Saturday, April 11, 2009

ஜோன் ஹோம்ஸின் கருத்து ஐ.நா.வின் நிலைப்பாடா?

இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தத்தினையோ அல்லது ஒரு இடைக்கால மோதல் தவிர்ப்பினையோ மேற்கொள்ளும்படி கோருவதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவிர்த்திருந்த மறுதினமே அவரது மிகவுயர்ந்த தரத்தினரான மனிதவுரிமை அதிகாரி ஜோன் ஹோம்ஸ், பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்த கருத்தில் இடைக்கால போர் ஓய்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற மதியநேர செய்தியாளர் மாநாட்டில் இன்னர் சிற்றி பிறஸ் சார்பில், ஜோன் ஹோம்ஸ் இன் கருத்து இப்போது ஐ.நா.வினது நிலைப்பாடா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் நுட்பமான விபரங்களை நீங்கள் நாளையோ, நாளை மறுதினமோ அறியலாம் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மைக்கெல் மொன்ராஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் எந்தவொரு விமர்சனத்தையும் நிராகரிக்கும் நிலையில், ஒரு மனிதாபிமான இடைக்கால போர் ஓய்வினைக் கூட கோரும் நிலையில் இல்லை. ஆனால், ஹோம்ஸ் எதிர்வுகூறுவது போன்று கடற்கரையோரம் இரத்த காடாகும் நிலை ஏற்படுமாயின் ஐ.நா. மீது குற்றஞ் சுமத்ப்படுவதை அவர் விரும்பவில்லை. இருவகை நிலைப்பாட்டினை எடுப்பதும் தனது அறிக்கையை வெளியிடச் செய்வதும் ஐ.நா.வின் பழைய நிலையிலிருந்து மீட்புப் பெற உதவலாம் என அவதானிகள் கூறுவதாக இன்னர் சிற்றி பிறஸ் கூறுகிறது. இதேவேளை, இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவினத்தையும், வடக்கின் தடுப்பு முகாம்கள் தொடர்பான செலவினத்தையும் ஈடுசெய்யும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள இரண்டு பில்லியன் டொலர்கள் தொடர்பான கடன் பற்றி ஏப்ரல் 25ஆம் திகதி முடிவு செய்யப்படவிருக்கிறது.

மேலும் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஜி20 மõநாட்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் சில உறுதிப்பாடுகள் விடப்பட்டுள் ளன. இந்த இரண்டு பில்லியன் டொலர்கள் சிறிய விடயம். மனிதவுரிமைகள் பற்றி கரிசனை கொள்வது யார்? என்பதே சிலரின் அபிப்பிராயமாகவுள்ளது. இதேவேளை,இன்னர் சிற்றி பிறஸ்: த கார்டியன் பத்திரிகையில் வெளியான அமைப்பு ஐ.நா.வினதா அல்லது ஹோம்ஸினதா? என்று எழுப்பியுள்ள கேள்விக்கு, பேச்சாளர் மொன்ராஸ்: ஹோம் ஸ் ஐ.நா. சார்பில் பேசுகிறார். மனிதவுரிமை அதிகாரி என்பதால் அல்ல என்று கூறியுள்ளார். அத்துடன், செயலாளர் நாயகம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஏற்றுச் செ யற்படுமாறு இலங்கை அரசினைக் கோருவது போல் தெரிகிறது. ஆனால், ஹோம்ஸ் பகைமைகளை இடைநிறுத்திக் கொள்வது பற்றியல்லாவா பேசுகிறார்? ஐ.நா. வின் நிலைப்பாடு யாது? என்ற இன்னர் சிற்றி பிறஸ் எழுப்பிய கேள்விக்கு, இவ்விடயம் தொடர்பில் நாம் மேலும் சரியான நிலைப்பாட்டி னை நாளையே அறி யலாம் என்று ஐ.நா. பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி
- வீரகேசரி -

0 Comments: