Thursday, May 28, 2009

முகாபே வழியில் மஹிந்த ராஜபக்ஷ?

ஜெயமுரசுகொட்டும் இலங்கை அரசுஇந்த யுத்தத் தில் இறுதி வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுவது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலம்தான் அதற்குச் சரியான பதில் கூறும்.

ஆனால் பொருளாதார யுத்தத்தில் அது தோற்றுத் தடுமாறும் நிலையில்தான் உள்ளது. உள்நாட்டு யுத்தம் தென்னிலங் கையின் அடிக்கோடி வரை தாக்கத்தை ஏற்படுத்தியதோ என் னவோ தெரியவில்லை. ஆனால் பொருளாதார யுத்தத்தின் சீரழிவு, ஒவ்வொரு வீட்டினதும் சமையலறை வரை வியா பித்து "குசினிச் சண்டை"யாக விரிவாக்கம் பெற்று நிற்பது கண்கூடு.

யுத்தத்துக்காக, நாட்டின் மூல வளங்களை வருமானத்தை கண்மண் தெரியாமல் கொட்டிக் கொடுத்ததன் விளைவு, இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்øசப் பாத்திரத் துடன் கையேந்திக் காவல் இருக்கும் நிலைமையை ஏற் படுத்தி நிற்கின்றது. நாட்டின் நிதிமூலவளச் சேமிப்பு முற் றாகக் கரைந்துவிட்டதால் அன்றாட நிலைமையைச் சமா ளிக்கவேமத்திய வங்கி அல்லாடுவதாகத் தகவல்.

இந்தச் சீத்துவத்தில், "யுத்தத்தில் வெற்றி கண்டாயிற்று", "யுத்தம் முடிவுற்று விட்டது", "இலக்குப் பூர்த்தி" என்றெல் லாம் மிக ஆரவாரமாக அரசுத் தலைமை அறிவித்த பின் னரும் கூட இராணுவச் செலவினத்தைக் குறைக்கும் எண் ணம் படைத் தலைமைக்கு இல்லை என்பது இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தில் இப்போது இரண்டு லட்சம் பேர் இருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. புலிகள் அமைப்பை முற்றாக நிர்மூலமாக்குவதற்கு இன்னும் ஒரு லட்சம் துருப்பினர் தேவைப்படுகின்றனர் என்று இராணுவத் தளபதியே பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். அதா வது, போர் வெற்றியில் முடிவடைந்து விட்டது என அறிவிக்கப்பட்ட பின்னரும் மிச்சம் மீதி இருக்கும் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இராணுவத்தின் பலத்தை மேலும் மூன்றில் ஒரு பங்கினால் அதிகரிக்க வேண்டி இருக்குமாம்.
இதற்காக விரைவில் ஆள்சேர்ப்பு ஆரம்பமாகவுள்ளது என்கிறார் இராணுவத் தளபதி.
வடக்கு, கிழக்கில் புதிய இராணுவத் தளங்கள் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றன,மேலும் ஆயுதங்கள் வாங்கிக் குவிக் கப்படவிருக்கின்றன என்றெல்லாம் கூட படைத்தரப்பில் இருந்து செய்திகள் கசிய விடப்படுகின்றன.

பொருளாதாரம் சீர்கெட்டு, நாடு திண்டாடும் நிலையில் இராணுவத் தளபதியின் இந்த அறிவிப்பும், படையை இவ் வளவு தூரம் விரிவாக்கம் செய்யும் படைத்தரப்பின் பல் வேறு எத்தனங்களும் இயல்பாகவேபல்வேறு சந்தேகங் களை எழுப்பச் செய்கின்றன.
விடுதலைப் புலிகளின் முதுகை முறித்து, அவர்களின் தலைமையை சின்னாபின்னமாக்கி, அழித்தொழித்து விட்ட தாகப் படைத்தரப்பு வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி, பெருமித அறிவிப்புகளை வெளியிட்ட பின்னரும் புலிகளின் வலுவான தலைமை இன்னும் தப்பியிருக்கலாம், தலை மறைவாகியிருக்கலாம், தக்க சமயத்தில் மீண்டும் தலை தூக்கலாம் என்றெல்லாம் பல்வேறு மட்டங்களில் பரவலா கப் பேச்சடிபடாமல் இல்லை.

புலிகளை முற்றாக நிர்மூலமாக்க இன்னும் ஒரு லட்சம் இராணுவத்தினர் தேவை என்று கூறி, அதற்கான ஆள்திரட் டலை முழு யுத்த உஷார் நிலையில் மேற்கொள்வது போன்ற பின்னணியில் படைத்தரப்பு இப்போதும் முன் னெடுக்க முயல் வது, புலிகளின் எஞ்சிய தலைமை தொடர் பாகப் பல்வேறு மட் டங்களில் அடிபடும் மேற்படி ஊகப் பேச்சுகளுக்கு வலு வூட்டும் அம்சமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதுவும் நாட்டின் பொருளாதாரம் "டயர் காற்றுப் போய் றிம்மில் ஓடுவது போன்ற நிலையை" எட்டிய பின்னரும், இராணுவத் தயாரிப்பு ஆயத்தங்களுக்கு மேலும் கட்டு மட் டில்லாத தொகையைத் தொடர்ந்து கொட்டிக் கொடுப்பதற்கு வழி செய்யும் விதத்தில் நிதியை வீணாக்க முயல்வது, புலிகளின் எஞ்சிய தலைமை சம்பந்தமாக அரசுத் தலைமைக்கு உள்ள அச்சத்தை வெளிப்படுத்துவதாகவேஅமைகின்றது.

அத்தோடு, தென்னிலங்கை அரசினால் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்தக் கட்டத்தோடு, இலங்கைத் தீவை ஜனநாயக வழிக்கு மீளக் கொண்டுவரா மல் தொடர்ந்தும் இராணுவ ஆதிக்கக் கட்டமைப்புப் பொறிக்குள் அதைச் சிக்கவைக்கும் முயற்சியாகவேஇந்த இராணுவ மயப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட மேலாண்மை சிந்தனைப் போக்கைக் கருதலாம் அல்லவா?

இனவழிப்பு, இனக்குரோதம் போன்ற பேரழிவுக் கொடூரங்களை ஒட்டி உள்நாட்டுக் கலகங்கள், கலவரங் கள், போர்கள் போன்றவற்றை எதிர்கொண்டு மீண்ட இரு ஆபிரிக்க நாடுகளை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டி யுள்ள இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., இந்த இரு நாடுகளில் எதன் வழியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி இங்கு கைக்கொண்டு பின்பற்றப் போகின்றார் என்றும் கெள்வி எழுப்பியிருக்கின்றது.

அந்த நாடுகளுள் ஒன்று தென்னாபிரிக்கா. உள்நாட்டுக் கலகங்கள், கலவரங்களின் பின் முடிவில் அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நெல்ஸன் மண்டேலா, சகல தரப்பு மக்களை யும் ஒன்றிணைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, இன செளஜன்யத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உரு வாக்கி, நல்லாட்சியை நிலைநிறுத்தினார். அதன் பலனை அமைதியையும், சமாதானத்தையும் அந்த நாடு இன்று அனுபவிக்கின்றது.

ஆனால் மறுபுறம் முன்னாள் றொடிஷியாவில் இன் றைய ஸிம்பாப்வேயில் நிலைமை தலைகீழ். வெள்ளை யர்களின் ஆதிக்க ஆட்சியின் முடிவோடு கிட்டிய நல்லிணக் கத்துக்கான வரலாற்று வாய்ப்பைக் கோட்டைவிட்ட அந் நாட்டுத் தலைவர் றொபேர்ட் முகாபே, இன்று இராணுவத் தின் வல்லாதிக்கக் கொடுக்குப் பிடியை வசமாகப் பயன் படுத்திக்கொண்டு, சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றார். அதன் விளைவாக ஊழல், பொருளாதார வீழ்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தாராள வன்முறை, அராஜகத்தின் ஆட்சி ஆகியவை நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அமைதி இழந்து வறுமை மற்றும் பட்டினியின் சாகரத்துக்குள் மூழ்கி அத்தேசம் இன்று அவலப்படுகின்றது.

தொடர்ந்தும் படைகளை விஸ்தரித்து இராணுவ மயப் படுத்தும் சிந்தனையை முன்னெடுக்கும் இலங்கைத் தீவின் தற்போதைய ஆட்சிப்பீடம், நல்லிணக்கத்துடன் கூடிய புரிந்துணர்வும், பரஸ்பரம் அன்னியோன்னியமும் மிக்க ஓர் இன செளஜன்ய நிலையை இத்தீவில் ஏற்படுத்தும் இலக்கில் செயற்படுவதாகத் தோன்றவில்லை.

இனப்போரின் உச்சக்கட்டம் முடிவெய்திய நிலையில் இந்த அரசுத் தலைமை முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், றொபேர்ட் முகாபே வழியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணிக்க முனைகிறாரா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.

நன்றி
- உதயன் -

0 Comments: