Friday, May 29, 2009

இனி என்ன செய்யப் போகிறது மேற்குலகு?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு நீதி, நியாயம் பெற்றுக் கொடுக் கும் விடயத்தில், இதுவரை தன்னைப் பெரிய சக்தியாக முன்னிறுத்தி, வாய்கிழிய உபதேசம் செய்துவந்த சர்வதேசம் குறிப் பாக மேற்குலகம் இப்போது தன்னுடைய சுய செல்வாக்கு,ஆளுமை, பலம் ஆகியவற்றை ஓரளவுக்கேனும் எடைபோட வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது எனலாம்."வன்முறையைக் கைவிடுங்கள்!", "பயங்கரவாதத்தைக் கைவிடுங்கள்!", "அமைதி வழியில் பிரச்சினைகளை எடுத்துரைத்துமுன்வையுங்கள்!" என்றெல்லாம் இதுவரை ஈழத் தமிழர் தரப்பைப் பார்த்து தத்துவம் பேசிக்கொண்டி ருந்த மேற்குலகுஇனிமேல் எந்த முகத்துடன் ஈழத் தமிழர்க ளின் முன்னால் வரப்போகின்றது?

பல்லாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து ஒரு குறு கிய நிலப்பரப்புக்குள் கூடியிருந்த சமயம், அக்கூட்டம் மீது மிகமோசமான யுத்தத் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவிக்கப்படும் பேரவலம் ஈழத் தமிழர் தாயகத்தில் அரங்கேறியிருக்கின்றது. அந்தக் கொடூரத்தை கோரத்தை கண்டு முழுஉலகமுமே அதிர்ச்சியில் உறைந்து போயி ருக்கின்றது.

இந்த அட்டூழியம் குறித்து, நீதி விசாரணை நடத்தி, சம்பந்தப் பட்ட தரப்பை" சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்ற நியாயம் சர்வதேசத்துக்குப் புரிந்தும் கூட, அதைச் செய்ய முடியாத இயலாத் தன்மையில் கையாலாகாத்தனத்தில் தான் இருப்பதை இப்போது மேற்குலகு அனுபவ வாயிலாக பட்டறிவாக அறிந்துகொண்டிருக் கின்றது.உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் உலகின் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் துல்லியமாக அவதானிக் கும்ஏற்பாடுகளுடன் உலகம் பார்த்திருக்கத் தக்கதாகவே வன் னிப் பெருநிலப்பரப்பில் கொத்துக் கொத்தாக அப்பாவித் தமி ழர்கள்கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அவய வங்கள் இழந்து படுகாயமடைந்தார்கள்; உடைமைகள், உறவு களை அகோரத்தாக்குதல்களுக்குப் பறிகொடுத்தார்கள்.மனித இனத்துக்கே எதிரான அட்டூழியங்கள் உலகத்தின் கண்களுக்கு முன்னால் அங்கே குரூரமாக அரங்கேறிய மையைமேற்குலகம் நன்கு அறியும். அந்தக் கொடூரத்துக்கு நியாயம் தேடு முகமாகவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கள்கவுன்ஸில் இந்த மோசமான சம்பவங்கள் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை அவை முழு மூச்சாகஅந்தக் கவுன்ஸிலில் கொண்டு வந்தன.

ஆனால், இலங்கை அரசுடன், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய வலுவான நாடுகள் கூட்டாக ஒன்று சேர்ந்து அந்தமுயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றன.
இதுவரை காலமும், ஈழத் தமிழர்கள் சார்பில் அவர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகள், கௌரவ வாழ்வு ஆகியவை வேண்டிஆயுத வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டபோது, அவற்றைப் "பயங்கரவாதம்", "வன்முறை", "சட்டவிரோதமானபோராட்டம்" என்றெல்லாம் வரையறுத்து, ஒதுக்கி வந்தது மேற்குலகம். "பயங்கரவாதத்தைக் கைவிட்ட தாக சொல்லிலும்செயலிலும் வெளிப்படுத்தினால் ஈழத் தமிழர்களுக்கு நீதி, நியாயம் கிட்ட சேர்ந்து பணியாற்றி ஒத்து ழைப்போம்!" எனஅமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றி யம் உட்பட்ட மேற்குலகம் விடாது உபதேசம் செய்து வந்தன.

அவற்றிடம் ஈழத் தமிழர்கள் சார்பில் இன்று ஒரு கேள்வியை முன்வைப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

இடம்பெயர்ந்து பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி அவலப்பட்டுக் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் மீது கண்மூடித்த னமானதாக்குதல்களை நடத்தி பெரும் மனிதக் கொடூர அழிவு நிகழ்வதற்கான அநியாயம் இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிடப்பட்டதை நீங்கள் நேரில் கண்டீர்கள். அது குறித்து சர்வதேசரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு யுத்தக் குற்ற வாளிகள்சர்வதேச மன்றில் நிறுத்தப்பட வேண்டும் என் பதை நீங்களும் உணர்ந்தீர்கள். ஆனால் மக்கள் கொத்துக் கொத்தாகக்கொன்றொழிக்கப்பட்ட அவலத்துக்கான விசார ணையைக் கூட உங்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவ்வளவுதான் உங்களின் வலிமை, செல்வாக்கு, ஆளுமை. இனி என்ன? வாலைச் சுருட்டிக்கொண்டு, இந்தப் பேரழிவுக் கொடூரத்தை எமதுதமிழ் மக்களுடன் சேர்ந்து நீங்களும் சகித்துக் கொண்டு பார்த்திருக்க வேண்டியதுதானா?

வன்னியில் அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட விடயத்துக்கே நீதி செய்யும் ஏற்பாட்டைச் செய்யஇயலாத கையாலாகாத்தனத்தில் இருக்கும் நீங்கள், இலங்கைத் தீவில் அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டிருக்கும்ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர் வைப் பெற்றுக்கொடுப்பதில் மட்டும் என்ன செய்துவிட முடியும்? ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்!

ஈழத் தமிழர்களில் ஒரு சாரார் தமது இனத்தின் நியாய மான உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கு வேறு வழியின்றி ஆயுத வழிப்போராட்டத்தில் ஈடுபட்டபோது அதைப் பயங்கர வாதமாக முத்திரை குத்தி, தடை செய்து, அவர்களின் வலிமையைநலிவுபடுத்தி, அவர்களை இலங்கை அரசுத் தரப்பு முற் றாக அழித்தொழிக்க பக்கபலமாகித் துணையும் போனீர்கள்.

சரி. அது முடிந்துவிட்டது என்று கொள்வோம். கொத்துக் கொத்தாக அப்பாவி ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட அராஜகம்குறித்து நீதி விசாரணை நடத்தும் உங்களின் முயற் சியும் தோற்றுப்போய்விட்டது. அதையும் விட்டுவிடு வோம்.

"வெறுங்கையோடு இலங்கை புகுந்த இராவணேஸ் வரன்" போன்று பற்றுக் கோடின்றி ஈழத் தமிழினம் இன்று நிற்கின்றது.நீங்கள் விரும்பியபடி, தனது உரிமைப் போராட் டத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்கு ஈழத் தமிழர்களின் முதுகெலும்புமுறிக்கப்பட்டு விட்டது. இனி, ஈழத் தமிழர் களுக்கு நியாயம் கிடைக்க என்ன செய்யப் போகின் றீர்கள்?
அவர்கள் மத்தியில் ஆயுத வலிமையோடு இருந்த "பயங்கர வாதிகளை" அழிப்பதற்குத் துணை போவதுடன் எமது கடமைமுடிந்து விட்டது என நீங்கள் கைவிரிக்கப் போகின் றீர்களா? வன்னி யுத்தக் கொடூரங்கள் தொடர்பாக நீதி விசா ரணை நடத்தச் செய்ய நீங்கள் எடுத்த முயற்சி தோற்றுப் போன தும் அந்தவிடயத்தை அத்துடன் கைவிட்டமை போல, எங்கள் வேலை முடிந்தது என்று ஓய்ந்து போகப் போகின்றீர்களா?

அல்லது, தங்களது உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயமான அபிலாஷைகளுக்காகப் போராடும் ஈழத்தமிழர்களுக்காக பலமிழந்து, அடிமை வாழ்வே நிதர்சனம் என்று அல்லாடும் ஓரினத்துக்காக ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யப்

போகின்றீர்களா?
மேற்குலகே உன் திட்டம் என்ன?

0 Comments: