Sunday, May 17, 2009

ஈழத்தமிழருக்கு நிம்மதி தராத இந்தியத் தேர்தல் முடிவுகள்

பலரும் எதிர்பார்த்திருந்த இந்தியத் தேர்தல் முன்னோட்ட முடிவுகள் நேற்றிரவு வெளியாகிவிட்டன.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த" கதை போன்றதுதான்.

தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் கொடூரப் போரினால் பல்லாயிரக்கணக்கில் தனது உறவுகளைப் பலிகொடுத்து, சந்ததிகளை இழந்து, உடைமைகளைத் தொலைத்து, கௌரவமான வாழ்வைப் பறி கொடுத்து, அடிமைப்பட்ட சமூகமாகத் துவண்டு கிடக்கின்றது ஈழத்தமிழினம்.

"வீடெரிக்கும் அரசனுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரி" போல ஈழத் தமிழர் மீதான போரியல் வெறிக்குத் தூண்டு கோலாகவும், துணையாகவும் இதுவரை இருந்து வந்தது இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசு.

"இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு, கௌரவத்துடன்கூடிய வாழ்வு, அமைதியுடன் கூடிய சமாதானத் தீர்வு இதுவே இந்தியாவின் நிலைப்பாடு" என வெளிப்பகட்டுக்குக் கூறிக் கொண்டே, இலங்கைத்தீவில் பேரினவாதிகளின் அடி மைகளாகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் இராணுவச் செயற்பாடுகளுக்கு நேரடியாகத் துணை போனது இந்திய அரசு.

அத்தகைய காங்கிரஸ் கட்சியிடமும் அதன் தோழமை அணிகளிடமும் மீண்டும் இந்திய அரசை ஒப்படைத் ததன் மூலம், இன்றைய பேரவல நிலையில் இருந்து ஈழத்தமிழர்கள் மீளுவதற்கு இருந்த கடைசி நப்பாசையையும் இந்திய வாக்காளர்கள் தகர்த்து விட்டனர் என்றே கூறவேண்டும்.

இந்தியத் தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாமல், தமிழக மட்டத்திலும் கூட, இங்கு ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் பேரவலங்கள் பொருட்படுத்தப்பட வில்லை என்ற கருத்து நிலைப்பாட்டையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

"ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதற்குத் துணைபோகும் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் நல்ல பாடம் புகட்டுவோம்!" என்ற தமிழக சினிமாத் துறையினரின் கோரிக்கை கூட, தமிழக வாக்காளர்களி டம் எடுபடவில்லையே என்றே எண்ண வைத்துள்ளது.
தமிழகத்தின் காங்கிரஸ் தூண்களான மணிசங்கர ஐயர், ஈ.கே.வி.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போன்றோருக்கு தமிழக மக்கள் நல்ல படிப்பினை தந்திருந்தாலும்
மறுபுறத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஓயாது குரல் கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இடதுசாரிகள் போன்ற தரப்பினரையும் தமிழக மக்கள் ஓரம் கட்டியிருக்கின்றார்கள்.

அதேசமயம், ஈழத்தமிழர் விவகாரத்தை தமது பதவியைத் தக்கவைப்பதற்காக வசமாகப் பயன்ப டுத்திவரும் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்கூட தமிழக மக்கள் தொடர்ந்து பெரும் எடுப்பில் வாக்களித்து வெற்றி வாகை சூட்டியிருக்கின்றார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குக் கூஜா தூக்குவதன் மூலம், தமது தமிழக ஆட்சியைத் தக்கவைப்பதை உறுதிப் படுத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எத்தனத்துக்கு முழுவெற்றி கிடைத்திருக்கின்றது என்பதே இந்தத் தேர்தல் முடிவு காட்டும் பெறு பேறாகும்.

இலங்கையில் தாம் மேற்கொள்ளும் பாரிய இராணுவ நடவடிக்கைகளில் தமக்குக் கிடைத்துவரும் பெரும் வெற்றிகளுக்கு இந்திய அரசின் நேரடி ஒத்துழைப்பும், உதவியும், ஒத்தாசையும்தான் பிரதான காரணம் என இலங்கை அரசின் மூத்த அரசுத் தலை வர்களும், உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் கூறிவரு கின்றனர்.

இந்திய மக்களின் இந்த வாக்களிப்புத் தீர்மானம், இலங்கை அரசுத் தலைவர்களைத் தமது இராணுவ நட வடிக்கை வெறிப்போக்கில் மேலும் தீவிரமாக ஈடுபட அவர்களை நெட்டித் தள்ளித் தூண்டி விடுவதாகஷேஅமைந்திருக்கின்றது.

தங்களது யுத்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு வழங்கி வந்த முழு ஒத்துழைப்புக்கு இந்திய வாக்காளர் கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் மூலம் வழங்கிய அங்கீகாரமே இந்தத் தேர்தல் முடிவுகள் எனத் தெரிவித்து அதை மகிழ்வுடன் கொண்டாடக் கொழும்பு பின்நிற்காது என்பதும் உறுதி.

ஆக, ஈழத் தமிழர்களால் ஆவலுடன் எதிர்பார்க் கப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலின் முடிவுகள், அவ லப்படும் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஆறுதலையும் வழங் குவதாக அமையஷேஇல்லை என்பதுதான் நிலைமை; நிதர்சனம்.

மேலும் ஐந்து ஆண்டு காலத்துக்குத் தமது ஆட் சியை உறுதி செய்திருக்கும் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர் அழிப்பு நடவடிக் கைகளுக்குத் தொடர்ந்து துணைபோகும் துன்பியல் நிகழ்வுஇந்தப் பிராந்தியத்தில் இனியும் நீடிக்கப் போகின்றது.

- உதயன் -

0 Comments: