Saturday, March 14, 2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் சொல் ஏறுமா,... என்ன?

இலங்கையின் வடக்கே அதாவது வன்னியில், முல்லைத்தீவில் மோதல் நடைபெறும் பகுதி களில் சிக்குண்டு பெரும் துயரங்களை எதிர்நோக் கிவரும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக, உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படுத் தப்பட வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நிறைவேற்றிய தீர்மானம் இது. ஏற்கனவே பல தரப்புகளாலும் விடுக்கப்பட்ட கோரிக் கைகளுடன் இது பத்தோடு பதினொன்றாகிறது. அவ்வளவு தான்.

எந்தக் "கொம்பன்" கூறினாலும், வலியுறுத் தினாலும் அரசாங்கம் போர் நிறுத்தம் செய்யப் போவ தில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல அமைச்சர்களும் ஏற்கனவே விட்டெறிந்து கூறிவிட்டார்கள்.

இறையாண்மை உள்ள எங்கள் நாட்டின் மீது போர் நிறுத்தம் செய்யுமாறு எந்த நாடும் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற திமிர்த்தனமான வார்த்தை கள் கூட அர சாங்கத் தலைவர்களின் வாய்களில் இருந்து பொறிப் பறந்தன.

அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தும் போருக்கு ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை மட்டு மன்றி, நிதி உதவியையும் வழங்கும் இந்தியா நேரடியாக அன்றி சாடை மாடை போட்டுப் போர் நிறுத்தம் குறித்துப் பிரஸ்தாபித்த சில மணி நேரத்தி லேயே அமைச்சர்களும், அதிகாரிகளும் அதனைத் தூக்கி எறிந்து பேசி அது குறித்து உத்தியோகப் பற்றற்ற முறையில் தானும் வாய் திறக்கவும் கூடாது என்ற தோரணையில், கடும் தொனிகளில் கர்ச்சித் தார்கள், அறிக்கை களைக் குவித்தார்கள்.

இதனை, தமிழகத்தைத் தாஜா பண்ணுவதற்காக இந்தியா விளையாடிய சடுகுடு என்று இப்பத்தியில் முன்னர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தோம்.

உலகப் பெருமன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனும் மக்கள் அழிவு களைத் தடுப்பதற்குப் போர் நிறுத்தம் செய்யுமாறு பெயருக்காக, நாமும் கேட்டோம் என்று முத்திரை பதிப்பதற்காகக் கேட்டிருந்தார். அதுவும் கூட இலங்கை அரசை அசைக்கவில்லை. கேட்டும் கேளாததும் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டது அது.
போர்நிறுத்தம் குறித்து பிரஸ்தாபித்த ஏனைய தரப்புகளும் தாழ்ந்த குரலில் அனுங்கிவிட்டு அடங்கி விட்டன. அல்லது ஒப்புக்காகக் கேட்டுவிட்டோம், அத்தோடு முடிந்துவிட்டது எமது கடமை என்று சோர்ந்து ஓய்ந்து போயின!

ஆகக் கடைசியாகப் போர் நிறுத்தம் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை வந்திருக்கிறது. தாம் போர் நிறுத்தத்துக்கு ஆயத்தம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்து மாதங்கள் இரண்டாகின்றன.

ஆனால் அது அவர்களின் பலவீனத்தின் பால், தம்மை அழிவிலிருந்து பாதுகாக்கும் உத்தி என்று கூறி யும், மற்றும் வகை வகையான அர்த்தங்களைச் சோடித்துக் காட்டியும் அரசு அதனைச் "சட்டை" செய்யாமல் தனது இரும்புப் பிடியை ஒரு நூல் அள வேனும் நெகிழ்த் துவதாக இல்லை.

விடுதலைப் புலிகளோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்நிறுத்தம் இல்லை என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற முடிவுடன் நிற்கிறது அரசு. அதனிடம் ஐரோப்பிய ஒன்றியத் தின் சொல் ஏறும் எனக் கருத முடியவில்லை.
இத்தனைக்கும் ஐரோப்பிய ஒன்றியம், சமீப காலத்தில் உருவான அமைப்பு. செல்வந்த மற்றும் அபி விருத்தி அடைந்த 27 நாடுகள் அதில் அங்கம் வகிக் கின்றன என்பதனைவிட, அதன் செல்வாக்குச் சக்தி ஒப் பீட்டளவில் அமெரிக்காவையும் விடக்குறைந் தது என்பதே யதார்த்தம்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கையும் இலங்கை அரசினால் பொருட்படுத் தப்பட மாட்டாது என்பது மிக இலகுவான ஊகம்!

மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லாட்சி இன்மை குறித்து இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அதட்டிய கதை அடிபட்டுப் போனது இப்போது மீள் ஞாபகத்துக்கு வருகிறது. விட்டேனோ பார் என்று எகிறிக் குதித்த ஐரோப்பிய ஒன்றியம், வேகத்தைக் குறைத்து, இலங்கை அரசு திருத்து வதற்கு, திருந்தியதாகக் காட்டுவதற்கு அவ காசம் வழங்கிப் பின்வாங்கிக் கொண்டது!
அந்த அனுபவத்தின் அல்லது வெற்றியின் மீது அமர்ந்துள்ள இலங்கை அரசுக்கு, ஐரோப்பிய ஒன் றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கை சிரிப்புக்குரிய தாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

வன்னியில் தமிழ் மக்கள் அவலப்பட்டால் என்ன, அழிந்து ஒழிந்தால் என்ன, இலங்கை அரசாங் கத்தை எந்தச் சக்தியாலும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வைக்க முடியாது; அதனை நாடிச் செல் வாக்குச் செலுத்தவோ அன்றி உதவவோ இயலாது என்பதே இன்றைய யதார்த்தம்!

நன்றி
-உதயன்-

0 Comments: