Friday, July 11, 2008

ஜே.வி.பியினருக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போடும் கோமாளித்தனம்

தன்னுடைய "கோயபலஸ்' அரசியல் பிரசாரங்களுக் காக "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச் சுப் போடக்கூட' பின்னிற்காதவர் இலங்கை அரசின் பாது காப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

அவருடைய கோமாளித்தனமான அரசியல் கருத்து வெளிப்பாடுகளால் அவரை அரசியல் விதூஷகராக விமர்சித்துக் கிண்டல் செய்யவும் ஆய்வாளர்கள் தவறு வதில்லை.
அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்து வெளி யிட்டிருக்கின்றார் அவர்.
யுத்த வெறிப் போக்கை மட்டுமே தனது அரசியலுக் கான மூலதனமாகக் கொண்டு, ஆட்சியைக் கொண்டி ழுக்கும் இந்த அரசு, தான் எதிர்நோக்கும் எந்த அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு யுத்தம் என்ற கவசத்துக்குப் பின்னால் போய் ஒளிக்க வேண்டிய கட் டாயத்தில் உள்ளது.

"செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேல்' என்பது போல அரசுக்கு வருகின்ற சிக்கல்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள் எல்லாவற்றையும் யுத்தக் கணக்கின் மீது சுமத்திவிட்டுத் தன்னைக் காபந்து பண்ணிக் கொள்ள வேண்டிய சிக்கல் அரசுக்கு. அரசின் அந்த வேலையை அரசியல் விதூஷகரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவே அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டியவராகவும் இருக்கின்றார்.

நாட்டு மக்களின் குறிப்பாகத் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தி ஜே.வி.பி. முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்ட முஸ்தீபில் அரண்டுபோன அரசுத் தலைமை, அந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக யுத்தத்தின் பின்னாலேயே பாதுகாப் புத் தேடவேண்டிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கின்றது.

ஜே.வி.பியின் புலி விரோதப் போக்கு ஏன் தமிழர் விரோதப் போக்கு வெளிப்படையானது; அப்பட்ட மானது; பகிரங்கமானது.

பௌத்த சிங்கள மேலாதிக்க வெறியிலும் பேரின வாத மேலாண்மைத் திமிரிலும் அமிழ்ந்து, ஊறி, அதில் மூழ்கிக் கிடக்கும் ஜே.வி.பி., தமிழர் தரப்புடனோ, புலிகளுடனோ சமரசம் செய்து, சமாதானத் தீர்வு காண்பதை எதிர்த்து வருகின்றது. புலிகளுடன் பேசவே கூடாது என்றும், அவர்களை முழு அளவில் அழித்து ஒழிப் பதற்காக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்று வலியு றுத்தி வந்த தென்னிலங்கைத் தீவிரவாதக் கட்சி அது.

இந்த அரசுத் தலைமையாவது, ஜனாதிபதித் தேர்த லுக்கு முன்னர் "அமைதித் தீர்வு' குறித்து மேலோட்ட மாகவேனும் நடிப்புக்கேனும் தனது ஈடுபாட்டைக் காட்டியது. ஆனால் ஜே.வி.பியோ நாடாளுமன்றத் தேர்தலுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னர் இருந்தே ஒரே நிலைப்பாட்டில்தான் யுத்த வெறிப் போக்கில் தான் இருந்து வருகின்றது.
அது புலிகளுடன் பேசித் தீர்வு காண முயற்சிக் கவே கூடாது. புலிகளை அழித்தொழிக்க இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை முழு அளவில் ஏவி விடவேண்டும். தமிழர்களுக்கென்று பிரதேச, பிராந் திய அதிகாரப் பரவலாக்கல் ஏதும் அவசியமில்லை. தேவையானால் கிராம மட்டத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யலாம் இதுவே ஜே.வி.பியின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வந்தது; இருந்து வருகின்றது.

அத்தகைய ஜே.வி.பி. நேற்று முன்னெடுத்த அரச பொது வேலைநிறுத்தத்தால் அரண்டுபோன அரசுத் தரப்பு, அதைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி இவ்விடயத்திலும் யுத்தத்தை முன்னிறுத்தி, தப்ப எத்தனிக்கின்றது.

அதற்காக முழு புலி எதிர்ப்பு சிங்கள அமைப்பான ஜே.வி.பியை புலிகளுடன் முடிச்சுப்போட முயல்கிறது அரசு. அந்தக் கைங்கரியத்தை முன்னெடுக்கின்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

""புலிகளுக்கு உதவி செய்வதற்காகத்தான் ஜே.வி. பியினர் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவ்விடயத் தில் புலிகளுக்கு ஒத்தாசை புரிந்து அதன் மூலம் அர சுப் படைகளுக்கும் கேடு விளைவிக்கவே ஜே.வி.பி. எத்தனிக்கின்றது.'' என்று அவர் குற்றம் சுமத்துகின்றார்.

""ஜே.வி.பி. அரச ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு இந்தப் போராட்டத்தை முன் னெடுக்கின்றது. அவர்கள் கேட்கின்றபடி, ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வை அரச ஊழியர்களுக்கு வழங்குவ தாயின் புலிகளுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் கணிசமான தொகையில் வெட்டு விழும். அதைத்தான் புலிகளும் எதிர்பார்க்கின்றார்கள். அதனையே ஜே. வி.பி. செய்வதால் ஜே.வி.பிக்கும் புலிகளுக்கும் ஏதோ தொடர்புகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம்'' இப் படி விளக்கமளிக்க முயல்கின்றார் அமைச்சர் கெஹலிய.

மாதனமுத்தா வழி வந்தோருக்கு இப்படிக் கதை கூறி, சுலபமாக வெற்றிகரமாக அரசியல் நடத்த லாம் என்பதால் இப்படிப் பேசுவதற்கு தென்னிலங் கையில் கைதட்டும், வரவேற்பும் கிடைக்கின்றன.

இக்கூற்றுக்களையெல்லாம் சுலபமாக நம்பும் பொதுமக்கள் இருக்கும்வரை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு என்ன குறை? அவர்கள் காட்டில் எப்போதும் நல்ல மழைதான்!

நன்றி - உதயன்

0 Comments: