Thursday, July 3, 2008

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை

இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன.
எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத்திலேயே, மீண்டும் அதே இருட்டுப் பாதையை நோக்கி முழுத் தீவுமே நகர்த்தப்படும் பேரவலம் நேர்ந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல. அன்று அந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அதனடிப்படையில் அத்தரப்பிடமிருந்து நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் கைப்பற்றி, பதினொரு ஆண்டு காலம் ஆட்சியிலிருந்து விட்டு, பதவியிலிருந்து இறங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ந்திரிகா குமாரதுங்கவும் கூட, இன்றைய அவல நிலைமை குறித்துக் கைவிரித்துவிட்டார். தமது உயிருக்கே - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்லாத வேறு தரப்புகளினால் - ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இப்போது அச்ம் தெரிவிக்கும் நிலைக்கு அவரும் தள்ளப்பட்டு விட்டார்.

ஆக, அன்று ஊடக உரிமை உட்பட ஜனநாயக தந்திரத்தை மீட்பதற்காகப் போராடிய இரு முக்கிய தலைவர்களில் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற மீண்டும் அச்தந்திரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளன. மற்றைய தலைவர் அதிகாரத்தில் இருந்து இறங்க அவரது தந்திரமே கேள்விக்குள்ளாகிவிட்டது. இதுதான் இன்றைய விபரீத நிலைமை.
இதற்கிடையில் கடைசியாக ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக வெளியிட்டிருக்கும் கருத்து பலரையும் பேராச்ரியத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு தித் திட்டங்களில் ஒன்று எனக் கூறித் தம்மை மீறி நடக்கும் யேல்கள் இவை என்ற ஒரு படத்தைக் காட்ட அவர் முயல்கின்றார்.

அறுகம் குடா பாலத் திறப்புவிழாவில் உரையாற்றிய அவர், "பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் பெரும் போராட்டத்தில் அர ஈடுபட்டுக்கொண்டே நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அத்தகைய அரசின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் பல தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இவ்வாறான ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதல் விவகாரம். கள முனைகளில் கிடைக்கும் வெற்றிகளை முறியடிக்கும் விதத்தில் நாட்டின் நற்பெயரை வரலாற்று முக்கியத்துவம் வாந்த இத்தகைய மயத்தில் கெடுப்பதற்காக எடுக்கப்படும் தித்திட்டமே இது" - என்று ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை அவர் விமர்சித்திருக்கின்றார்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தமது அரக்கு விருப்பமில்லாத - அரசின் போக்குக்கு விரோதமான - அரத் தலைமையின் எத்தரப்பினதும் ஆசி, அங்கீகாரமின்றி - நடக்கின்ற - விடயங்கள் என்பது போல ஜனாதிபதியின் பேச் அமைந்திருக்கின்றது.

அது உண்மையானால் -
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கும் இத்தகைய ட்டவிரோத - அராஜக - வன்முறைச் யேற்பாடுகளை - ஜனாதிபதியும் அவரது அரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய போக்கை அவர்களது தரப்பு கிக்காது என்பது நிஜமானால் -
ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் - ம்பந்தப்பட்டோரைப் பிடித்து ட்டத்தின் முன் நிறுத்தாமல் - அவரது அர பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது ஏன்?

கொழும்பிலும் பிற இடங்களிலும் பேனா தாங்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீளுவதைத் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ துப்பில்லாத - துணிவில்லாத - ஓர் அரத் தலைமை, ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்குக் காலக்கெடு விதித்து, அறிவிப்புகளை வெளியிடுவது அபத்தத்திலும் அபத்தம் அல்லவா?

"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்." - என்பது போல இருக்கின்றது ஊடக அடக்குமுறைக்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடிக்கத் திராணியற்ற இந்த அர, புலிகளைக் கூண்டோடு அழிக்கப் போவதாக ஜம்பம் அடிப்பது.


நன்றி - உதயன்

0 Comments: