Monday, April 20, 2009

தட்டிப் பார்த்தால் தானே தெரியும் கதவு திறக்கப்படுகிறதா என்று....!

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தனது உள்ளூர்ப் பணியாளர்களைச் சுதந் திரமாக நடமாட அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருப்பதாகத் தக வல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான கோரிக்கைக் கடிதம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி நீல் புஹுனேயிடம் இருந்து மீள்குடியமர்வு புனர்வாழ்வுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் பதியூதீனுக்குக் கிடைத்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை குறித்து, தமது அமைச்சு அதிகாரிகள், படை அதிகாரிகளுடன் கலந்தா லோசனை நடத்தி வருவதாக அமைச்சர் பதியூதீன் தெரிவித்திருக்கிறார்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தடுப்பு முகாம்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உள் ளூர் பணியாளர்கள் பதினொரு பேர் தமது குடும் பங்களுடன் தங்கியிருப்பதாக ஐ.நா.வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

தமது உள்ளூர் பணியாளர்களை, சுதந்திரமாக நட மாடுவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள்சபை ஏற்கனவே பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியு யோர்க்கில் உள்ள ஐ.நாவின் பேச்சாளர் பார்ஹன் ஹக் கூறியிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபைக்கே இத் தகைய பரிதாப நிலை என்றால்... ஏனையோருக்கு...? ...தமிழர்களுக்கு?

தமிழர்கள் என்றால், அதுவும் வன்னியில் இருந்து வந்தவர்கள் என்றால் அவர்கள் எல்லோருமே விடுத லைப் புலிகள் தான் என்ற கண்ணோடு பார்க்கும் படை அதிகாரிகளும் அரச சிவில் அதிகாரிகளும் ஐக்கிய நாடு கள் சபையின் பணியாளர்கள் என்றதும் அவர்களை புற நீங்கலாக்கிவிட மாட்டார்கள். இது அரசின் பொது விதி யின் கீழ் விதி விலக்குக்கு உரியதல்ல என்பது இலங்கை யர்களுக்குத் தெரிந்த சங்கதி தான்!

ஆனால், அகதிகளாயினும் சரி, இடம்பெயர்ந்தவர் களாயினும் சரி, அவர்களின் நடமாடும் சுதந்திரம் கட் டுப்படுத்தப்படுவது மனிதாபிமான விதிகளுக்கு முர ணானது. இது அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்க ளுக்கும் தெரியாத விடயமும் அன்று.

ஏனெனில், தமிழர்களை எந்த விதமாக நடத்தினா லும் அவசரகால நிலை, பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பல வகையறாக்களுக்கு உள்ளே செருகி அவற்றில் தமக்கு வாய்ப்பாக உள்ள ஏதோ ஒன்றோடு பொருத்தி விடுவது தான் இங்குள்ள "ஒழுங்குவிதி".
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள வன்னி மக்களை வவுனியாவில் நிரந்தரமாக வாழும் அவர்களது இரத்த உறவினர்களே சந்திப் பதற்கோ, தூர நின்று சுகம் விசாரிப்பதற்கோ ஆரம்பத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது ஒன்றும் இரகசியம் அல்ல.
தமது உறவுகளில் எவரும் அராங்கத்திடம் தஞ்சம் கோரி வன்னியில் இருந்து வவுனியா வந்துள்ளார்களா என்பதனை அறியமுடியாது வவுனியா வாழ் தமிழ் மக்கள் மனவேதனையுற்றதும் அங்கலாய்த்ததும் அவதி உற்றதும் மறந்துவிடக் கூடியவையல்ல. உயிரைக் காப் பாற்று வதற்காக வன்னியில் இருந்து வவுனியா வந்து விட்டோம், இங்குள்ள எமது உறவுகள் தேடிவந்து உதவ மாட்டார்களா, மன ஆறுதல் தரமாட்டார்களா? எங்கள் துயரத்தை, சோகத்தை அவர்களோடு பகிர்ந்து மனதில் ஏறியுள்ள அந்த பாரத்தை இறக்க முடியாத என்று இடம் பெயர்ந்த மக்கள் பல வாரங்கள் ஏக்கப் பெருமூச்சு விட்ட கவலை தரும் கதைகள் பல அத்தியாயங்களாக அப்போது விரிந்தது இப்போது பரகசியம்.
இவை யாவும் நலன்புரி நிலையங்களை வந்து பார்வையிட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச மனிதாபிமான அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வசதி இல்லை.எனினும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் கள் இராணுவ தடுப்பு முகாம்க ளில் தரித்திருக்கும் கண் றாவியே உண்மையான காட்சி என்று ஒரு சில சர்வதேச அதிகாரிகள் கூறியதையும் மறப்பதற்கில்லை.

இத்தகைய, பின்புலத்தில் தமிழர்கள் என்றால் அவர் களுக்குள்ள அடிப்படை மனித உரிமைகளையும்கூட தேவையின் பிரகாரம் மதிக்காமல் உதாசீனம் செய்யலாம் என்ற எழுதப்படாத விதி இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் இப் போதாவது உணர்ந்து கொள்வார்கள், தெரிந்துகொள் வார்கள் என்று நம்பலாம்.

தமது உள்ளூர் பணியாளர்களைச் சுதந்திரமாக நட மாட அனுமதிக்க வேண்டும் என்ற ஐ.நா. அதிகாரிகளின் கோரிக்கை தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக் குப் படக்கு என்றுஅடிக்கும் என்ற பேச்சு வழக்கு வாச கத்தை ஞாபகம் ஊட்டுகிறது.

தட்டிப் பார்ததால் தானே தெரியும் உள்ளே இருப் பவர் கதவைத் திறக்க வருகிறாரா.... என்று....!

நன்றி
- உதயன் -

0 Comments: