பிரதிநிதிகளை உள் நுழைய விடாமல், இலங்கை அரசு தடுத்தால், அச்சபையில் உறுப்பினராக இருப்பதற்கு, இலங்கைக்கு உரிமையில்லை என்று இச்சபையால் ஏன் கூற முடியாதுள்ளது?
ஆகவே ஐ.நா. சபையின் பின்னடிப்பும், இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாத பலவீனமும் சர்வதேச சதி வலைப்பின்னலிற்குள் அச்சபையும் விழுந்து விட்டதாகவே கருத இடமுண்டு.

அதாவது தென்னாசிய நாடுகளுக்கென்று தனியான ஐ.நா. சபையொன்று இருப்பது போலவும், இந்தியாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி எவரும் செயற்பட முடியாது போன்றும் தோன்றுகிறது.

ஐ.நா.சபையையும், நோர்வே அனுசரணையாளரின் தரத்தில் வைத்து இந்தியாவும், இலங்கையும் அணுகுவது போலுள்ளது.

ஆனாலும், இலங்கை அரசின் புலி அழிப்பு நிகழ்ச்சி நிரல் நீண்டு செல்வதால், புதிய சிக்கல்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை புரிந்து கொள்ளலாம்.

மே 15ஆம் திகதிக்கு முன்னர், தேர்தல் நடைபெற்று புதிய நாடாளுமன்றம் இந்தியாவில் கூட்டப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே, புதிய கூட்டணிகளை மாநில அளவிலும், நாடளாவிய ரீதியிலும் அமைக்க வேண்டும்.

40 நாடாளுமன்றக் கதிரைகளைக் கொண்ட தமிழகம், தற்போதைய கள நிலைவரப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆகவே, ஈழப்பிரச்சினையில், 1987 இல் போன்று, சில அதிரடி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு, தி.மு.க.வின் சரிந்து செல்லும் செல்வாக்கினை தூக்கி நிறுத்தி, கூட்டணியை பலப்படுத்த வேண்டுமென சோனியாவின் காங்கிரஸ் காய்களை நகர்த்த ஆரம்பிக்கலாம்.

அதற்கான இரு நகர்வுகளை, ஜனாதிபதி பிரதீபா பட்டேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த வாரம் முன்னெடுத்திருந்ததை அவதானிக்க

வேண்டும்.

யுத்த பிரதேசத்திலுள்ள வன்னி மக்களை மீட்கும் பணியில், இலங்கை அரசு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தோடு இணைந்து, தமிழக அனுசரணையை வழங்க தாம் தயாராக இருப்பதாக, இந்த வார நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

அத்தோடு மீட்கப்படும் மக்களை இனங்காணவும், பாதுகாப்பளித்து புனர் வாழ்வினை வழங்கவும் ஏனைய இருவரும் பொறுப்பேற்க வேண்டுமென முகர்ஜி மேலும் கூறியுள்ளார்.

1987 இல் கடற்படையை அனுப்பும் முயற்சி தோல்வியுற்றதால், வான் எல்லை மீறப்பட்டு, பூமாலை நடவடிக்கையூடாக குடாநாட்டினுள் கால் பதித்த இந்திய நகர்வு, வேறொரு பாதையில் மறுபடியும் முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்களில் தென்படுகின்றன.

வன்னி மக்களை யுத்த களத்திலிருந்து அகற்றிவிட்டால், தமிழகக் கொந்தளிப்பு அடங்கிவிடுமென இந்திய அரசு எடைபோடுகிறது. அத்தோடு கலைஞருக்கும் சிக்கல் இல்லை. தமிழ் மக்களைக் காத்த பெருமை கூறி, 40 ஆசனங்களையும் அள்ளிச் செல்லலாம் என்று கற்பிதம் கொள்ளும்.

இதற்கு எதிர் மறையாக, மக்களை மீட்கும் பணி தோல்வியுற்றால், வழமைபோன்று "மனி தக் கேடய' விவகாரத்தைக்கூறி, விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி, தமிழக மக்களை சோர்வடையச்செய்து, கலைஞரைக் காப்பாற்றலாம்.
ஆனால், 1987 இல் போன்று, விடுதலைப் புலிகளுடன் மோதும் நிலை ஏற்பட்டால், தமிழக நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அதேவேளை, தற்போதைய நிலைவரத்தை இப்படியே நீடிக்கவிட்டால், புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, ஐ.நா. சபையின் நேரடித் தலையீடு தவிர்க்க முடியாமல் ஏற்படும் வாய்ப்பு உண்டென்பதை இந்தியா உணர்கிறது.

ஆகவே விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசையும், எவ்வாறு கையாள்வதென்பதில் பாரிய சிக்கலுக்குள் இந்தியா தற்போது அகப்பட்டுள்ளதென்று கணிக்கலாம்.

எவர் வேண்டுகோள் விடுத்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக்

கைவிடப்போவதில்லை. அதேபோன்று புலிகளை அழிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ போரை நிறுத்தப்போவதில்லை.

இத்தகைய உறை நிலையை எவ்வாறு உடைத்து விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தலாமென, இந்தியா வகுக்கும் உத்திகளின் புதிய பரிமாணம், விரைவில் வெளிவரலாமென ஊகிக்கலாம்.

போரைப் பின்னின்று நடத்துவதாக கருதப்படும் இந்தியாவுக்கு, புலிகளின் பலமும், அவர்களின் தற்காப்பு நிலைக்கான அரசியல் நோக்கமும் தெளிவாகப் புரியும்.
இதுவரை மேற்கொண்ட சமர்கள் வெற்றிப் பரப்புரைகளெல்லாம், மக்கள் ஆதரவு சக்தியை மலினப்படுத்த மேற்கொண்ட தந்திரோபாய உத்திகளென்பதை இந்தியா உணரும். ஆனால், வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மறுவளமாகச் சிந்தித்தால், யுத்த வெற்றிக்கான சாத்தியம் அரிதாகத் தென்படுவதால், கேடயக்கதை கூறி, மக்களை பலவந்தமாக மீட்கும் பணியை தமது புதிய தெரிவாக இவர்கள் மேற்கொள்ள முனைகிறார்கள்.

ஆகவே மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தின் மூலத்தை பரீட்சித்துப் பார்க்கும் நேரமிது.இந்தியா மேற்கொள்ளப்போகும் அவசர நகர்வுகள் இறுகிப் போயுள்ள சமகால முரண்பாடுகளின் முடிச்சை அவிழ்க்கும்.


[நன்றி - சி.இதயச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீடு]

Saturday, February 21, 2009

சர்வதேசம் ஈழத் தமிழர்களிடம் எதனை எதிர்பார்க்கின்றது?

வன்னியில் தற்போது நடைபெற்று வரும் இன அழிப்பு நடவடிக்கைகளும், யுத்தச் செயற்பாடுகளும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முடிவாக அமைந்து விடுமோ என்றொரு ஐயப்பாடு இன்று ஒரு சில தரப்புகளில் தோன்றியுள்ளது.

அதேவேளை, இராணுவ வல்லமை மிக்கவர்களாகக் கருதப்பட்டு வந்த உலகில் முப்படைகளையும் கொண்ட ஒரேயொரு விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் பின்னடைவுகளுக்கு என்ன காரணம் என அறிந்து கொள்வதிலும் ஆர்வம் தோன்றியுள்ளது.

தமிழர் தாயகத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட, இராணுவ ரீதியில் பலம் ஓங்கிய நிலையிலேயே 2001 டிசம்பரில் விடுதலைப் புலிகள் சமாதானத்துக்கான பாதையைத் திறந்தார்கள். அதன் நீழ்ச்சியாக உருவான போர் நிறுத்த ஒப்பந்தம், அதன் விளைவாக ஏற்பட்ட குறுகிய சமாதானச் சூழல் என்பவை தமிழ் மக்களின் மனங்களில் ஏக்கத்துக்கு நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது.

இக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளும் தம்மை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக இனங்காட்டிக் கொண்டார்கள். பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு தமிழர் தரப்பு நியாயத்தைப் புரிய வைத்தார்கள். உலக நாடுகளும் தமிழர்களின் கவலைகளையும், நியாயமான கோரிக்கைகளையும் புரிந்து கொண்டது போன்று தென்பட்டது.

மறுபுறம், தமிழர்களின் தரப்பு நியாயத்தை மறுதலித்து விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக சர்வதேச அரங்கில் நிரூபிக்க சிங்கள தேசம் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டது. சிங்களத்தின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிய மேற்குலகம், தமிழ் சிங்கள மோதலுக்குக் காரணம் சிங்கள தேசத்தின் இனவாத அணுகுமுறை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதமே என்னும் முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்ததுடன் அந்த நாடுகளில் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளையும் முடக்கியது.

அரசுக்குள் அரசு என்ற நிலைப்பாட்டுடன் கிளிநொச்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஒரு நிர்வாகத்தை நடாத்தி வந்த புலிகளுக்கு சர்வதேச சமூகத்தின் இத்தகைய அணுகுமுறை புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருந்தது.

இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் இன முரண்பாட்டு மோதலில் சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் என இரு தரப்பார் மட்டுமே ஈடுபட்டு வந்த காலகட்டம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது. விரும்பியோ விரும்பாமலோ மூன்றாவது சக்தியாக சர்வதேச சமூகம் என்ற அடையாளத்துடன் மேற்குலகு - அயல் நாடான இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு - நுழைந்து விட்டது.

மோதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளதும், சிங்கள தேசத்தினதும் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக உள்ளது. தனித் தமிழீழம் அல்லது தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனிநாட்டுக்கு
இணையான ஒரு தீர்வு என்பதே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு.

உரிமைகள் எதுவும் வழங்கப்படாது முடிந்தால் முடியுமான அளவு தமிழர்களை அழித்தொழித்து விட்டு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக் கொண்டு தனது காலடியில் தமிழர்கள் அடிமைகளாகக் கிடக்க வேண்டும் என்பதே சிங்கள தேசத்தின் நிலைப்பாடு.

இதில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பது மேற்குலகின் நிலைப்பாடே.

சமாதான வழிகளூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனக் கூறிக் கொண்டே மோதலில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு தரப்பான சிங்கள தேசத்துக்கு ஆயுதமும் நிதியும் வழங்கி வரும் மேற்குலகம், மோதலில் ஈடுபட்டுள்ள மற்றைய தரப்பான புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்து விட்டு அவர்களின் செயற்பாடுகளை முடக்கிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் சிங்கள தேசம் ஈடுபட்டு வருவதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றை ஒப்புக்காகக் கண்டிக்கும் சர்வதேசம், தன்னைத் தொடர்ந்து சிறி லங்கா அரசுடனேயே அடையாளப்படுத்தி வருகின்றது. இதில் சம்பந்தப்பட்ட மேற்குலக நாடுகளுள் ஒரு சில நாடுகள் தத்தமக்கென தனித்துவமான நலன்களைக் கொண்டுள்ளன. மோதல் தீர்வு என்ற தலையங்கத்தின் கீழ் அவற்றைச் சாதித்துக் கொள்ளவும் முயன்று வருகின்றன.

இந்தியாவின் நிலைப்பாடும் அண்மைக் காலத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றது. தமிழர்களின் உரிமைகள் அபிலாசைகள் பற்றியெல்லாம் இந்தியாவுக்குக் கரிசனை இல்லை. இந்தியாவின் கரிசனை எல்லாம் விடுதலைப் புலிகள் முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்ட வேண்டும் என்பதே. அதற்காக - விளைவு பற்றிக் கவலையின்றி -தமிழர்களுக்கு எதிரான போரைத் தானே முன்னின்று நடாத்தி வருகின்றது.

இறுதியாக வெளிவந்த இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை மேலும் குழப்பகரமானதாக அமைந்திருந்தது. ஜனவரி மாத இறுதிப் பகுதியில் நோர்வே வெளியிட்டிருந்த அறிக்கை போரை நிறுத்துமாறு சிங்கள தேசத்தைக் கோரியிருந்தது. ஆனால், ஒரு வாரத்தின் பின்னர் பெப்ரவரி 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அறிக்கை விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற தோரணையில் அமைந்திருந்தது.

வன்னியில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய மனித அவலத்தை மையமாகக் கொண்டு சர்வதேச ரீதியான விழிப்புணர்வு ஒன்று உருவாகி, அதன் விளைவால் சிங்களம் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் உருவாகியுள்ள சூழ்நிலையில் வெளியாகியுள்ள இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை கவனத்தைத் திசை திருப்புவதாகவும், விவகாரத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் அமைந்துள்ளது.

வன்னி மக்கள் இன்று அனுபவித்து வரும் இன்னல்களுக்கு விடுதலைப் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களே காரணமெனவும், அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடும் என்ற கருத்துப் படவும் மேற்குலகம் பசப்பு வார்த்தைகளைக் கூறி வருகின்றது.

தப்பித் தவறி தமிழர்களாகப் பிறந்து விட்ட ஒரு சிலரும் கூட இத்தகைய பிரசாரங்களில் மயங்கி விடுதலைப் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தவும் போராட்டத்துக்கு அவர்கள் வழங்கும் ஆதரவைத் தடுத்து விடவும் முயன்று வருகின்றனர்.

இத்தகைய அறிக்கைகள் தொடர்பிலும், அவை தொடர்பில் குழப்பவாதிகள் ஒரு சிலர் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும் கூட விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

2002 போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் பெற்ற கவன ஈர்ப்புக்குச் சமமாக இன்றைய வன்னி அவலம் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இந்த அருமையான தருணத்தை தமிழ் மக்கள் - விசேடமாக புலம்பெயர் தமிழ் மக்கள் - நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் மேற்குலகின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்த போதிலும், விடயத்தை எமக்குச் சார்பானதாக மாற்றி எமது போராட்டத்தையும், போராட்ட அமைப்பையும் காக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ளது.

அது செய்யப்படக் கூடியதே என்பதற்கு நல்லதொரு உதாரணம் கனேடிய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திடீர் விவாதம். இது தவிர, புலம்பெயர் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள் வன்னி மக்களைக் காக்குமாறும் போர் நிறுத்தமொன்றை அறிவிக்குமாறும் கோரும் அறிக்கைகளை வெளியிட்டும் வருகின்றன.

மனிதாபிமான அடிப்படையிலான எந்தவொரு கோரிக்கையையும் சிங்கள அரசு கவனத்தில் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்த விடயமே. எனவே, இதனை எமக்குச் சாதகமாக்கிக் கொண்டு எமது பரப்புரைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதன் மூலம் மேற்குலகின் எதிர்பார்ப்பை எமக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேற்குலகு எமக்குச் சாதகமாக மாறும் பட்சத்தில் சிங்கள தேசத்தின் சார்பில் தமிழின ஒழிப்புப் போரைத் தலைமையேற்று நடாத்திக் கொண்டிருக்கும் இந்தியாவும் பணிந்தாக வேண்டிய சூழல் உருவாகியே தீரும் என்பது நிச்சயம்.

நன்றி:- சண். தவராஜா - நிலவரம் (13.02.09)

Wednesday, February 18, 2009

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச சமூகம் வகிக்கும் பாத்திரங்களும்

இன்றைய நிலையில் சோர்வடைந்து விடாமல் தெளிவுடன் இயங்க இவை போன்ற வாசிப்பு அவசியமாகும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்காளிகளாகச் செயல்படுவோருக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் ஆதர்சத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெவ் (Jeff) மற் (Mutt) (நல்ல பொலிசும் கெட்ட பொலிசும்) இவர்களின் செயல்பாடுகளும்

அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மிறன்டாவும் அரிசோனாவும் என்னும் வழக்கில் 1966 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் திருப்புமுனையான தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பில் அதிகாரத்தில் உள்ளோர் தமது அதிகாரத்துள் இருப்போரின் எதிர்ப்பினை முறியடிப்பதற்காக அவர்கள் கையாளும் முறைகள் பற்றிய சுவாரசியமான பந்தி ஒன்று காணப்படுகிறது.

" ...பலமுறை பாவிக்கப்படும் உத்திகளில் ஒன்று நட்பாகவும் நட்பின்றியும் நடந்துகொள்ளும் அல்லது ஜெவ் (Jeff) மற் (Mutt) என்னும் பாத்திரங்களின் செயல்பாடு . இவர்களில் மற் என்பவர் தீவிரமான விசாரணையாளர். சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என இவருக்குத் தெரியும். இதனால் இவர் தன் நேரத்தை விரயமாக்கப்போவதில்லை. இதுபோன்ற குற்றங்களுக்காக இவர் பன்னிரண்டுபேரை சிறையுள் தள்ளியுள்ளார். இந்தச் சந்தேக நபரையும் இவர் அவ்வாறே அனுப்ப உள்ளார். இதற்குமாறாக ஜெவ் என்பவர் இரக்கமான உள்ளத்தைக் கொண்டவர். இவருக்கு என்று ஓரு குடும்பம் உண்டு. இவரின் சகோதரர் இதுபோன்ற கடுமையான பூசலில் ஈடுபட்டவர். இவர் மற்றையும்(Mutt) அவரின் உத்திகளையும் ஏற்காதவர். ஆனால் மற்றினை(Mutt) எல்லா நேரமும் இவரால் கட்டுப்படுத்த முடியாது. இதனால் சந்தேக நபர் சடுதியான ஒரு முடிவை எடுப்பது புத்திசாலித்தனமானது. இந்த உத்தி இரு விசாரணையாளரும் இருக்கும்போது கையாளப்படும். இதன்போது மற்(Mutt) தனது பாத்திரத்தை நடிக்கும்போது ஜெவ் Jeff அமைதியாக இருந்து மற்டின்(Mutt) சில உத்திகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பார். ஆனால் ஒத்துழைக்குமாறு ஜெவ் Jeff தன் வேண்டுகோளை விடுக்கும்போது அந்த இடத்தில் மற்(Mutt) இருக்கமாட்டார்..."

இந்த வகையான ஜெவ்,Jeff மற்(Mutt) நடத்தையை சிலசமயம் "நல்ல பொலிஸ், கெட்ட பொலிஸ் " பாத்திர வார்ப்பு என அழைப்பர். இலங்கைத் தீவில் இடம் பெறும் முரண்பாடு தொடர்பாக சர்வதேச சமூகத்தால் கைக்கொள்ளப்படும் இந்தவகையான அணுகுமுறையை நாம் ஆராய்வது உதவியாக இருக்கும். புலிகளைச் சரண் அடையுமாறும் அதன் மூலம் தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பில் இருந்து வன்னி மக்களை பாதுகாக்க முடியும் எனவும் அண்மையில் மற்டின்(Mutt) உத்தியினை நோர்வே,அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,மற்றும் யப்பான் ஆகியோர் கையாண்டுள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பில் நோர்வே ( அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பில் ஒரு அங்கத்தவர்) ஒரு நல்ல பொலிசாகவும் அமெரிக்கா கெட்ட பொலிசாகவும் தமது பாத்திரங்களை வகித்தனர். இதில் நோர்வே மெதுவாகப் பேசிய ஜெவ். Jeff இவர் தமிழர்களின் உரிமைகள் சம்பந்தமாக வருடிக்கொடுக்கும் வார்த்தைகளைப் பேசினார். இதனால் ஜே,வி.பி போன்ற சிங்கள தேசியவாதிகளால் வெள்ளைப் புலிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதே சமயம் அமெரிக்கா கடுமையாகப் பேசும் மற்டின்(Mutt) பாத்திரத்தை வகித்தது. இந்தப் பாத்திரத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்களும் அமெரிக்க அரசாங்கத் திணைக்கள அதிகாரிகளும் அற்புதமாகச் செயல்படுத்தினர். உதாரணமாகக் கூறுவதாயின் 2006 ஆம் ஆண்டு நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் கொழும்பில் கடுமையான தொனியில் பேசினார். அவர் பேசும்போது

"... எங்களின் இராணுவ பயிற்சிகளாலும்,பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட செயல்திட்டங்களாலும், சட்டத்திற்கு எதிரான புலிகளின் நிதிசேகரிப்புக்களை தடைபடுத்துவதன் மூலமாகவும்,இலங்கை அரசு தன் மக்களைப் பாதுகாக்கவும் தன் நலன்களை தக்கவைப்பதற்கும் அவர்களின் வல்லமையை நாம் வலுப்படுத்தி உள்ளோம். புலிகள் சமாதான நடவடிக்கைகளை கைவிட முடிவெடுப்பின்,அவர்கள் வலிமையான ,மிகவும் ஆற்றல் வாய்ந்த அத்தோடு மிகவும் உறுதிமிக்க இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வர் என நாம் தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்கின்றோம். புலிகள் யுத்தத்திற்கு திரும்பின் அதன் விழைவுகள் பயங்கரமாக இருக்க நாம் விரும்புகின்றோம். " எனக் கூறினார். " United States Ambassador to Sri Lanka, Jeffrey Lunstead: The Return of the Ugly American? , 11 January 2006

தூதுவர் லன்ஸ்ரெட் கதைத்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டபின் ஜனவரி 2008 இல் சிறீலங்கா (புலிகள் அல்ல ) யுத்தநிறுத்த உடன்படிக்கையை விட்டொழித்து சமாதானத்தையும் கைவிட்டது. இதற்கான மற்டின் பதில் ஊமையானது. ஏனென்றால் அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யூலை 2005 இல் தர்மறட்னம் சிவராம்

" வாசிங்டனில் உள்ள ஒரு சி.ஜ.யே பிராந்திய ஆய்வாளர் யூலை 2001 இல் கூறுகையில் " புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் மீது பயமுறுத்தும் குண்டுவிச்சுக்களை செய்வதன் மூலம் அவர்கள்மேல் அழுத்தத்தைப் பாவித்து பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சு஻ௌழலை உருவாக்கலாம் " எனக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். (இலங்கையில் அமெரிக்காவின் கேந்திர நலன்கள்,தாரக்கி ,30 யூலை 2005) US Strategic Interests in Sri Lanka, Taraki, 30 July 2005

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பின் ஆரம்பக் கட்டங்களில் ,ஜரோப்பிய ஒன்றியம் ( இதில் நோர்வே அங்கத்தவர் அல்ல ) நோர்வேயின் ஜெவ்விற்கு ஆதரவான பாத்திரத்தை வகித்தது. அமெரிக்கா 1997 இலேயே புலிகள் மீது தடை விதித்தபோதும் ( 9/11 க்கு அதிக காலத்திற்கு முன்னரும் புஸ்சின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோட்பாட்டிற்கு அதிக காலத்திற்கு முன்பாகவும்) பிரத்தானியா 2001 இல் புலிகளின் மீது தடை விதித்தபோதும் ( இதுவும் 9/11 க்கு முன்னர்) ஜரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது ( 9/11 க்கு பின்னர் கூட) 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மே 2006 வரை தடை விதிக்கவில்லை. மாறாக மென்மையாகப் பேசும் ஜெவ்வின் பாணியில் ஜரோப்பிய ஒன்றியம் புலிகளை சமஸ்டி அமைப்புக்கள் பற்றி படிக்குமாறு ஊக்குவித்தனர். புலிகளின் தூதுக்குழுவினர் இதற்காக 2005 ஆம் ஆண்டு மார்ச்,ஏப்பிரல் மாதங்களில் ஜரோப்பிய தலைநகரங்களுக்குச் சென்றிருந்தனர். ஆனால் யார் யாருடன் கூட்டுச் சேர்வது என்ற கேள்வி கவனமாகத் தவிர்க்கப்பட்டது.

அத்தோடு ஜரோப்பிய ஒன்றியம் 7 பெப்பிரவரி 2005 இல் இடம்பெற்ற, புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான அரசியல் பிரிவின் தலைவரான கௌசல்லியனின் கொலையை தடுப்பதில் இருந்து தவறிவிட்டது. பெப்பிரவரி 2002 இல் கைச்சாத்தாகிய யுத்தநிறுத்த உடன்பாட்டின் பின்னர் கொலைசெய்யப்பட்ட கௌசல்லியன் புலிகளின் மிக மூத்த உறுப்பினருள் ஒருவர். இதன்பின்னர் புலிகளின் நிலைப்பாடுகள் கடுமையானது. ஆகஸ்ட் 2005 இல் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் கொலைசெய்யப்பட்டார். இதை புலிகளே செய்தனர் எனக் கூறப்பட்டது. ஆயினும் இது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

தனது ஜெவ் Jeff போன்ற அணுகுமுறை அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து தமிழ்மக்களின் சுதந்திரத்தை அடைவதற்கான புலிகளின் உறுதியில் திருப்பத்தை ஏறபடுத்தவில்லை என ஜரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கலாம். இதனால் புலிகள் மீதான திருகாணி மே மாதம் 2006 இல் முறுக்கப்பட்டது. இதனை நோர்வேயுடன் கலந்து உரையாடாது செய்திருக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை யுத்தநிறுத்தத்தில் அதிலும் முக்கியமாக கண்காணிப்புக் குழுவின் வேலைகளில் பாதிப்பினை ஏற்படுத்துமா என்பனபற்றி நோர்வேயுடன் பேசியிருக்கவேண்டும். இந்த இடத்தில் சீனாவில் 1948 முதல் 1952 வரை இந்தியாவிற்கான தூதுவராகவும் அதன் பின்னர் மைசு஻ௌர் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராகவும் இருந்த கே.எம். பனிக்காரின் 1956 இல் வெளியான இராசதந்திரக் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் என்னும் நூலில் கூறப்பட்டதை குறிப்பிடுவது பிழையாகாது.

" ....வெளியுறவுத்துறைக்கான அமைச்சர்களும் ,இராசதந்திரிகளும் தமது நாடுகளின் நிரந்தர நலன்கள் எவை என்பதை மெய்யாக விளங்கியிருப்பர். ஆனாலும் எதிர்காலத்திற்குத் தொடர்பான சாதாராண விசயங்களின் விழைவுகள் எல்லாவற்றையும் தெளிவாக ஒருவராலும் கண்டுகொள்ள முடியாது. ஸமொறின் மீதான பகையால் கொச்சின் மகாராஜா தனது மண்ணில் போர்த்துக்கேயருக்கு ஒரு வியாபார நிலையத்தை தாபிக்கவிட்டதன் மூலம் இந்தியாவின் வரலாற்றையே மாற்றும் காரியம் ஒன்றை செய்துவிட்டதை அவரால் எதிர்பார்த்திருக்க முடியாது. இதுபோல் றஸ்சியாவிற்குள் பெரும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கான தமது அங்கலாய்ப்பினால் தமது நாட்டிற்கூடாக அடைக்கப்பட்ட புகையிரதப் பெட்டியில் லெனினை றஸ்சியாவுற்குள் செல்ல அனுமதித்ததன் மூலம் (யுகப்புரட்சிக்கான) எந்தவிதமான சக்தியை அவர்கள் திறந்துவிடுகின்றனர் என எதிர்பார்த்திருக்க முடியாது. யேர்மனியர்களைப் பொறுத்தவரையில் அந்தநேரத்தின் முக்கியம் றஸ்சியாவின் எதிர்ப்பினை உடைப்பதாகும். இதற்காக லெலினை அனுப்புவது அவர்களின் ஞானத்தின் ஒரு வெளிப்பாடு எனக் கருதப்பட்டது..."

புலிகள் மீது தடை விதிக்கும் முடிபு " ஞானத்தின் ஒரு வெளிப்பாடு " என ஜரோப்பிய ஒன்றியம் (அவர்களுடன் நோர்வேயும்) எண்ணியிருக்கலாம். இதற்காகப் புலிகள் கண்காணிப்பு குழுவில் இருந்து ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் அங்கத்தவர்களை அகற்றுமாறு பதில் அளிப்பர் என்பதை அவர்கள் எதர்பார்க்காது இருந்திருக்கலாம். அது எதுவாக இருப்பினும் ஜரோப்பிய ஒன்றியத்தின் தடையுடன் ஜெவ்வும் Jeff மற்டும்(Mutt) எடுத்த நிலைப்பாடு ஒருங்குசேரத் தொடங்கியது. இந்த ஒருங்கிணைப்பின் கடுமையான பேச்சின் மற்(Mutt) அணுகுமுறை, புலிகளை சிங்கள இன அழிப்பு படையிடம் சரண் அடையுமாறும் இதன் மூலம் இந்த இனஅழிப்பு படையின் தாக்குதலில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்படலாம் என்பதும் இவர்களின் அறிக்கையில் தெரிகிறது.

இருந்தபோதும் நியமிக்கப்பட்ட தங்களின் பாத்திரத்தில் வெற்றிபெற வேண்டுமாயின்,தாங்கள் சுய நலத்தால் உந்தப்படவில்லை என்பதைக் காட்டவேண்டும் என்பது மற்டுக்குக்கூட(Mutt) தெரியும். உதாரணமாக அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் யூலை 2006 இல் இலங்லையை விட்டுச் சென்றபின் ஆசிய பவுண்டேசனால் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் சிரமப்பட்டு பின்வருமாறு கூறுகிறார்:

"... பனிப்போரின் முடிவுடன் இலங்கையில் இருந்த அமெரிக்காவின் தேவைகள் தேய்ந்து விட்டன...அரசியல் மற்றும் இராணுவு நலன்கள் பெரிதாக இல்லை. இலங்கையில் இராணுவத் தளங்களை நிறுவுதலில் அமெரிக்காவிற்கு ஒரு தேவையும் இல்லை. " (இலங்கையின் சமாதான முன்னெடுப்பில் அமெரிக்காவின் பாத்திரம்). இராசதந்திரத்தை தொழிலாக வரித்துக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் லனஸ்ரெட்டுக்கு பழைய பனிப்போரின் முடிவுடன் ஒரு புதிய பனிப்போர் ஆரம்பித்து விட்டது என்பது தெரியாது என்பதல்ல. " முத்துக்களின் கோர்வை : ஆசியக் கடலோரப்பகுதியில் எழுச்சிபெற்றுவரும் சீனாவின் அச்சுறுத்தலை சந்தித்தல் என்னும் அமெரிக்காவின் லெப்ரினன் கொலனல் கிறிஸ்தோபர் .ஜே. பேர்சனினால் யூலை 2006 இல் எழுப்பப்பட்ட கீழ்வரும் விசயங்களை இவர் அறிந்திருக்கவில்லை என்பதல்ல.
" இராணுவரீதியில் ,பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ,சீனாவிடம் இருந்து எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு உத்தரவாதமாகவும்,அதிஉச்ச இராணுவ வலுவை தக்கவைத்திருப்பதற்கான செலவை அமெரிக்கா தாங்கிக் கொள்ள வேண்டும். " முத்துக்களின் கோர்வையான " இந்தப் பகுதியில் பல பிராந்திய அரசுகளிடம் பரந்த ஆதரவைப் பெறத்தக்க நோக்குடன் அமெரிக்காவின் செல்வாக்கினை அகலமாக்கவும் ஆழமாக்கவும் வேண்டும். "

இத்தோடு 5 மார்ச் 2007 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 10 ஆண்டுகளுக்கான கொள்வனவு மற்றும் சேவைகள் உடன்பாடும் (தூதுவர் லன்ஸ்ரட்டுக்கு) இவருக்கு ஒரு சின்னக் காரியம் தானோ?

இதுபற்றி 9 மார்ச் 2007 இல் இந்து பத்திரிகையில் பீ,முரளீதர் றெட்டி கூறுகையில்:

"...அமெரிக்காவின் எல்லா குதர்க்க மற்றும் சுத்துமாத்துக்களின் மத்தியில் இது ஒரு இராணுவ அலுவல். அத்தோடு இதன் வெளிப்பாடு அமெரிக்காவின் நலங்களுக்கு சாதகமாக உள்ளது. அமெரிக்காவிற்கு இது இந்து சமுத்திரத்தில் ஒரு தளத்தினை ஒரு செலவும் இன்றி அல்லது மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொடுத்துள்ளது. இது உலக வல்லரசுடன் தனக்குள்ள செல்வாக்கினை பொதுவாக விளம்பரம் செய்யவும் ,குறிப்பாக புலிகளுடனான சண்டைக்கு பயன்படுத்தவும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவுகிறது ..."

ஜரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன்னர் நோர்வீஜியன் ஜெவ்வும் அமெரிக்க மற்டும்(Mutt) வேறு வேறான தொனியில் பேசினர். ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான். இன்று அவர்கள் வேறு வேறு தொனியில் இல்லாமல் ஒரே தொனியில் பேசுவது போல் உள்ளது. ஆனால் நோக்கம் மாறாது உள்ளது. அதாவது இந்து சமுத்திர பிராந்தியத்தில் மும்மூர்த்திகளின் (அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,யப்பான்) கேந்திர நலன்களைப் பெறுவதாகும்.

ஏனெனில், " யார் இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனரோ அவர்கள் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவர். 21 ஆம் நூற்றாண்டில் இந்தச் சமுத்திரம் ஏழுகடல்களுக்குமான திறவுகோலாகும். உலகின் தலைவிதி இந்தச் சமுத்திரத்தில்தான் நிர்ணயிக்கப்படும்." US Rear Admiral Alfred Thayer Mahan quoted by Cdr. P K Ghosh in Maritime Security Challenges in South Asia and the Indian Ocean, 18 January 2004

" ...இந்துசமுத்திரப் பிராந்தியம் 21 ஆம் நூற்றாண்டின் கேந்திர இருதய பூமியாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாட்டை 20 ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்த ஜரோப்பாவையும் வடகிழக்கு ஆசியாவையும் இது தகர்த்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வளர்ச்சிகள் மேற்கத்தைய தேசங்கள் சார்ந்த நிலையைக் குறைப்பதற்கும் அத்தோடு பலவான சக்திகளின் வருகைக்கும் வழிவகுத்துள்ளது .." Donald L. Berlin, Head of Security Studies, Asia Pacific Centre for Security Studies, Honolulu, Hawaii 13 December 2006

"... 17 ஆம் நூற்றாண்டில் இருந்தே உலக சரித்திரத்தில் இலங்கை கேந்திர முக்கியத்தை கொண்டிருந்தது. இது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்ஸ், பிரித்தானியர், இந்தியர் ஆகியோரை ஈர்த்திருந்தது. இப்போது நாம் இந்தவரிசையில் இன்னொரு அமைப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். அது " சர்வதேச சமூகம் " ஆகும். அணுவாயுத யுகம் ஒன்றில் அத்தோடு அணுவாயுத ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு திருகோணமலைத் துறைமுகம் அதிமுக்கியமானதாக உள்ளது. இந்தத் துறைமுகத்தின் ஆழம் நீர்மூழ்கி கப்பல்கள் றாடர் மற்றும் சொனர் என்பவற்றின் கண்களுக்குப் படாமல் ஒழித்துக்கொள்ள வசதியாக உள்ளது .." Strategic Significance of Sri Lanka’ - Ramesh Somasundaram of Deakin University quoted by P.K. Balachandran in Hindustan Times, 30 May 2005

நோர்வேயின் பயன்பாட்டு நாள் முடிவடைந்து விட்டது என அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,மற்றும் யப்பான் முடிவு செய்திருக்கலாம். அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்தபோது செல்வாக்கான சக்தியாக நோர்வே இருந்ததுபோல் இப்போ இல்லை என அவர்கள் எண்ணி இருக்கலாம். அத்தோடு புதுடெல்கியுடனான நோர்வேயின் உறவு நல்ல சமயத்திலும் ஆர்வமற்ற அரைகுறை உறவுதான். ஆனால் ஜெவ்வின் பாத்திரத்தை நோர்வேயால் தொடர்ந்து வகிக்க முடியாவிட்டால் இந்தப் பாத்திரத்திற்கான புதிய வேட்பாளர் யார்?. ஏனெனில் ஜெவ் Jeff மற்றும் மற்(Mutt) பாத்திரங்கள் பயனானவை என்பது மிறன்டாவும் அறிசோனாவும் என்ற வழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் புதுடெல்கி நோக்கி திரும்புவது சாலப் பொருத்தமானதாகும். இங்கு எடுத்த எடுப்பில் ஒன்றைக் கூறவேண்டும். அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் அமெரிக்க,ஜரோப்பிய,யப்பானிய நலன்களுடன் முற்றிலும் ஒத்தானது அல்ல. இது சம்பந்தமாக நான் செப்ரம்பர் 2006 இல் எழுதிய கறுத்த மணிக்கற்களும் வெள்ளை மணிக்கற்களும் என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தேன்:

"... இந்தோ சிறீலங்கா உடன்படிக்கையின் இணைப்புக்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள எதிர்மாறான நலன்களை 1987 இல் வெளிப்படுத்தியுள்ளது. அது 20 ஆண்டுகளுக்கு முன்பாக. அதன் பின்னர் பல காரியங்கள் நடந்துள்ளன. ஆனால் பல காரியங்கள் மாறவில்லை. இன்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையானது அதன் தற்போதைய ஒரே ஏக வல்லரசு நிலையை வலுப்படுத்துவதாகும். அதன் மூலம் ஏக வல்லரசு நிலையை நீண்ட காலத்திற்கு தக்க வைப்பதாகும். ( இதற்காக பல சக்தி தோற்றத்தை பேணல் என கொண்டலீசா றைஸ் கூறியுள்ளார்). இதன் அர்த்தம் ஏனையவற்றுடன் பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எழுச்சி பெறுவதை தடுப்பதாகும். மறுபுறம் நியூடெல்கியின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தளம் இந்தியப் பிராந்தியத்தில்க வெளிச் சக்திகளின் தனித்துவமான தலையீட்டு பாத்திரத்தை மறுப்பதாகும். அத்தோடு பல சக்திகளுடன் கூடிய உலகை உருவாக்குவதாகும்....

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் இறுதி நோக்கங்களில் உள்ள வேறுபாட்டைப் பார்க்கும்போது இலங்கை சம்பந்தமாகவும் புலிகள் சம்பந்தமாகவுமான அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கொள்கைகள் எல்லா நேரத்திலும் ஒத்திருக்காதது ஆச்சரியமானதொன்றல்ல. அதன் அர்த்தம் அமெரிக்கா இந்தியாவுடன் ஒத்துழைக்காது என்பதல்ல. அது ஒத்துழைக்கும். அது ஒரு வல்லரசு நிலையில் இருந்து ஒத்துழைக்க முயலும். அதனைச் செய்வதற்கு போதிய கருவிகள் தன்வசம் உண்டு என அமெரிக்கா நம்புகிறது. அவ்வாறான கருவிகளில் ஒன்று நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்தை முன்னெடுப்பாகும். சமாதான முன்னெடுப்புக்களுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆர்வமான ஆதரவையும் இந்தியாவின் ஊமையான ( அளந்த ஆதரவு) ஆதரவையும் இது விளக்குகிறது எனலாம்.

இலங்கைத் தீவின் தமிழ்ப் பகுதிகளில் இந்திய உளவுத்துறை றோ இரகசியமாக செய்யும் வேலைகளையும் ,சிங்கள அரசிற்கும் சிறீலங்காவின் அரசியல் கட்சிகளுக்கும் இந்தியா வழங்கும் உதவிகளையும் விளங்கிக்கொள்ள இது உதவுகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இதே நோக்கங்களை அடைய எண்பதுகளில் றோ,தமிழ் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தது. நண்பர்கள் காலத்திற்குக் காலம் மாறியபோதும் நீயூடெல்கியின் நலங்கள் மாறாது உள்ளதுபோல் தெரிகிறது.

இவற்றைக் கூறியபோதும் இன்று விடுதலைக்கான தமிழீழப் போராட்டத்தை (அத்தோடு புலிகளை ) பலவீனப்படுத்தும் பொது நோக்கில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபடலாம். ஆனால் அதன்பின்னர் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது இருப்பிற்கும் செல்வாக்கிற்கும் இவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போடும் வகையில் பலவீனப் படுத்தல் வேண்டும். இந்த வகையில் பலவீனப்படுத்தல் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரனை தனிமைப்படுத்தலும் அழித்தொழித்தலுமாகும். அதன்பின்னர் சீர்திருத்தப்பட்ட ஒரு தலைமையிலான புலிகள் அமைப்பை உருவாக்கலாகும். இது பற்றி இந்திய அரசின் அதிகாரியாக இருந்து இழைப்பாறிய பீ.ராமன் நீயூடெல்கியின் நியாயமான அபிலாசைகளை விளக்குகையில் 2005 இல் பின்வருமாறு கூறியுள்ளார்:

" இலங்கைத் தமிழர்களுக்கு பிரபாகரன் இல்லாத புலிகள் அமைப்பு ஒன்று வேண்டும் என நான் தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். எல்ரீரீ பிரபாகரனை தூக்கி எறிந்து ,பயங்கரவாதத்தையும் கைவிட்டால் இந்தியாவும் சிறீலங்காவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். புலிகளின் பாதுகாப்பு இல்லாது விடின் தமிழர்கள் சிங்கள வெறியர்களின் தயவில் வாழவேண்டும். தமிழ் மக்களுக்கும் மற்றைய புலித் தலைவர்களுக்கும் சாதகமான சமிக்கைகளை காட்டுவதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேன்டும். "

தமிழ் மக்களை சிங்கள இனவெறியர்களிடம் இருந்து காப்பாற்றும் ராமனின் கரிசனை உள்ளத்தை உருக்கும் .ஆனால் கவலைதரும் யதார்த்தம் என்னவென்றால் நீயூடெல்கியின் அனுசரணையுடன் செய்யப்பட்ட 1988 மாகாணசபைகள் என்னும் நகைச்சுவை நாட்டியமாகும். தனது கேந்திர நல்களுக்காக ,சிங்கள வெறியை தணிக்க எந்த அளவில் தமிழர்களின் நலன்களை பலியிட நியூடெல்கி விரும்புகிறது என்பதை இந்த நகைச்சுவையான மகாணசபைகள் நாட்டியம் காட்டுகிறது.

ஜெ.ஆர் ஜெயவர்த்தனாவின் அமெரிக்காவுடனான இறுக்கமே,எண்பதுகளில் தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கு நியூடெல்கி ஆதரவு அளித்தது என்ற அரசியல் யதார்த்த்தை அமெரிக்கா ஒருபுறம் மனதில் கொண்டுள்ளது. அதே சமயம் மசாசுசெஸ்ற் மாநிலத்தில் தமிழீழக் கொடியை ஏற்றியது போன்ற செயல்களால் அமெரிக்கா தமிழர் பக்கமும் தன் தலையை காட்டியிருந்தது. இன்று அதே அமெரிக்கா தமிழர்களின் ஞாயமான அபிலாசைகள் பற்றி தொடர்ந்தும் பேசுகின்றது.

மறுபுறத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனை வெற்றிகரமாக அழித்திபின்னரும்,புலிகளைப் பலவீனப்படுத்தியபின்னரும் சிறீலங்காவை வருங்காலத்திலும் தன் கைக்குள் வைத்திருப்பதற்கு தமிழர்களை துருப்பாக பாவிப்பதை இழக்கத் தயாராகவில்லை. இதனால் புதுடெல்கியும் தமிழர்களின் ஞாயமான அபிலாசைகள் பற்றி தாம் கரிசனை கொண்டுள்ளதாகப் பிரகடனப்படுத்துகிறது.

அத்தோடு இலங்கையில்,தமிழ் நாட்டில்,புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மாறுபட்ட கருத்துள்ள தமிழர்களிடையே இந்தியா ,தன் நலன்களைப் பாதுகாப்பதற்காக தனக்கு ஆதரவான வலைப்பின்னலை பின்னி வருகிறது. இந்தவகையான சர்வதேச கட்டுமானத்துக்குள் உள்ள சிறிய இடைவெளிக்குள்தான்,அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான தமிழீழ மக்களின் போராட்டம்.,தாங்கொணமுடியாத கொடிய துயரின் மத்தியிலும் வேதனையின் மத்தியிலும் தொடர்கின்றது. இந்த சர்வதேசக் கட்டுமானத்தைப் பாவித்துதான் சிறீலங்கா தமிழ் மக்கள் மீதான தனது கொடிய இனஅழிப்பை தொடர்கிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின் இன்று அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ சிறீலங்காவில் இருந்து விலகி மற்றவரரிடம் அதை விட்டு விடத் தயாராகவில்லை. அந்த வகையில் அதை சீனாவிடவும் விடமாட்டார்கள். அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்:

" நாங்கள் சிறீலங்காவுடன் மிகவும் புரிந்துணர்வான கூடிய உறவினைக் கொண்டுள்ளோம். (தமிழ்) மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற எமது அங்கலாய்ப்பில் இந்தியாவின் கேந்திர நலன்களுக்கான சிறீலங்காவின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அதிலும் இந்தத் தீவில் பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகள் காலுஃன்ற நிற்கின்ற நிலையில் நாம் சிறீலங்காவின் பாதுகாப்பிற்கான தேவைகளைப் பார்த்துக்கொள்வோம் என கொழும்பிற்குத் தெரிவித்துள்ளோம். அதன்பின் கொழும்பு வேறுபக்கம் திரும்பக்கூடாது எனவும் கேட்டுள்ளோம். எங்களின் கொல்லைப் புறத்தில் சர்வதேச சக்திகளுக்கு விளையாட்டுமைதானம் அமைக்க முடியாது "

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு 13 ஆம் சரத்தின்க திருத்தத்தைப் பற்றி நீயூடெல்கி தொடர்ந்து நகைச்சுவை நாட்டியம் ஆடுவது ஏனென்றால்,அதன் மூலம் சிறீலங்காவை 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துள் இழுப்பதாகும். அதனால் அந்த ஒப்பந்தத்துடன் இந்தியாவின் கேந்திர நலன்களை பாதுகாக்கும் அதன் இணைப்புக்களுக்கு உயிர்கொடுப்பதாகும். 1987 இல் போன்று இன்றும் 13 ஆம் திருத்தச் சட்டம் என்னும் நகைச்சுவை நாட்டியம் தமிழ் மக்களின் நலன்களுடன் சம்பந்தப் பட்டதல்ல. தனது கொல்லை சர்வதேச சக்திகளின் விளையாட்டுத் தளமாக மாறுவதை தடுப்பதை மட்டுமே கரிசனையாகக் கொண்டது.

முயற்சித்தும்,பரீட்சித்தும் பார்க்கப்பட்ட ஜெவ் Jeff,மற்(Mutt) அணுகுமுறைக்கு மீண்டும் திரும்புவோமாக. தற்போது நோர்வேயும் மற்றுடன்(Mutt) இணைந்து கொண்டதால் யார் இந்தப் புதிய மற் பாத்திரத்தை வகிக்கப் போகின்றார்? புதிய மற் நியூடெல்கியின் சம்மதத்தையும் பெறுவது உதவியாக இருக்கும் என்பது அமெரிக்காவிற்கும்,ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் யப்பானுக்கும் தெரியும்.

நோர்வேய்கான இடத்தைப் பிரித்தானியா எடுக்கலாம் என்பதை சிறீலங்காமீது அவதானிப்பைக் கொண்டவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாத் தெரியும். இலங்கைத்தீவில் இடம் பெறும் முரண்பாடு சம்பந்தமாக அமெரிக்காவிற்கும், ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் யப்பானுக்கும் உள்ள கேந்திர நலன்களை புதுடெல்கியின் நலன்களுடன் உருக்க பிரித்தானியாவை விட வேறு நாடுகள் உண்டா? பிரித்தானியா இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டது. அத்தோடு கடந்த பல ஆண்டுகளாகத் தனது பழைய காலனித்துவு நாடுகளில் அது செல்வாக்கான வலைப்பின்னல்களைக் கட்டி வளர்கத்துள்ளது. இந்த இடத்தில் பெப்பிரவரி 2001 இல் பிரித்தானியா புலிகள்மீது தடைவிதித்ததற்குப் பின்னால் நியூடெல்கி வகித்த பாக்திரத்துக்கு லக்ஸ்மன் கதிர்காமர் பகிரங்கமாகவே நன்றி கூறியதை ஒருவர் நினைவு கொள்ளலாம். அத்தோடு இராசதந்திர உலகிலும் இலவச மதிய உணவு என்று ஒன்று இல்லை.

உலக விவகாரங்களில் தனக்குள்ள தனித்துவமான பலத்தை சுட்டிக்காட்ட பிரித்தானியா தவறுவதில்லை. அது ஜக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவர். ஜரோப்பிய ஒன்றியத்தின் ஒரு அங்கத்தவர். அதிலும் முக்கியமாக இந்த விவகாரத்தில் அது இந்தியாவையும் உள்ளடக்கிய பிரித்தானிய பொதுநல அமைப்பில் ஒரு அங்கத்தவர். இலங்கைத் தீவில் இடம் பெறும் முரண்பாட்டில் தனக்கு விசேட பாத்திரம் உண்டு என பிரத்தானியா நம்புகிறது. புதிய சிங்கள காலனித்துவ ஆட்சியாளரிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு முன்னர் பிரித்தானியாவே காலனித்துவ ஆட்சியாளராக இருந்தது. அத்தோடு இன்று பிரித்தானியாவில் மத்தியவர்க்கத்தை சார்ந்த ஆங்கிலம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். தனது பாத்திரத்திற்கு உரம் ஊட்டுவதற்காக பிரித்தானிய அரசு பிரித்தானியாவில் உள்ள தமிழர்களை அணைத்தும் அவர்களின் இருந்து தெரிவு செய்யப்பட்ட பகுதியினர்க்கு அதிகாரத்தில் உச்ச்த்தில் இருப்பவர்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நியூடெல்கியின் கரிசனையை கருத்தில் கொண்டு இந்த அலுவலில் இந்திய வம்சாவழியான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பாத்திரத்தையும் வழங்கியுள்ளனர்.

"...ஈரானை ஆண்ட ஷா,தனது பிராந்தியத்தின் காவலாளராய் அங்கு காணப்பட்ட புரட்சிகர சவால்களை எதிர்கொள்ள தன்வசம் இரண்டு முக்கிய ஆயுதங்கள் இருந்ததாக ஒரு முறை சொன்னார். இதில் முதலாவது ஆயுதம் நேரிடித் தலையீடு. இது 1973 இல் ஓமான் மீது பாவிக்கப்பட்டது. அத்தோடு பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் அடக்கு முசூறயின்போது ஷா படைக்கரிவிகளையும் நிதி உதவிகளையும் வழங்கினார். இவரது இரண்டாவது ஆயதம் பல தேசிய இனங்களிடையே இருந்து எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை அடக்க கையாண்ட உள்ளகமான கவுழ்ப்பு. இந்த உத்தி கேடிஸ்தான் மீது பாவிக்கப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில் தேசிய விடுதலை இயக்கத்தை முறியடிப்பதற்காக அதனை ஒரு குறிப்பிட்ட வழியில் வளரவிடுவதாகும். இதில் கேடிஸ்தான் பற்றிய நடவடிக்கை செம்மையான ஒன்றாகும். கேடிஸ்தான் மீதான தன் நடவடிக்கை குறைந்த செலவானது என ஷா வெளிப்படையாகவே கூறினார். 30 மில்லியன் டொர்களுடன் வேலை முடிக்கப்பட்டது. தன்னைத் தானே அழிக்கும் வகையில் இவர் இலகுவாக கேடிஸ்தானை ஆதரித்தார். "

இதைக் கூறியபோதும் இது போல் இந்திய முகவர்களும் பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் ஓரு பகுதியினருடன் தமது தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக முன்பு ஈபீஆர்எல்எவ். ஈரோஸ் மற்றும் அமைப்புக்களுடன் தொடர்பானவர்களுடன் இத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதன் முலம் பிரித்தானியத் தமிழர் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையின் வெறும் கைக்கூலிகளாக மாறாது இருக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.

ஆகவே இணைத்தலைமை நாடுகள் மற் (Mutt) பாணியிலான அறிக்கையை விட்ட அதே நாளில் அமெரிக்க இராசாங்க செயலாளர் கிலாரி கிளின்ரனும் பிரத்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மில்பான்டும் தமது கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தமை தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா இணைத்தலைமை நாடுகளில் ஒன்று ,பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தினதும் ,இணைத்தலைமை நாடுகளிலும் ஒரு அங்கத்தவர் . இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை வரவேற்ற இவர்களுக்கு,அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் இன்னொரு அறிக்கைக்கான தேவை என்ன? தங்களின் அறிக்கையை தாங்களே வரவேற்பதா?

உண்மை என்னவென்றால் நோர்வேயினாலும் கைச்சாத்திடப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை,நோர்வேயின் ஜெவ் பாணியிலான பாத்திரத்தையும் மாற்றுவதையும் காட்டுகிறது. அமெரிக்க பிரித்தானிய கூட்டறிக்கை இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை வரவேற்றபோதும் அதன் தொனி மென்மையாக உள்ளது. அத்தோடு பிரித்தானியாவிற்கு ஜெவ் பாணியிலான பாத்திரத்தை அளிப்பது போல் உள்ளது. அமெரிக்க பிரித்தானிய கூட்டறிக்கை புலிகளை சரண் அடையுமாறும் .ஆயுத்ததை போடுமாறும் ,வன்முறையை கைவிடுமாறும் வெளிப்படையாக வேன்டுவதை தவிர்த்துள்ளது. தெளிவின்மை ஆக்கபூர்வமானது என்பதை அமெரிக்க பிரித்தானிய அறிக்கை ஏற்றுக்கொண்டதுபோல் தெரிகிறது.

அத்தோடு இவ்வாறான ஜெவ் Jeff பாணியிலான அணுகுமுறை ஜக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற மக்கள் அவையில் 5 பெப்பிரவரி 2009 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

".. அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையேயான சண்டை அதிகம் மோசமாகியுள்ளது. அத்தோடு மக்களின் நிலை மோசமாகியுள்ளது. அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள்ளும் சண்டை தொடர்கின்றது. அத்தோடு சுடப்படாத இடமாக அறிவிக்கப்பட்ட வைத்தியசாலைமீது ஞாயிறு அன்று மூன்று முறை ஷெல் அடிக்கப்பட்டது. இந்த வாரம் மேலும் ஷெல் வீச்சுக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வைத்திய சாலையில் குறைந்தது 50 சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் பெண்களும் சிறுவர்களும் உட்பட பலர் காயம் அடைந்ததாகவும் ஜக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஒவ்வொரு நாளும் பல மக்கள் காயம் அடைகின்றனர்,இறக்கின்றனர். இந்த தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை தீவிரமாக மீறுவதாகும். வைத்தியசாலை மீதான ஷெல் தாக்குதல்களை ஞாயப்படுத்தும் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் உட்பட்ட எவரதும் நடவடிக்கைகள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தங்களின் படையினர் மீதான கூறப்படும் போசடிகள் சிறீலங்கா அரசால் விசாரிக்கப்படவேண்டும் எனவும் நாம் வேண்டுகின்றோம். வைத்தியசாலை மீதான ஷெல் தாக்குதல்களையும் மக்களின் சாவையும் முழுமையாக விசாரணை செய்வதை நாம் ஆதரிப்போம். விசாரணைக்கான முக்கிய பொறுப்பு போர்குற்றம் சுமத்தப்பட்டுள்ளோரின் அதிகாரிகளைச் சாரும். அந்த வகையான விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேன்டும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.. "

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை பெப்பிரவரி 4 இலும் ,அதே நாளில் அமெரிக்க ,ஜக்கிய இராச்சிய அறிக்கை வெளியிடப்பட்டதும் ,அதற்கு அடுத்த நாள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா மீதான விவாதம் நடற்ததும் தற்செயலானவையாக இருக்கலாம். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களில் சில பகுதியினர் தமது பரப்புரை முயற்சியால்தான் பாராளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றது என்றும் கூறலாம். இந்த இடத்தில் யார் யாருக்கு பரப்புரை செய்கின்றனர் என நான் பெப்பிரவரி 2008 இல் கூறியது பொருத்தமானதாக இருக்கலாம்:

".... அவர்களின் அரசாங்கத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுக்கு இருக்கும் அதே விளக்கம் தனிப்பட்ட காங்கிறஸ் அங்கத்தவருக்கோ,செனற்றருக்கோ,பாராளுமன்ற உறுப்பினர்க்கோ இல்லாது இருக்கலாம் என்பது உண்மைதான். அத்தோடு அவர்களின் அரசாங்கத்தின் முடிபிற்கான எல்லாத் தகவல்களும் அவர்கள் எடுக்கும் முடிபுக்கான மூலோபாய ஞாயங்களும் தனிப்பட்டோருக்கு கிட்டுவதில்லை. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக உந்தப்பட்டும் அதனால் தமது தொகுதியில் கணிசமான தமிழர்கள் இருப்பதாலும் அவர்கள் உடனடி கரிசனையால் செயல்படுவர்.

இதைக் கூறியபோதும் இது போன்றவற்றில் அவர்களின் நாடுகளின் கேந்திர நலன்களைப் பொறுத்து தனிப்பட்ட அங்கத்தவரின் பதில்கள் அமையலாம். முக்கிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமான காரியங்களில் தாம் எடுத்த முடிபு பற்றி அமெரிக்க அரசாங்க திணைக்கள,கனடிய வெளியுறவுத்துறை அமைச்சு,ஜக்கிய இராச்சிய வெளியுறவு மற்றும் பொதுநல அமைப்பு காரியாலயம் தனிப்பட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கம் அளிப்பது வுழமையான ஒன்றாகும்... "

இத்தோடு சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் (இதன் இணைத் தலைவர்களாக பற்றன் பிரபு,ஜ.நா விற்கான முன்னைய தூதுவர் தொமஸ் பிக்கெறிங்,அவுஸ்திதேலியாவின்வ முன்னைய வெளியுறவு அமைச்சர் ஹறத் எவன்ஸ் ஆகியோர் அடங்குவர்) பெப்பிரவரி 2008 ஆம் ஆண்டு அறிக்கையையும் மனதில் கொள்ள வேண்டும்.

" புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பிரிவினைக்கும் ,தீவிரவாதத்திற்கும் ஆதரவு இருக்கும்வரை சிறீலங்காவில் சமாதானம் இலகுவாக ஏற்படாது. சிறீலங்காவிற்கு வெளியே புலிகளுக்கு எதிராகக் கடுமையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும். சிறீலங்கா மீதான மேற்குலக நாடுகளின் கொள்கைகள் தமது நாட்டில் உள்ள தமிழ் சமூகத்திடையே புலிகள் அல்லாத அரசியல் குரல்களுக்கு இடம் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். கணிசமான தமிழ் மக்களைக் கொண்ட மேற்குலக நாடுகள் ,அவர்கள் சிறீலங்காவில் உள்ள சிறுபான்மையினரின் ஞாயமான அபிலாசைகளுக்கு ஆதரவு அளிக்கவும்,புலிகளின் அழிவுநோக்கிய அரசியலை ஏற்க மறுக்க வேண்டும் என அவர்களுக்கு சவால் விடவேண்டும் எனவும் ,புலிகளுக்கு எதிரானவர்களை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அத்தோடு சாமதானத்தை ஆதரிப்போர் தனிநாட்டுக்கோரிக்கையை கைவிடுவதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படவேண்டும். அதன்பின்னர் யுத்தக் குற்றங்களுக்காகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் புலிகளின் இன்றைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிகப்படவேண்டும். பிரபாகரனை அகற்றுவதற்காகவும் பயங்கரவாத முத்திரையை நீக்குவதற்காகவும் நாடுகள் படிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். "

அந்தச் சமயத்தில் தமிழ்நேசன் இது பற்றி கூறுகையில்:

"...சிறீலங்கா சம்பந்தமான இந்தச் சர்வதேச நெருக்கடிகளுக்கான அண்மைய அறிக்கையில் காணப்னபடுமட ஒரு அம்சம் என்னவெனில் இலங்லையிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் மேறகத்திய நாடுகளின் புவிசார் கேந்திர நலன்களைப் பற்றி குறிப்பிடாமையாகும். அத்தோடு சமச்சீரரற்ற பல்சகதி உலகின் அரசியல் பரிமாண்டகள் பற்றியும் இவர்கள் அறிக்கை எதுவும் கூறவில்லை. உதாரணமாகச் சொல்லப்போனால் இந்த வகையான அரசியல் பரிமாணமே கொசோவாவிற்கு மேற்பார்வைக்கு கட்டுபடபட்ட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இநதியாவின் புவிசார் நலன்களை குறிப்பிடுவதல் மூலம் (மேற்குலகின் நலன்கள் பவறிய) இவர்களின் மௌனம் கூடிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதில் இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில்:

" சிறீலங்காவில் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார பாதுகாப்பு நலன்கள் உண்டு. அத்தோடு இலங்கையில் எதிரிகள் ,முக்கியமாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. அத்தோடு இலங்லையில் பாகிஸ்தானின் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளால் இந்தியா கலக்கம் அடைகிறது. " ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலகின் பாதுகாப்புப் பற்றிய கரிசனைகளையும் ராஜபக்ச அரசின் சீனா சார்ந்த நகர்வையும் இவர்களின் அறிக்கை குறிப்பிடத் தவறிவிட்டது. சிறீலங்கா மீதான மேற்குலகின் கரிசனை நல்ல நோக்கும் பெரும்தன்மை கொண்டதும் என்ற தோற்றத்தையும் அது நீதியையும் ஸ்திரத்தையும் ஏற்படுத்த முயல்கிறுது என்ற கருத்தையும் தெரிவிக்கிறது. வேறு இடங்களில் கூறியவாறு இந்த அணுகுமுறையானது அறையில் உள்ள யானையை புறம்தள்ளுவது போலாகும்.

"சுதந்திரமான" சர்வதேச பிரச்சனைகளுக்கான குழுவினர் ( இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க,ஜரோப்பிய,யப்பானிய நலன்களைப் பேணும் கரிசனை கொண்ட) இரண்டு காரியங்களை மனதில் கொண்டிருப்பின் பலனாக இருந்திருக்கும்.

அவற்றில் ஒன்று

தமிழீழத்திற்கான போராட்டம் தமிழீழ மக்கள் தமது தாயகத்தை தாமே ஆள்வதற்கான அவர்களின் ஜனநாயக உரிமைகள் சார்ந்தது. இதில் கூட்டிக் குறைக்க ஒன்றும் இல்லை. இந்தப் போராட்டம் பரந்தமனம்கொண்ட சிங்கள ஆட்சுஹயை தழுவிக்கொள்வதற்கான போராட்டம் அல்ல. சுதந்திரத் தமழீழம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட ஒன்றன்று. ஆனால் சுதந்திரமான தமிழீழம் சுதந்திரமான சிறீலங்காவுடன் எந்த அடிப்படையில் இரண்டு சுதந்திரமான தேசங்கள் சமத்துவத்தில் சுதந்திரத்தில் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் இணைந்து கொள்வது எனப் பேசும். இறைமை என்பது கற்பல்ல.

இரண்டாவது

மதச்சார்பற்ற சுதந்திரமான தமிழீழத்தை தாபிப்பதில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மன உறுதி பல கண்டங்களில் கடல்களைத் தாண்டி வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு ஓரு வகையான கௌரவத்தையும் தன்மானத்தையும் அளித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கை போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெப்பிரவரி 5,2009 இல் இடம் பெற்ற விவாதத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிரித்தானியாவிற்கு (அத்தோடு மங்கலமாக சர்வதேச சமூகம் எனக் கூறப்படும் மும்மூர்த்திகளின்) உள்ள கேந்திர நலன்கள் பற்றி பிரஸ்தாபிக்கப் படாதது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்றன்று.

"....சிறீலங்காவில் தமக்கு உள்ள முரண்பாடான கேந்திர நலன்களை சர்வதேச பாத்திரங்கள் கூற மறுப்பதன் மூலம் உண்மையான காரியங்களுக்கு மேலாக ஒரு திரைச் சீலையை விரித்து அதன் மூலம் தீவில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதை தவிர்க்கின்றனர். தீக்கோழிபோல் நாம் எமது தலைகளை மண்ணில் புதைக்க முடியாது. அறையில் உள்ள யானையை தவிர்க்க முடியாது. சர்வதேச சக்திகளால் நீதியான முறையில் சாதானத்தை அடையும் நோக்கம் பெரிய குரலில் ஒலிக்கப்பட்டபோதும் அவர்களின்உண்மையான அரசியல்,அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான தமிழீழப் போராட்டத்தின் நீதியை ஏற்க மறுக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள சிறீலங்காவின் இனப்படுகொலை பற்றி இணைத்தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் ,ஜனவரி 29 ,2009 இல் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என நான் எழுதியதை மீண்டும் கூறலாம்:

" சிங்கள சிறீலங்கா தனது ' சமநிலை வலுமையை ' கையாளுவதன் மூலம் தீவின் பகுதிகளை (அத்தோடு அதைச் சு஻ௌழவுள்ள கடல்களையும்) இந்தியா,அமெரிக்கா,சீனா என்பவைக்கு கையளித்துள்ளது. திருகோணமலை எண்ணைக் குதத்தில் இந்தியா,அதேசமயம் திருகோணமலையில் சீனாவின் நிலக்கரி மூலம் எரிக்கப்படும் மின்சார உற்பத்தியை காண்கிறோம். ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கான சீனாவின் திட்டம் ஒருபுறம். அதே சமயம் அதே ஹம்பாந்தோட்டையில் அமெரிக்காவுடனான கடல்படைப் பயிற்சிக்கான முன்னெடுப்பு ( இந்து சமுத்திரத்தில் சீனாவின் இருப்பை தக்கவைக்க). மன்னார் கடலில் எண்ணைவள கண்டுபிடிப்பிற்கு இந்தியாவிற்கு பிரத்தியேக அனுமதிப் பத்திரம். அதே சமயம் அதேபோல் சீனாவிற்கும் அதே உரிமை. தீவில் அஈரிக்க வானொலியின் தொடர்ச்சியான இருப்பு. அத்தோடு மார்ச் 5,2007 இல் செய்யப்பட்ட,அமெரிக்காவுடனான 10 வருட கொள்வனவு மற்றும் சேவைகளுக்கான ஒப்பந்தம்.

சிறீலங்கா தானும் 'சமநிலை வலுமையை " கையாள முயற்சிப்பது அமெரிக்காவிற்கு ஒரு வகையில் சினமூட்டுகிறது. இதனை சிறீலங்காவிற்கு தனிப்பட்ட முறையில் அது தெரிவித்துள்ளது. அதாவது சிறீலங்கா ஒரு வல்லரசு அல்ல. வல்லரசுபோல் அது பாவனை செய்யக்கூடாது. அமெரிகாவில் உள்ள நபர்களால் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதான எச்சரிக்கை அவரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்களுடன் ஒத்துழைக்க வைக்கும். அது நடக்கும்போது அவர்மீதான வழக்கு எச்சரிக்கையும் இயற்கை மரணம் அடையும். மாறாக ராஜபக்சவின் இடதுசாரிசார்பான வாக்காளர்தளம் அவரை வெளிப்படையாக அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடவிட மறுத்தால் ,அமெரிக்காவிற்கு ஏற்ற,தமிழர்களை தொடர்ந்தும் ஆளுகின்ற மற்றைய சிங்களத் தலைவர்களை கொண்டுவருவர். ஆனால் ராஜபக்ச கூட்டம் தமது இன அழிப்பை சாதிப்பதன் முன்பு அல்ல.

இந்தச் சு஻ௌழ்ச்சிகளை ஜனாதிபதி ராஜபக்சவும் ,அதிகாரத்தில் உள்ள மற்றவர்களும் அறியாததல்ல. அறிந்தபடியால்தான் லசந்த விக்கிரமறட்ன கொலை செய்யப்பட்டார். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. அத்தோடு இனஅழிப்பு நடவடிக்கை முடிந்தபின்,தமிழரின் எதிர்ப்பு அழிக்கப்பட்டபின்,தமிழ் மக்களை தொடர்ந்தும் ஆழ வேறு தலைமைகளை உருவாக்க சர்வதேச சமூகத்தால் பாவிக்கப்படக்கூடியவர்களையும் ராஜபக்ச அழித்து வருகிறார். ஏனென்றால் 60 வருட இன அழிப்பு நடவடிக்கை காட்டுவது என்னவென்றால் சிங்கள இனவெறியும் அதன் கரையச் செய்யும் நிகழ்ச்சி நிரலும் ராஜபக்சவின் பிரத்தியேகமான ஒன்றல்ல.

ஆகவே சர்வதேச சமூகம் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கும் உலகம் பூர்வான தமிழ்மக்களின் வேண்டுதலுக்குப் பதிலாக தலையிடுவதுபோல் காட்ட முன்,தமிழர்களின் எதிர்ப்பு கணிசமான அளவில் பலவீனப்படுத்தப்படும்வரை அல்லது அழிக்கப்படும்வரை காத்திருக்கும். இதே சமயம் தமிழர்களின் இவ்வாறான உலகம் தழுவிய வேண்டுகோளை சர்வதேச சமூகம் வரவேற்கும். இவை சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தி உதவியுடன் கூடிய முடிவான தலையீட்டிற்கும் அத்தோடு கூடிய முரண்பாட்டு தீர்வல்ல முரண்பாட்டு உருமாற்றம் என்ற மந்திரத்திற்கும் வழிவகுக்கும். அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து அவர்கள் விடுதலை கேட்கும்போது அவர்களுக்கு கேக்கை கொடுக்கும். கைப்பற்றப்பட்ட மக்கள் எதைப் பெறினும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எல்லாருக்கும் போதுமான கேக் இல்லாது விடினும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் எதிர்ப்பு கணிசமாக பலவீனப்படுத்தப்படும்வரை காத்திருந்த மும்மூர்த்திகள் (அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,யப்பான்) தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது கேந்திர நலன்களுடன் ஒத்துழைக்க சிறீலங்காமீது அழுத்தம்போட கரிசனை காட்டுகின்றனர். இவர்களது கேந்திர நலனுக்கு அங்கு ஸ்திரத்தன்மை வேண்டும். இனஅழிப்பு ஸ்திரத்தன்மைக்கான வழி அல்ல என்பது மும்மூர்த்திகளுக்குத் தெரியும். ஆகவே வழமைபோல் மனித உரிமைகள்,மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கான கருவிகளாக மீன்டும் முன்னுக்கு வந்துள்ளது.

மும்மூர்த்திகளை எதிர்நோக்கும் அரசியல் யதார்த்தம் என்னவெனில் ,ஜனாதிபதி ராஜபக்ச தனது இனஅழிப்பு யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து அதன்பின்னரும் அதிகாரத்தில் இருப்பாராயின் ,மும்மூர்த்திகள் சிறீலங்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதற்கான ஒரு முக்கிய நெம்புகோலை இழந்து விடுவர். அந்த வகையில் நியூடெல்கியும்தான்.

அதனால்தான் இனப்படுகொலைக்கான குற்றத்திற்கு ஜனாதிபதி ராஜபக்சவிற்கும் அவரது குழாத்திற்கும் எதிரான மிரட்டல்கள். பொதுநல அமைப்பில் இருந்து வெளியேற்றும் மிரட்டல்கள். மக்களைக் காக்கும் உரிமை (ஆர்2பீ) கொள்கையின் அடிப்படையில் தலையிடும் மிரட்டல்கள். அதன்மூலம் மும்மூர்திகளின் வழியிலான சமாதானப் படை / மனிதாபிமான குழுக்கள் என்பவற்றை தீவில் கொண்டுவரல். இவற்றின் முலம் ஜனாதிபதி ராஜபக்சவின் உள்ளூர் வாக்குவங்கி அவரை அமெரிக்கா சாரத் தடையாக இருக்குமாயின் அவர்களுக்குச் சார்பான சிங்கள அரசாங்கம் அமைக்கப்படலாம்.

இதனால்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரது அதிகாரிகளும் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் அடிக்கடி சந்திக்கின்றனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்ததில் உருவாக்கப்பட்டுள்ள அமைதி குலைக்கிற சமநிலை வலுமையால் ஏற்பட்டுள்ள இடைவெளியை தமது நலன்களைப் பேண இந்தியா முயற்சிக்கிறது. இதற்காக இந்தியா 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிய தனது பகிரங்க ஈடுபாட்டை தொடர்ந்து கூறுகிறது. இதனை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்படிக்கையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் பற்றி அதேபோல் பகிரங்கமாகக் கூறுவதில்லை. அதே சமயம் இந்தியாவும் தனது உள்ளூரில் வளர்ந்த ஜெவ்வை ( தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதிபோல்) சிங்கள சிறீலங்காவின் இனஅழிப்புப் பற்றியும் ,யுத்த குற்றங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட சத்தங்களைப் போடுமாறு உற்சாகப்படுத்துகிறது. 2006 இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றபோது சிறீலங்கா விசயத்தில் மத்திய அரசின் கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கையும் என்று சும்மாவா கூறினார். கருணாநிதியும் ,நியூடெல்கியும் வேறு தொனிகளில் பேசலாம் ஆனால் நோக்கம் ஒன்றுதான்.

சிறீலங்காவின் அன்பான ,உண்மையான நண்பனான சீனா சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்வோரின் ஜெவ்,மற்,(Mutt) பாத்திரங்களின் நடத்தையை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது கேந்திர முத்துக்களில் ஒன்று தொடர்பாக,தொடர்ந்தும் கரிசனையோடு அவதானிக்கும் என ஒருவர் கற்பனை பண்ணலாம்.

தங்கள் நலன்களையே பாத்துக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் ஜெவ்,மற்(Mutt) பாத்திர நடத்தையானது கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளும் துன்பங்களும் இன்று கூட ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) ஏற்றுக்கொள்ளாதது பகிரங்கமாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் 1981 இல் அமெரிக்க மசாசுசெற்ஸ் மாநிலத்தில் அழகாக வெளியிடப்பட்ட அந்தப் பிரகடனத்தின் நீதியை ஜெவ்வோ மற்றோ ஏற்கமாட்டார்கள். அநதப் பிரகடனம் வருமாறு:

" ...ஆதிகாலத்தில் இருந்து வேறான மொழிகளையும்,சமயங்களையும்,பண்பாட்டையும் அத்தோடு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பையும் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் கொண்டிருந்தது. இந்த இரண்டு வேறான தேசங்களிடையே இருந்த வேறுபாட்டை அறியாத பிரத்தானியர் காலனித்துவ நிர்வாக இணைப்பிற்காக ஒரு ஆட்சியை நிர்ப்பந்தமாக ஏற்படுத்தினர் . அத்தோடு,

எதிர்பார்த்தவண்ணம் 1948 இல் பிரித்தானியர் தீவை விட்டு அகன்றபோது,அதன் விழைவாக விருப்பம் அற்ற இரண்டு தேசங்கள் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் தள்ளப்பட்டனர். ஜனநாயக கோட்பாடுகளை பாழாக்கிய சிங்களவர் தமிழ் மக்களை ஆளும் புதிய எசமானார்கள் ஆனார்கள். அதனால்

மசாசுசெட்ஸ் மக்கள் சபை தமிழ் தேசத்தின் இறைமை கொண்ட வேறான தமிழீழ அரசினை மீள தாபிப்பதற்கும்,உருவாக்குவதற்குமான விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிக்குமாறும்,தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பகிரங்கமாக அங்கீகரிக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதியையும்,அமெரிக்காவின் காங்கிறசையும் இத்தால் வேண்டிக்கொள்கிறது.

தங்கள் நலன்களையே பாத்துக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் ஜெவ் ,மற்றின்(Mutt) நடத்தைகள் பகிரங்கப்படுத்தப்படும் ஏனெனில் ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) 1976 இல் காந்திய தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் கூறிய அந்த நிலைத்திருக்கும் உண்மையை ஏற்க மாட்டார்கள். அவர் கூறுகையில்:

காலம் காலமாக இந்த நாட்டில் சிங்களவர்களும் தமிழர்களும் அன்னிய ஆட்சியின் கீழ் வரும்வரை தனித்துவமான இறைமை கொண்ட மக்களாக வாழ்ந்தனர். தங்களின் சுதந்திரத்தையும் மீட்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தமிழர்கள் முன்னுக்கு நின்றார்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக ஜக்கிய இலங்கைக்குள் சிங்களவருக்குச் சமமாக எமது அரசியல் உரிமைகளை பெறுவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

தங்கள் சுதந்திரத்தில் இருந்து வரும் அதிகாரத்தைப் பாவித்து எல்லாச் சிங்கள அரசாங்கங்களும் எமது அடிப்படை உரிமைகளை மறுத்து எம்மை ஆளப்படுவோராக தள்ளியுள்ளனர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான இறைமையைப் பாவித்தே இந்த அரசாங்கங்கள் இதனைச் சாதித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை தமிழீழத்தேசம் ஏற்கனவே தமிழ் மக்களிடம் உள்கள இறைமையை பாவித்து விடுதலை அடையவேண்டும் என எனது மக்களுக்கும் ,நாட்டிற்கும் அறிவிக்க விரும்புகின்றேன். "

சுருக்கமாகவும் நேர்மையாகவும் கூறுவதாயின் : சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்வோரது தங்கள் நலன்களை மட்டும் கவனிக்கும் ஜெவ்,மற(Mutt)க பாத்திரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் ,ஏனெனில் இணைத்தலைமை" மற்"(Mutt) சிங்கள இனஅழிப்புப் படையிடம் சரண் அடையுமாறு கூறுகையில் பிரித்தானிய "ஜெவ் "அந்த சிங்கள இனஅழிப்புப் படையினருக்கு எதிரான யுத்த குற்றங்கள் பற்றி ஓலமிட தயாராக உள்ளது. ஆனால் ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) தமிழீழத்தின் சுதந்திரத்திற்காக இன்னமும் கதறத் தயாராகவில்லை.

ஆனால் கடந்த பல தசாப்தங்களாக ஆழமாகவும் அகலமாகவும் விரிவுபெறும் சிங்கள இனத்துவ தேசியத்திற்கு எதிராகப் போராடும் தமிழீழ மக்களுக்கு அவர்களின் குற்றச் சாட்டு இனப்படுகொலையாக இருப்பினும் அவர்களின் போராட்டம் அன்றும் இன்றும் விடுதலைக்காகவே. அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே.

" மற்ற தேசங்கள் போராட்டங்களாலும்,யுத்தங்களாலும் ,வேதனைகளாலும் இரத்தக் கண்ணீராலும் வென்றவற்றை நாங்கள் கடுமையான தியாகங்களைச் செய்யாமல் ,ஊடகவியலாளரின் பேனா மையைக் கொண்டும்,மனு தயாரிப்பவரின் உதவியுடனும் சொற்பொழிவாளரின் வல்லமையைக் கொண்டும் சுலபமாகச் சாதித்திட அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது ஓரு வீண் கனவாகும். " சிறீ அரபிந்தோ

"...தேசிய ஞாபகங்களைப் பொறுத்தளவில் வெற்றிகளைவிட துன்பங்கள் மிகவும் பெறுமதியானவை,ஏனெனில் அவை கடமைகளை வலியுறுத்துகிறது. அத்தோடு ஓரு பொது முயற்சியை வேண்டி நிற்கிறது. ஆகையினால் ஒரு தேசம் ஒரு பெரும் அளவிலான கூட்டான உணர்வு. அது கடந்த காலத்தில் ஒருவர் செய்த தியாகங்களையும் வருங்காலத்தில் ஒருவர் செய்ய தயாராக இருக்கும் தியாகங்களின் உணர்வையும் உள்ளடக்கியது. " தேசம் என்றால் என்ன? ஏனெஸ்ற் றினன் 1882.

இக்கட்டுரை தமிழ்நேசன் இணையத்தளத்தில் திரு. நடேசன் சத்தியேந்தரா அவர்களால் எழுதப்பட்ட The Jeff and Mutt Act என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம்
ம.தனபாலசிங்கம்.
சிட்னி,அவுஸ்திரேலியா

Sunday, February 15, 2009

இந்தியாவே இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் உனக்கு.....

1)

'ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்" என்ற புண்ணியவான் ராஜீவ் காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஒரு இந்திரா காந்தியின் உயிருக்குப் பழியாக மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால், ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.

தான் உருவாக்கிய பிந்தரன்வாலேயைக் கொன்றொழித்ததின் மூலம் சீக்கிய மக்களின் இனவிடுதலைப் போரை ஒடுக்கி விட்டதாக நினைக்கும் இந்தியப் பேரரசு, ஒரு பிந்தரன் வாலேயைப் போலவே பிரபாகரனையும் ஈழ விடுதலைப் போரையும் நினைக்கிறது.

அதனால்தான் நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுத்து எப்படிச் சுட வேண்டும் என குறியும் பார்த்துக் கொடுக்கிறது இந்திய ராணுவம்.

இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய அவமானகரமான நிகழ்வுக்குப் பிறகு இந்தியா இலங்கையில் தலையிட்டதில்லை என்பதெல்லாம் வடித்துக் கட்டப்பட்ட பொய்.

அது நேற்றும் இன்றும் நாளையும் இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனியாகவே வைத்திருக்கும்.

அமெரிக்காவிற்கு எப்படி இந்தியாவோ அது போல தென்கிழக்கில் இந்தியாவின் நுகர்வு வெறிக்கு பலியான நாடுதான் இலங்கை.

இந்து மாகா சமுத்திரமும் அதை அண்டிய நாடுகளும் தென் கிழக்கும் இருக்கும் வரை இந்தியாவின் போர் வெறி ஓயப்போவதில்லை.

ஏதோ ஒரு வகையில் யாராவது ஒரு தரப்பினர் மூலம் இலங்கையின் நிம்மதியைக் குலைப்பதிலும் இனவாதத் தீயை ஊதி விட்டு வளர்த்தெடுப்பதிலுமே இன்றைய இந்தியாவின் இருப்பு அடங்கியிருக்கிறது.

தென்கிழக்கில் ராணுவ மேலாண்மையும் ஆக்கிரமிப்பு ஆசையிலிருந்துமே இந்தியா ஈழ விடுதலைப் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்தி வருகிறது.

இலங்கை பேரினவாத அரசைப் பயன்படுத்தி ஈழ மக்களை அச்சுறுத்தி வருகிறது.

எண்பதுகளில் உருவான ஈழ விடுதலைப் போராளிக் குழுக்களை தங்களின் பிராந்திய நலன் நோக்கிலேயே நடத்தினார்கள்.

தங்களின் விருப்பங்களுக்கு ஆட்பட்டு அடியாள் வேலை பார்க்கும் கூட்டமாக போராளிக் குழுக்களை மாற்றியதன் விளைவுதான் சகோதரப்படுகொலைகள்.

அந்தக் கொலைகளின் சூத்திரதாரி இந்தியாவே.

திம்பு பேச்சுக்களின் முடிவில் ஒரு குழுவுக்குத் தெரியாமல் இன்னொரு குழுவுக்கு ஆயுதம் கொடுத்து ஈழத்தின் கிழக்குக் கரைகளில் இறக்குவதும். தங்களின் போலி ராணுவ புரட்சிக்கு ஈழப் போராளிகளை பயன்படுத்துவதுமாக போராளிகளை கைக்கூலிகளாக மாற்றினார்கள்.

ஈழ மக்களின் விடுதலைப் போருக்காக இந்தியாவின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வந்த விடுதலைப் புலிகளோ இந்தியாவின் அடியாட்களாக மாற மறுத்தனர்.

விளைவு இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்கிய குழுக்களுக்கும் ஈழ மக்களின் விடுதலைப் போருக்கு மட்டுமே போராடிய விடுதலைப் புலிகளுக்கும் தவிர்க்க முடியாமல் சகோதர யுத்தம் தொடங்கியது.

அன்றைய சகோதரப் படுகொலைகளில் புலிகள் வெற்றி பெற்றார்கள்.

ஒரு வேளை புலிகள் கொல்லப்பட்டு இன்னொரு அமைப்பு அதில் வெற்றி பெற்றிருந்தால். அந்தக் குழுவால் ஈழ மக்களின் சுதந்திரப் போரை முன்னெடுத்திருக்க முடியாது மாறாக இந்தியாவின் அடியாளாக இருந்து இலங்கையின் இன முரணைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சனையை தீரவிடாமல் நீரூற்றி இந்தியாவின் விருப்பங்களை ஈடேற்றும் ஒரு ஆயுதக் குழுவாகவே அது இருந்திருக்கும்.

ஆனால் புலிகள் ஒரு பக்கம் இந்தியாவுக்கும் அடிபணியவில்லை. இலங்கைக்கும் அடிபணியவில்லை.

விளைவு இந்தியாவால் புலிகளின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆக, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து புலிகளை அழித்து விட்டு பழைய பாணியில் ஈழத் தமிழ்த் தேசிய ராணுவம் என்கிற பெயரில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, இலங்கை அரசை இனப் பிரச்சனையிலிருந்து மீள விடாமல் தன் கட்டுக்குள் வைக்கலாம் என்றோ, அங்கு ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் துரோகக் குழுக்கள் மூலம் இனப்பிரச்சனையை அணைக்காமல் வளர்த்தெடுக்கலாம் என்றோ நினைக்கிறது இந்தியா இன்றைய தேதியில் இதுதான் உண்மை.

02.

சர்வதேச முயற்சிகளை குலைத்தது யார்?

ஆனையிறவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பொருந்திய போது நார்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் தொடங்கியது.

தமிழர் தாயகத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் புலிகள் தங்களின் நீதி நிர்வாக ஆட்சியை நிறுவி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதிகளின் ராணுவ ஆட்சிக்குள் வாழ்வதைக் காட்டிலும் தமிழ் மக்கள் நிம்மதியாகவே புலிகளின் ஆளுகைக்குள் வாழ்ந்தார்கள்.

ஒரு போராளி அமைப்பிற்கே உண்டான இயற்கையான பலவீனங்கள் எதையும் புலிகள் மக்களிடம் காட்டிக் கொண்டதில்லை. இலங்கை இனப்பிரச்சனையை ஆகக் கூடிய சுதந்திரத்துடன் தீர்த்து விடவே விரும்பினார்கள் புலிகள்.

ஆனால் இந்தியா?

இந்தியாவுக்கும் நார்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையா?

இந்தியா உண்மையிலேயே ஒதுங்கித்தான் இருந்ததா? என்றால் இல்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமாதானக் காலத்தில் புலிகளை பலவீனப்படுத்த இந்தியா இலங்கையுடன் கைகோர்த்திருந்தது.

இந்த சமாதானக் காலத்தில்தான் மேற்குலக நாடுகள் புலிகள் மீது தடைகளைக் கொண்டு வந்தார்கள்.

அது எப்படி? யுத்தம் நடைபெறும் காலமல்லாமல் சமாதானக் காலத்தில் பேச்சுவார்த்தை மேஜையில் பிரச்சனைக்குரிய இருதரப்பும் அமர்ந்திருக்கும் போது சமாதானத்தை முன்னெடுக்கிறோம் என்று வந்து அதோடு தொடர்புடைய நாடுகள் புலிகள் மீது தடை கொண்டுவரும் என உங்களால் சிந்திக்க முடியும் என்றால் இந்தியா இலங்கையோடு இணைந்து புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுத்த துரோகத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

நார்வே முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு தயாரித்த தீர்வுத்திட்டங்கள் எல்லாமே டில்லி ஆட்சியாளர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்ததில்லை.

தயாரிக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட எல்லா கோரிக்கைகளுமே பரிந்துரைகளுமே இந்தியா ஆட்சியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது பாரதீய ஜனதா பார்ட்டியின் வாஜ்பாய்.

ஈழத்தின் அமைதி குறித்த எந்த பார்வையும் இல்லாத பி.ஜே.பி வழக்கம் போல் அதை பிராந்திய நோக்கில் அணுகியது.

ஆனால் 2004 மே மாதம் காங்கிரஸ் அரசின் கூட்டணி சர்க்கார் ஆட்சிக்கு வந்து மன்மோகன் சிங் பிரதமர் ஆன போது நார்வேயின் கைகள் கட்டப்பட்டன.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார நலன்களில் பிரதான காரணி வகிக்கும் ஏ9 சாலை மூடப்பட்டதோடு சமாதான முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டது.

அத்தோடு இந்தியா கொடுத்த அழுத்தத்தில் இலங்கை முன்னெடுத்த தடை நடவடிக்கைகள் வெற்றியளித்தது.

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை மட்டுமல்லாமல் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் முடக்கியது.

நான்காண்டுகால அமைதி இந்தியாவின் முயற்சியால் முடிவுக்கு வந்தது.

அதற்குள் கருணாவையும் அமைப்பிலிருந்து வெளியேற்றி தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை இந்தியா வகுத்துக் கொடுக்க அதுவும் ஈடேறியது.

கிழக்கை மீட்டு இந்தியாவின் செல்லப்பிள்ளையான பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தியது. இன்று பிள்ளையானுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருக்கிறதோ இல்லை இந்தியாவின் ஆதரவு இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் பெயரில் தன் வியாபாரத்தை கடைவிரித்திருக்கிறது இந்தியா.

கருணா இலங்கை அரசின் தீவீர விசுவாசி ஆன போது பிள்ளையானை இன்று தன் கைக்குள் வைத்துக் கொண்டு கிழக்கில் கபடியாடிக் கொண்டிருக்கிறது இந்தியா.

கிழக்கை வென்று வசந்தத்தை பரிசளித்த ராஜபக்ஷேவுக்கு ராணுவ தளவாடங்கள் உட்பட, ரேடார்கள், உளவுக்கருவிகள், பீரங்கிகள், உளவு விமானங்களையும் அதை இயக்க பொறியாளர்களையும் அனுப்பிய இந்தியா தனது தென் பிராந்திய கடல் எல்லையை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கி அங்கு தன் கப்பல் படையை அடிக்கொன்றாக நிறுத்தி வைத்துள்ளது.

இன்று வன்னி மக்கள் எதிர் கொள்ளும் படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம். பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த இந்திய ராணுவம் இலங்கைக்குள் நேரடியாக யுத்தம் செய்கிறது என்று சொன்னால் அதில் பெருமளவு உண்மை இல்லாமல் இல்லை.

பல்லாயிரம் மக்களைக் இந்த சில மாதங்களில் கொன்றொழித்த சிங்களப் படைகளோ அவர்களுக்கு வேவு பார்த்துச் சொல்லும் இந்திய உளவு விமானங்களாலோ புலிகளை என்ன செய்ய முடிந்தது.

புலிகளைச் சொல்லி இன்னும் எத்தனையாயிரம் மக்களைக் கொன்றொழிக்கப் போகிறது இந்தியாவும் இலங்கையும் அப்படியே புலிகளை அழித்து விட்டாலும் இந்த பிரச்சனை தீர இந்தியா விரும்புமா?

இதுதான் இன்றைய தினத்தில் பிரதானக் கேள்வி.

பல டக்ளஸ்களையும், ஆனந்தசங்கரிகளையும், பிள்ளையான்களையும் இந்தியா உருவாக்கும். அப்படி உருவாக்குவதன் மூலம்தான் இன்னொரு புலிவீரன் உருவாவதை தடுத்து அதே நேரம் டக்ள்ஸ்களையும், ஆனந்தசங்கரிகளையும் வைத்து இலங்கைப் பிரச்சனையை தீர விடாமல் குளிர்காயலாம் என நினைக்கிறது இந்தியா.

இந்தியாவின் நினைப்புகள் எல்லாம் காலத்தின் கணக்குகளில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதோ அது போல ஈழத்தில் பிறந்த தாயொருத்தி பத்து பிரபாகரன்களை உருவாக்கி ஈழ மண்ணுக்கு பரிசளிப்பாள்.

இந்தியாவால் டக்ளஸ்களை மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் வன்னியோ புதிய போராளிகளை ஈன்றெடுக்கும்.

அதுதான் உண்மை. ஆனால் இன்று,

வன்னியின் மொத்த நிலமும் இன்று சிங்களப் படைகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.

உடமைகளோடு உயிர்களும் கொத்துக் கொத்தாய் வீதியில் சிதறிக் கிடக்கிறது. இந்தியா இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். அல்லது அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டிய சூழல் எழலாம்.

இதை நான் வீம்புக்காகவோ இந்தியாவை பழிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை.

03.

சமீப காலமாக தமிழகத்தில் எழும் உணர்வலைகள் ஈழ ஆதரவு என்பதைத் தாண்டி இந்தியாவை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.

இதை நான் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கண்டேன்.

அந்த உணர்வில் உள்ள தார்மீகக் கோபத்தின் நியாயத்தை நீங்கள் கண்டு கொள்ள மறுத்தால். அதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும் என்பதை இந்திய ஆளும் வர்க்கங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு வேளை செய்த அட்டூழியங்களுக்கெல்லாம் பதிலா சொன்னோம். மன்னிப்பா கேட்டோம் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கலாம். ஆனால் இம்முறை உங்களை கேள்வி கேட்பது தமிழகம்.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தியா பதில் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

ராஜீவ்கொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு என்ன நடந்தாலும் தமிழக மக்கள் மௌனிகளாக சகிப்பார்கள். ஏனென்றால் நாம் ஆகப்பெரிய விலை கொடுத்திருக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் கட்சி முதலில் நினைத்தது.

ஆனால் முத்துக்குமார் கொழுத்திய நெருப்பு காங்கிரஸை சுட்டுப் பொசுக்கியதோடு அதன் துரோகத்துக்கு துணை நிற்கும் நபர்களையும் இன்று தனிமைப்படுத்தி இருக்கிறது.

இந்திய ராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின்றன,

மத்திய மாநில அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசின் எல்லா அலுவலகங்களுக்கும் நூற்றுக் கணக்கான போலீசாரைக் கொண்டு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

அதை எல்லாம் விட காங்கிரஸ் கொடியை யாரும் எரிக்கக் கூடாது என நடந்த கைதுகளை எல்லாம் மீறி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காங்கிரஸ் கொடிகள் தீக்கிரையாக்கப்படுகிறது.

கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.

பல மாவட்டங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறி தங்களின் எதிர்ப்பை காட்டிய பிறகு சீர்காழி ரவிச்சந்திரன் என்கிற காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து மாண்ட பிறகு தமிழகத்தில் எங்காவது காங்கிரஸ் கொடிக்கம்பம் இருந்தால் அதற்கும் இரண்டு போலீசைப் போட்டு காவல் காக்கும் சூழல்.

இது மாற்றத்திற்கான காலம்.

எண்பதுகளில் கிளர்ந்த மக்கள் இனி ஈழ மக்களுக்காக கிளர்ந்தெழமுடியாது என்ற எமது எண்ணங்கள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது.

எண்பதை விட ஈழ நெருப்பு தமிழகத்தை தகிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வருகிற தேர்தலின் பெரும் பங்கு ஓட்டு வேட்டைக்கு ஈழத் தமிழர்கள் இனி பயன்படுவார்கள்.

ராஜீவின் பிணத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் எப்படி தேர்தல் அறுவடை செய்ததோ அது போல நாமும் ஈழ மக்களின் பிணங்களைக் காட்டியே காங்கிரஸை துரத்தலாம்.

அழுகிற தாய்மார்களின் கண்ணீரை நாம் அறுவடை செய்யலாம். ஆனால் அதுவல்ல நமது வேலை நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி ஒன்று உண்டு.

செய்ய வேண்டியது?

புலிகளை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது, ஈழம் வெல்லும், என்பதெல்லாம் கைதட்டல் பெறுவதற்காக மேடைகளில் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக மாறிவிடக் கூடாது.

உண்மையிலேயே புலிகள் யாராலும் வெல்ல முடியாதவர்களாக இருக்க நாம் அவர்களுக்கு துணை நிற்பதோடு நமது ஆதங்கங்களையும் அவர்களுக்கு சொல்லலாம்.

புலம்பெயர் சமூகத்திலும், தமிழகத்திலும், ஈழத்திலும் பெரும்பான்மை தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக புலிகள் மட்டுமே உள்ளார்கள்.

அதனால்தான் மக்களிடமிருந்து புலிகளை தனிமைப்படுத்த முடியாத இந்தியாவும் இலங்கையும் ராணுவ ஆயுத பலம் கொண்டு புலிகளை அழிக்கப்பார்க்கிறார்கள்.

உண்மையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் நிலை.

ஐம்பதாண்டுகால விடுதலை வேள்விக்கு தமிழ் மக்கள் விடை கொடுத்து விட்டு. கூலியாட்களுக்கு அடிமைகளாக வாழும் சூழலை நாம் அனுமதிக்கக் கூடாது.

நம் சமகாலத்தில் நேர்கொள்ளும் இன விடுதலைப் போரில் புலிகள் வெல்வதற்கான மக்கள் சக்தியை திரட்டி தமிழகத்தை அந்த போரின் வலதுகரமாக்க வேண்டும்.

இந்தியாவில் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை ஜனநாயக ரீதியில் ஒழிப்பதோடு சட்ட ரீதியாக வென்று விடும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும்.

இலங்கை என்னும் பேரினவாதத்திற்குள் ஈழத் தமிழ் மக்களை சுருக்கிப் பார்க்கும் போக்குக்கு நாம் இடமளித்து விடக் கூடாது.

ஒன்றிலோ ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை இல்லை என்றால் சுதந்திர தமிழீழம் அதை தமிழக மக்கள் அங்கீகரித்து விட்டார்கள்.

நமது விருப்பங்களை ஈடேற்ற இந்திய அரசோடு ஒரு நெடும் போரை நாம் நடத்தியாக வேண்டும்.

ஈழ விடுதலைப் போர் என்பது இனி வெறுமனே ஈழத்தில் மட்டும் நடைபெறும் ஒரு போர் அல்ல சர்வதேச அளவில் மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய இனவிடுதலைப் போராட்டம்.

அதற்கான காலமும் சூழலும் இப்போது கனிந்திருக்கிறது.

நன்றி
-தமிழ்நாட்டில் இருந்து பொன்னிலா-