Wednesday, April 8, 2009

போர் முடிகிறது, அதற்குப் பின்....?

வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது.

ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நல னில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிர சைகளின் மனதில் எழுவது இயல்பு.

அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழைந்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று உடனடியாக முன்வைக்கப்படவேண்டும். அவ்வாறு உகந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் போர் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் மனோகணேசன்.

அவர் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசி யல் விமர்சகர்கள், அரசியல் விவகாரங்களில் ஈடு பாடுடையவர்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்று பல தரப்பினரும் இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பதிலையும் கூறுகின்றனர்.

அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கு வதாக அமையவேண்டும் என்றும் வலியுறுத் தியிருக்கிறார் மனோகணேசன்.

போர் இப்போது முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், போர் வேறு வடி வத்தில் மீண்டும் வரும். இன்னுமொரு பிரபா கரன் தோன்றுவார் என்ற யதார்த்தத்தை விளம்பி யுள்ளார் மனோகணேசன். இது அவருக்கு மட்டு மல்ல, நியாயமாகச் சிந்தித்தால் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களும் நிச்சயம் இந்தக் கருத்தை யதார்த் தத்தை உணர்வர்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலை மையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கூடிக் கலைந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, மிக மிகக் கஷ்டப்பட்டு, இந்தியாவைச் சமா ளிக்கும் உள்நோக்குடன் மட்டும் தயாரித்த தீர்வு யோசனையும் "அம்போ" ஆகிவிட்ட சங்கதியும் வெளிப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு யோசனையை அனைத்துக் கட்சிக் குழு தயாரித்ததாகவும் அதனை ஜனாதிபதி சரிபார்த்துவிட்டார் என்ற தகவலையும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யோசனையைச் சரிபார்த்த பின்னர், புதிய யோச னையைக் கிழித்து எறிந்துவிட்டார் என்ற தகவல் புதியது. இதுவரை வெளிவராத விடயம். இப்போது அது அம்பலமாகியிருக்கிறது.
75 சதவீதமான சிங்களப் பிரதிநிதிகளையும் 25 சதவீதமான தமிழ்ப் பிரதிநிதிகளையும் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு தயாரித்த தீர்வு யோச னையையே ஜனாதிபதி கிழித்து எறிந்தார் என்றால், இனிப் புதிதாக எந்தவித யோசனையை உட்புகுத்தி தீர்வு நகல் தயாரிக்கப்படும் என்று அர்த்தமுள்ள கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இவ்வேளை இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியத் தலைவர்கள், வெறுமனே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று நம்பகமான அதி காரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அடிக்கடி வாய் கிழியக் கத்துகிறார்கள். அவர்களால் போருக்கு உதவ முடியுமே அன்றி அரசியல் தீர்வு ஒன்றுக்கு உதவமுடியாது; உதவ விரும்பவில்லை என்ற நிலைமை இப்போது கலங்கித் தெளிகின்றது. அவ்வாறெனின் போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் அரசு முன்வைக்கவுள்ள தீர்வு தமி ழர்களின் உரிமைகளை வழங்குவதாக, அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமையும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?

போர் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி முயற்சிக்கலாம் என்று ஐ.நா.அதிகாரிகளும் மேற் குலக அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் கால மாகக் கூறிவந்தனர். ஆனால்
தமிழ் மக்கள் வன்னியில் மனிதப் பேரவலத் தில் சிக்கியிருந்தபோது அவர்களுக்கு உதவ முடி யாத சர்வதேசம் வக்கற்று நின்கும் சர்வதேசம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க உழைக்கும் என்று நம்புவது, காத்திருப்பது, எதிர்பார்ப்பது அர்த் தமற்றதே!

நன்றி
- உதயன் -

0 Comments: