Sunday, March 1, 2009

ஸ்ராலின்கிராட் சமரும் வன்னி களமுனையும்

சிறிலங்கா இராணுவத்தின் முதன்மையான மூன்று படையணிகள் புதுக்குடியிருப்பு நகரத்தை கடந்த செவ்வாய்கிழமை (24.02.09) அண்மித்த போது கடுமையான சமர் மூண்டுள்ளது.

58-2 ஆவது பிரிகேட் லெப். கேணல் சன்சாய வன்னியசிங்க தலைமையில் மேற்கில் இருந்து கிழக்காக புதுக்குடியிருப்பு நோக்கியும், நடவடிக்கை படையணி எட்டு அதன் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரிய தலைமையில் தெற்கில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கியும், 58-1 பிரிகேட் அதன் கட்டளை தளபதி லெப். கேணல் தேசப்பிரிய குணவர்த்தன தலைமையில் வடக்கில் இருந்து தெற்காக புதுக்குடியிருப்பு நோக்கியும் நகர்வை விரைவாக்கிய போது தீவிர மோதல்கள் வெடித்துள்ளன.

இராணுவத்தின் இந்த அணிகளுக்கு துணையாக லெப். கேணல் நிகால் சமரக்கோன் தலைமையில் 5 ஆவது கவசப்படையும், 53 ஆவது டிவிசனும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு மண் அணைகளை உடைத்துக்கொண்டு புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயன்ற இந்த படையணிகள் மீது விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பத்தி எழுதப்படும் போது இராணுவம் புதுக்குடியிருப்பு நகரத்தினை கைப்பற்றும் இறுதிக்கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மிகவும் அருகாமையில் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருவதுடன், விடுதலைப் புலிகள் ரி-55 ரக டாங்கிகள் இரண்டையும் பயன்படுத்தி வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செவ்வாய்கிழமை வரையிலும் அங்கு நடைபெற்ற மோதல்களில் 1,000-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் அணிகளை கேணல் தீபன், கேணல் செர்ணம், கேணல் விதுசா ஆகியோர் வழிநடத்தி வருவதாகவும் மொத்த நடவடிக்கையையும் கேணல் பொட்டு அம்மான் நெறிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

புதுக்குடியியிருப்பு நகர் மீதான இராணுவத்தின் நடவடிக்கை அணிகளை பிரிகேடியர் சவீந்திர சில்வா, கேணல் ரவிப்பிரியா, பிரிகேடியர் கமால் குணரட்ன, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு மூன்று டிவிசன்களை களமிறக்கியுள்ள இராணுவம் ஏனைய டிவிசன்களை ஓய்வில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது மோதலில் ஈடுபட்டு வரும் படையணிகள் இழப்புக்களை சந்தித்து களைப்படையும் நிலையை அடையும் போது அவற்றை புதிய அணிகளினால் பிரதியீடு செய்வதே படையினரின் திட்டம்.

அதாவது, விடுதலைப் புலிகளை தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட வைப்பதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த மோதல்களில் இரு தரப்பும் அருகருகே நின்று சமரிடுவதுடன், விடுதலைப் புலிகளின் அணிகள் இராணுவத்தின் பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு நகரத்திலும், அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிகளிலும் கடுமையான சமர் நடைபெற்று வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் வன்னிப் போரை பலரும் 1942-1943 காலப்பகுதியில் நடைபெற்ற ஸ்ராலின்கிராட் சமருக்கு ஒப்பிட்டு வருகின்றனர்.

அதற்கான காரணம் என்ன? இதனைப் புரிந்துகொள்ள ஸ்ராலின்கிராட் சமர் தொடர்பான தகவல்களை மீண்டும் ஒருமுறை நினைவுகூருதல் பொருத்தமானது.

நவீனன் என்ற பெயரில் பிரான்சில் இருந்து வெளிவரும் எரிமலை (ஜுன், 2006) மாத இதழுக்கு நான் எழுதிய கட்டுரையின் புதிய வடிவம் இது.

உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த களமுனைகளில் ஸ்ரலின்கிராட் களமுனையும் ஒன்று.

ஜப்பானில் போடப்பட்ட இரண்டு அணு குண்டுகள் ஜப்பானின் ஆதிக்கத்தையே முடிவுக்கு கொண்டு வந்தது. அதற்கு முன்னமே வரலாற்று, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ராலின்கிராட் என்னும் சோவியத்தின் நகரம் போரின் நாயகனான கிட்லரின் இராணுவ பலத்தை சிதறடித்து விட்டது.

1939 இல் உத்தியோகபூர்வமாக போரை, அறிவிக்க முன்னர் ஜேர்மனி பக்கத்து நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. பின்னர் 1940 இல் டென்மார்க், ஹொலன்ட், நோர்வே, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளை கைப்பற்றியது. அதன் பின்னர் இங்கிலாந்தை கைப்பற்ற திட்டமிட்ட போதும், அதற்கு முன்னர் சோவியத்தை கைப்பற்ற முனைந்தது.

1941 ஆடி மாதம் சோவியத்தை கைப்பற்றும் பார்பரோசா நடவடிக்கையை (ழுpநசயவழைn டீயசடியசழளளய) ஜேர்மன் படைகள் ஆரம்பித்தன. 3 மில்லியன் ஜேர்மன் துருப்புக்கள் 3,400 தாங்கிகள் சகிதம் சோவியத்தின் எல்லைகளை தாண்டி மூன்று முனைகளில் முன்னேறினார்கள்.

ஒவ்வோரு படை பிரிவிலும் 14,000 வீரர்களைக்கொண்ட 230 படைப்பிரிவுகளையும் 20,000 டாங்கிகளையும் கொண்ட சோவியத்துடனான மிகப்பெரும் சமர் இதுவாகும்.

ஆரம்ப சில மணித்தியாலங்களில் நடத்தப்டப்ட விமானத்தாக்குதல்களில் சோவியத்தின் 2,000 விமானங்கள் தரையில் வைத்து அழிக்கப்பட்டதுடன் லெனின்கிராட் (டுநniபெசயன)இ உக்கிரைன் பகுதிகளை கைப்பற்றி தலைநகரான மொஸ்கோ நோக்கி ஜேர்மன் படை நகர்ந்தது.

கைப்பற்றிய இடங்களில் Nஐர்மன் படைகள் பெருமளவில் மக்களை கொன்று குவித்ததுடன் சோவியத்தின் 15 படைப்பிரிவுகளும் ஜேர்மன் படைகளிடம் சரணடைந்தன.

ஆரம்ப இழப்புகளால் பின்வாங்கிய சோவியத் படைகள் அரச தலைவர் ஜோசப் ஸ்ராலினின் நெறிப்படுத்தலில் தமது யுத்த தந்திரோபயத்தை மாற்றி அமைத்தார்கள். சிறு சிறு கெரில்லா குழுக்களாக தமது படைகளை பிரித்தனர்.

ஜேர்மன் படைகளை நெடும் தூரம் உள்வாங்கியதுடன், பயிர் நிலங்கள், உணவுப்பொருட்கள் நீர்நிலைகள் என்பவற்றை அழித்து விட்டும் சோவியத் படை பின்வாங்கியது. இதனால் ஆக்கிரமித்த ஜேர்மன் படைகள் முற்று முழுதாக ஜேர்மனியின் விநியோகத்திலேயே தங்கி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜேர்மன் படைகள் மொஸ்கோவை அண்மித்த போது சோவியத்தின் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மிகநீண்ட ஜேர்மன் படை நிலைகளையும் ஊடுருவித்தாக்கினார்கள்.

விநியோகத்தடங்கல் சோவிய படைகளின் தாக்குதல்களினால் ஜேர்மன் படைகளின் மொஸ்கோவை கைப்பற்றும் முயற்சி தடைப்பட்டது.

தாக்குதல் எதிர்த்தாக்குதல் என ஜேர்மன் படைகள் நலிவடைய தொடங்கியது. எனினும் சோவியத் கொடுத்த விலை அதிகம். சோவியத்தை அடிபணியச்செய்வதற்கு அதன் பொருளாதார வளத்தைக் கைப்பற்ற முடிவெடுத்தார் கிட்லர்.

ஸ்ராலின்கிராட் (ளுவயடiபெசயன) இது சோவியத்தின் பெருமளவு எண்ணைவளத்தை கொண்ட ஊயரஉயளரள பகுதிக்கு அருகில் உள்ள நகரம். சோவியத்தின் தொழில்துறை, தொலைத்தொடர்புகளின் மையப்பகுதியாகும்.

1942 ஆவணி மாதம்; ஜெனரல் போலாஸ் (Pயரடரள) தலைமையில் கிட்லரின் 6 ஆவது துருப்புகளும் (6வா யசஅல), 4 ஆவது Pயணெநச துருப்புகளும் ஸ்ராலின்கிராடை கைப்பற்றும் நடவடிக்கையை (ழுpநசயவழைn டீடரந) ஆரம்பித்தன.

ஜேர்மன் படைகளின் மிகக்கடுமையான விமான, பீரங்கி தாக்குதலின் பின் தரைப்படை முன்னேறியது. ஒரு தடவையில் 600 ஜேர்மன் குண்டு வீச்சு விமானங்கள் நகர்மீது குண்டுகளை பொழிந்தன. அந்த ஒரு தாக்குதலில் மட்டும் 40,000 பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.

இதைப்போல பல நூறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நகரை சுடுகாடாக்கிய பின் உள்நுளைந்த ஜேர்மன் படைகள் எந்த ஒரு உயிரினமும் அற்ற தரைமட்டமான நகரையே கண்டனர்.

ஸ்ராலின்கிராட் (ளுவயடiபெசயன) நகரம் அப்போதைய சோவியத்தின் ஜனாதிபதி; ஜோசப்; ஸ்ராலினின் பெயரை கொண்டிருந்ததினாலும், சோவியத்தின் பொருளாதார, தொலைத்தொடர்பு மையமாக விளங்கியதாலும் அதை கைப்பற்றி தனது பிரச்சார போரை மேம்படுத்த ஜேர்மனியும் அதை தக்கவைக்க சோவியத்தும் மிகக்கடுமையான மோதலுக்கு தயாராகின.

ஸ்ராலின்கிராட் கைப்பற்றப்பட்ட சில நாட்களின் பின் சிறிது சிறிதாக மோதல்கள் ஆரம்பமாகியது.

இம்முறை சோவியத்து படைகள் மட்டும் தாக்குதலில் ஈடுபடவில்லை. பொதுமக்களும், பொதுமக்களால் உருவாக்கப்பட்ட துணைப்படைகளும் சேர்ந்து தாக்குதலை ஆரம்பித்தாhகள்.

கிட்லர் ஸ்ராலின்கிராட் சமரை வென்றுவிட்டோம் என அறிவித்திருந்தார். ஆனால், இது தான் சமரின் ஆரம்பம் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. ஸ்ராலின்கிராட்டை கைப்பற்றிய ஜேர்மன் படைகளை மேலும் முன்னேறவிடாது தடுக்கவும், நகரத்தில் வைத்தே பதிலடி கொடுக்கவும் சோவியத் படைகள் தயாராகின.

மேலதிக முன்னேற்றத்தை தடுக்க பலமான பாதுகாப்பு வியூகங்களை வகுத்ததுடன், கெரில்லா குழுக்களாக நகருக்குள்ளும் ஊடுருவி தாக்குதல்களை சோவியத் படைகளும் மக்களும் ஆரம்பித்தார்கள்.

கடும் நகர்ச்சண்டை ஆரம்பித்தது. பகலில் நாசிப்படைகளால் கைப்பற்றப்படும் பிரதேசம் இரவில் சோவியத்தினால் கைப்பற்றப்பட்டது. ஆயஅயநஎ என்னும் மலைப்பகுதி சண்டையின் போது இருபக்கத்திடமும் 8 தடவைகள் கை மாறியது.

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிதைந்து போன வீட்டிலும் கைக்குண்டுகளாலும்;, கண்ணிவெடிகளாலும், உப-இயந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் துப்பாக்கிமுனை கத்திகளாலும் (டீயலழநெவள), சாதாரண கத்திகளாலும,; பொல்லுகளாலும் ஜேர்மன் படைகள் தாக்கப்பட்டார்கள்.

பறந்து வரும் கைக்குண்டுகளை கூட ஏந்தி திருப்பி எறியும் உத்திகளுடன் சண்டை உக்கிரமடைந்தது. சோவியத் படைகள் பாதாள சாக்கடைகள், தண்ணீர் குழாய்கள், பதுங்குகுழிகள் என்பவற்றினுடாக ஊடுருவித் தாக்கினார்கள்.

இச்சண்டையில் குறிபார்த்து சுடும் (ளுnipநச) வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சோவியத்தின் பெருமளவான குறிபார்த்து சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

முதலில் ஜேர்மன் படைகளை வழிநடத்தி வரும் அதிகாரிகள் வீழ்தப்பட்டார்கள் பின்னர் அவர்களுக்குப்பின்னால் வரும் சிப்பாய்கள் குறிவைக்கப்பட்டார்கள். இதில் மிக முக்கியமானவர் ணுயவைளநஎ இவர் குறிபார்த்து சுடும் பயிற்சி ஆசிரியராக பணியாற்றியதுடன், தனி ஒருவராக நின்று 242 ஜேர்மன் படைகளை சுட்டு வீழ்த்தினார்.

அங்கு நடந்த கடும் சமரை ஒரு சோவியத்தின் ஜெனரல் இப்படி விபரிக்கிறார் 'சில நாட்களில் ஒரு தனி வெடியோசையைக் கேட்க முடியாது நாள் முளுவதும் தொடர்ச்சியான வெடிப்பதிர்வுகளே நகரை உலுக்கின". சண்டையில் காயமடைந்த Pநவசழஎ என்ற பீரங்கிப்படை வீரர் தனது உப-இயந்திர துப்பாக்கியால் அருகில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் நிலை கொண்டிருந்த நான்கு ஜேர்மன் படையினரை கொன்றுவிட்டு மேல் தளத்தில் இருந்த மூன்று படைகளையும் சுட்டுவிட்டு அமைதியாக தனது படையுடன் இணைந்து கொண்டான்.

அதாவது, ஒவ்வொரு படை வீரனும் தனது உச்ச பங்களிப்பை செய்திருந்தனர்.

சோவியத்தின் ஜெனரல் ஊhரமைழஎ தனது படைகளை ஜேர்மன் படைகளுக்கு மிக அண்மையாக நகர்த்தினார். இதனால் ஜேர்மன் வான்படைகளின் குண்டு வீச்சில் ஜேர்மன் படைகளே இலக்கானார்கள். இதே சமயம் ஜேர்மன் படைகள் எகிப்து, மொறோக்கோ மற்றும் ஆபிரிக்காவில் பேரிழைப்பை சந்தித்தன.

இச்சந்தர்ப்பத்தில் சோவியத் தனது பெரும் தாக்குதலான ஸ்ராலின்கிராட் மீட்புபோரை (ழுpநசயவழைn ருசயரௌ) ஜெனரல் ணூரமழஎ தலைமையில் 10 லட்சம் வீரர்கள் 14,000 பீரங்கிகள், 1,000 தாங்கிகள், 1,350 போர் விமானங்கள் சகிதம் நவம்பரில் ஆரம்பித்தது.

நான்கு நாட்களுக்குள் எதிரி நிலைகளை ஊடறுத்து ஜெனரல் போலாஸ் தலைமையிலான 280,000 ஜேர்மன் படைகளை சுற்றிவளைத்தன.

விநியோகப் பாதைகள் ஏதும் அற்ற நிலையில் களத்தில் இருந்து பின்வாங்க பல தடவை கிட்லரிடம் போலாஸ் மன்றாடினான். ஆனால், கிட்லர் உதவிப்படைகள் அனுப்புவதாக கூறி பின்வாங்கும் திட்டத்தை நிராகரித்து விட்டார்.

விமானங்கள் மூலம் உணவு, ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒரு நாளைக்கு 500 தொன்கள் பொருட்கள் தேவையான போது 100 தொன்களே விநியோகிக்க முடிந்தன. அதிலும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் போது விநியோகம் கிடைப்பது அரிதாகியது.

உணவுப்பொருட்கள், ஆயுதங்களின் அளவு ஜேர்மன் படைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. போர் விரைவில் முடிந்துவிடும் என்ற அபார நம்பிக்கையில் வெப்ப உடைகள் கூட ஜேர்மன் படைகளால் தேவையான அளவு எடுத்துச்செல்லப்படவில்லை.

சோவியத்தின் குளிர் மைனஸ் 30 (-30) பாகை செல்சியசுக்கு கீழிறங்கியது. சோவியத்தின் குளிர் அதன் படைகளுக்கு பழக்கமானது. ஆனால் ஜேர்மன் படைகளோ குளிரினாலும் பட்டினியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக மரணமடைய தொடங்கின.

சோவியத் தனது படை நடவடிக்கைக்கு காலநிலையையும் கருத்தில் கொண்டே வியூகம் வகுத்திருந்தது.

ஜேர்மன் படைகளின் உணவுப்பங்கீடு ஒரு நாளைக்கு ஒருவருக்கு 100 கிராம் பாணில் இருந்து 50 கிராமாக சுருங்கியது. படை வீரர்கள் தங்கள் குதிரைகளையே கொன்று தின்று உயிரைப் பிடித்தார்கள். மூன்று மாத முற்றுகைக்கு பின் சேவியத் படைகள் ஜேர்மன் படைகளை சரணடைய கோரினாhகள். ஆனால் கிட்லர் அனுமதி மறுத்ததுடன் ஜெனரல் போலாஸை குநைடன அயசளாயட ஆக பதவி உயர்த்தினார்.

ஜேர்மன் வரலாற்றில் எந்த ஒரு குநைடன அயசளாயட உம் சரணடைவதில்லை. எனவே போலாஸ் இறுதிவரை சண்டையிடுவார் என கிட்லர் நம்பினார்.

இரு நாள் சரணடையும் காலக்கெடு முடிவடைந்ததும் சோவியத் படைகள் ஜேர்மன் படைகளின் விமானத்தளத்தையும், ஓடுபாதையையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.

ஜேர்மன் படைகளின் இறுதி விநியோக வழியும் முற்றாக தடுக்கப்பட்ட நிலையில் சோவியத்தின் கடும் தாக்குதலில் சின்னாபின்னமாகிய படைகள் இறந்தவர்கள் போக மிகுதிப்பேர் 1943 ஆம் ஆண்டு மாசி மாதம் 2ம் நாள் சரணடைந்தார்கள்.

சரணடைந்தவர்களில் கிட்லரின் நம்பிக்கைக்குரிய தளபதி போலாசும் அடக்கம். ஜேர்மன் சரித்திரம் மாற்றப்பட்டது. போலாஸ் சரணடைந்ததை கேள்விப்பட்ட கிட்லர் இவ்வாறு கூறினார். 'போர்க்கடவுள் மறுபக்கம் போய்விட்டார்".

ஸ்ராலின்கிராட் சமரில் நான்கு லட்சம் ஜேர்மன் படைகள் மாண்டுபோக 24 ஜெனரல்கள் உட்பட 110,000 வீரர்கள் சரணடைந்தார்கள். சோவியத் பல லட்சம் வீரர்களையும், மக்களையும் இழந்தது. ஜேர்மனியின் ஒவ்வொரு கிராமத்திலும் மரண ஓலம் எழுந்தது, கிட்லரின் பேச்சாளர் கேயாபஸ்சின் பொய்கள் எல்லாம் தவிடு பொடியாகின.

போரின் வலியை ஜேர்மன் மக்கள் உணர்ந்தார்கள். ஆனால், காலம் கடந்து விட்டது ஸ்ராலின்கிராட்டில் ஜேர்மன்; படைகள் இழந்த ஆள், ஆயுத படை வளங்களினால் அதன் போரிடும் வலு உடைத்து விட்டது.

எனவே ஜேர்மன் நோக்கி முன்னேற pவரும் சோவியத் மற்றும் நேசப்படைகளை தடுத்து நிறுத்த ஜேர்மன் படையால் முடியவில்லை. ஜேர்மன் வீழ்ந்தது, போர் முடிவுக்கு வந்தது.

ஸ்ராலின்கிராட் தோல்விக்கு உலக இராணுவ ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்? கிட்லரின் திறமையற்ற யுத்த தந்திரம், பாதுகாப்பற்ற விநியோகப்பாதை, சோவியத்தின் கெரில்லா யுத்தமும் அதனுடன் கூடிய முற்றுகைப்போரும், சோவியத்தின் காலநிலை, சோவியத்தின் படைப்பலத்தை சரியாக கணிக்கத்தவறிய கிட்லரின் பிடிவாதம் என்பன இந்த சமரின் தோல்விக்கான முக்கிய காரணிகளாகும்.

போரின் தோல்விக்கு என்ன காரணம் கூறுகிறார்கள்? ஜேர்மன் படைகளின் பாரிய ஆள், ஆயுத இழப்புகளே காரணம். அதாவது, ஸ்ராலிகிராட் ஜேர்மனின் போரிடும் வலுவை சிதைத்து விட்டது.

வன்னி களமுனையின் படையினரின் செறிவாக்கம், அங்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் சமர்க்கள உத்திகள், படைத்தரப்புக்கு ஏற்பட்ட அழிவுகள், ஏற்பட்படப் போகும் மாற்றங்கள், மக்கள் போரட்டமாக மாற்றம் பெற்று வரும் தமீழீழ விடுதலைப் போராட்டம் போன்ற காரணிகளை கருத்திற்கொண்டே ஸ்ராலின்கிராட் சமருடன் வன்னிக் களமுனை ஒப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ராலின்கிராட் சமரை போல புதுக்குடியிருப்பு களமுனையில் சிறிலங்கா இராணுவம் சந்திக்கும் இழப்புக்கள் அதன் போரிடும் வலுவை உடைத்து விடலாம் என நம்பப்படுகின்றது.

சிறிலங்காவின் முன்னனி படை பிரிவுகள் இந்த களமுனையில் பேரழிவுகளை சந்தித்தால் சிறிலங்கா அரசுகள் மீண்டும் போர் தொடர்பாக சிந்திப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதுடன் போரும் முடிவுக்கு வந்ததாகவே கொள்ளப்படும்.

நன்றி
-வேல்சிலிருந்து அருஸ்-

0 Comments: