Sunday, June 21, 2009

முதன்மை பெறவேண்டிய மற்றிரண்டும்.....

குடாநாட்டின் கடற்பிரதேசத்தில் தொழில் செய்வதற்கு காலத்துக்குக்காலம் விதிக்கப்பட்டு வந்த தடைகள் யாவும் நேற்றோடுநீக்கப்பட்டு விட்டன. குன்றிப்போயிருந்த குடாநாட்டு மீனவர் களின் ஜீவனோபாயம் மீண்டும் துளிர்ப்பதற்கும், இப்பிரதேசத்தின்கடல்வளம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உயிர்ப்பூட்டவும் அரசாங்கம் வகை செய்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தின்ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்க் கக்கூடிய ஓர் அத்தியாயம் திறக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று, தெற்கிலிருந்து அத்தியாவசிய மற்றும் பாவனைப் பொருள்களை ஏ9 பாதையூ டாகக் கொண்டுவரவும், குடாநாட்டின்உற்பத்தி களை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்லவும் வாக னப் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குடாநாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், இப்பிரதேசத்தின் உட்கட்டுமானப்பணிகளைத் தூக்கிநிறுத்தவும் தான் துரிதமாகச் செயற்படப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. குடாநாட்டு மக்களுக்குமட்டுமன்றி வடமாகாணத் திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமான மீள்குடிய மர்வு மற்றும் அபிவிருத்திக்கென, விசேட செய லணிக்குழுவை நிறுவியுள்ளார் ஜனாதிபதி.
வடமாகாணத்தின் அபிவிருத்தியிலும், மக் களின் வாழ்க்கை நிலையிலும் முறையேவளர்ச் சியும் முன்னேற்றமும் தேவை. அவற்றைமுன்னு ரிமை கொடுத்து செயற்படுத்துவதற்கு அரசுமுன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் மக்கள் மீது அரசுஇந்தளவுகரிசனையைக் காட்டுவது பாராட்டப்பட வேண்டியதே.
எனினும் அரசாங்கத்தின் இப்போதைய துரிதசெயற்பாடும் குடாநாட்டு மக்கள் மீதான அக்கறையும் வவுனியா முகாம்களில் உள்ள தமதுஇரத்த உறவுகளின் நிலையால் உண்டாகியுள்ள சோகத்தையும் மன விரக்தியையும் போக்கிவிடாது. அவர்களை முகாம்களிலிருந்து விடுவித்துச் சொந்த இடங்களில் விரைந்து வாழ வைப்பதிலும் இயல்பு நிலையை உருவாக்கு வதிலும் மனிதாபிமானத்துடன்கூடிய வேகம்தேவை.
குடாநாட்டில் வாழும் அவர்தம் இரத்தத்தின் இரத்தங்கள், குடும்ப உறவுகள் மனதுக்குள் அழுது கொண்டிருக்கும் சோகத்தைநீக்குவதற்கு வன் னிமக்கள்படும் இன்னல்களைப் போக்கி, அர்த்த முள்ள புதுவாழ்வு வழங்குவதற்கு அரசுஇதய சுத்தியு டனும்நேர்மையுடனும் உகந்த நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வதும் முதன்மை பெறவேண்டிய ஒன்றாகும்.
இன்னொரு புறத்தில் தமிழ் மக்கள் தங்களுக்குரிய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான, தாமும் இந்நாட்டு மக்கள் என்று மனம் நிறைந்து சமபிரஜைகளாகவாழ்கி றோம் என்ற உணர்வை, திருப்தி நிலையை எட் டிக் கொள்வதற்கான நம்பிக்கை தரும் ஏற்பாடு களைக் காணோம். அதற்கு வழங்கப்படவேண்டிய முன்னுரிமையை முடக்கிவிட்டு, ஒதுக்கிவிட்டு அர சாங்கம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்றதுரித செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது தமிழ் மக் கள் மத்தியில் சஞ்சலத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை நிலையை, பொருளாதார மீட்சியை துடிதுடிப்புடன் செய்வது போன்று, அரசியல் தீர்வுமுயற்சியிலும் தீவிர மாக, வேகமாகச் செயற்படுவதற்கான சமிக்ஞை எதனையும் காணோம் என்ற ஏக்கம் தமிழர் மனங் களைவாட்டுகிறது.
அந்தத் திசையில் அசமந்தமாக இருந்து கொண்டு, காலத்தைக் கடத்திக்கொண்டு, வடக்கு மக்களின் வாழ்வாதாரங்களைப்பெருக்கவும், உட் கட்டுமான வளர்ச்சிக்கு உயிரூட்டவும் செயற்படு வது நிரை ஒழுங்குமாறி, முதன்மைபெற வேண்டி யதைஒளித்துக்கொண்டு காலம் கடத்தும் உத் தியோ என்று தமிழ் மக்களை சந்தேகம் கொள்ள வைப்பது தவிர்க்க முடியாததே; இயல்பே.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, அவர்களும் பூரண சுதந்திர முள்ள மனிதர்களாக வாழ்வதற்குவகை செய்யும் தீர்வு ஒன்றை முன்வைக்க ஏன் அரசுமனதார முனையக்கூடாது?
வரலாற்றுக் காலந்தொட்டு தங்கள் மண்ணில் வாழ்ந்துவரும் பூர்வீகத்தைக் கொண்டுள்ள தமிழ் மக்கள், தங்களைத் தாங்களேஆள்பவர்களாகவும் தாமும் இந்நாட்டுப் பிரஜைகள் என்று உணர் பவர்களாகவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிசெய்யக்கூடியஅரசியல் முறைமைகள் சுயநிர்ணயம் சார்ந்த முறைகளை தாராள மனதுடன் செயற் படுத்துவது குறித்துஅரசுசிந்திக்கக்கூடாதா?
நன்றி - உதயன்

0 Comments: