Friday, October 12, 2007

இனிவரப்போகும் காலச்சமரே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் - புலித்தேவன்.

Oct 12, 2007 at 10:39 AM

இனிவரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம். இக்காலகட்டத்தில் நடைபெறும் சமரே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சமராக அமையப்போகின்றது. இவ்வாறு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆம் லெப்.மாலதியின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமது இராணுவம் நூறுவிழுக்காடு வெற்றிக்களப்பில் உள்ளதெனவும் இனி மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றுவதே தமதுகடமையெனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவற்றுக்கெல்லாம் சரியான பதில்கள் உள்ளன.

ஏனெனில் இனிவரப்போகும் காலமே எமக்குச் சாத்தியமான காலம் இந்தக் காலத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். எனவே இனிவரும் காலத்தில் கடும்சமர் மூளப்போகின்றது. இனி சமாதானப் பேச்சுக்கள் நடைபெறவாய்ப்பில்லை.

அனைத்துக்களமுனைகளிலும் எதிரி கடும்சமர்களை ஆரம்பிக்கத் தயாhரகிவிட்டநிலையில் அதற்கான பதிலடிகளை வழங்க நாமும் தயாராகவே உள்ளோம்.

அண்மைக்காலமாக மன்னார் பகுதியில் கடும்தாக்குதல்களை நடாத்தினோம் இதன் மூலம் எதிரியின் உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளோம் இவ்வாறுதான் இனிநடக்கப்போகும் சமர்கள் கடும் உக்கிரமானவையாக இருக்கும். மகிந்த அரசு தொட்டம் தொட்டமாக இருந்த நிலப்பரபகுதிகளை ஆக்கிரமித்துவிட்டு அதைப் பெரும் வெற்றியாகக் காட்டிக்கொண்டு சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றித் தனது அரசியலை நடத்திவருகின்றது.

இனிவரப்போவதுதான் நிஜமான சமர்க்களங்கள். இச்சமர்கள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பவை இனித்தான் முக்கியமானவையாக அமையும். வரப்போகும் நவம்பர் மாதம் என்பது ஒரு முக்கியமானகாலம். தமிழீழத் தேசியத்தலைவர் மாவீரர் தினவுரையை நிகழ்த்தவுள்ளார்.
அடுத்து சிறிலங்காவில் வரவு செலவத்திட்டத்தை மகிந்தராஜபக்ச கொண்டுவரப்போகின்றார்.

வரவுசெலவுத்திட்டம் வெற்றியளிக்க வேண்டுமெனில் ஜே.வி.பி புத்தபிக்குகள் அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் ஆதரவளிப்பதாயின் சண்டையை ஆரம்பிக்குமாறு கூறியுள்ளார்கள். எனவே அடுத்துவரும் காலத்தில் மிகப்பெரும் சமர்க்களங்கள் இங்குதான் நடைபெறப்போகின்றன. நாங்கள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து தற்பாதுகாப்பு யுத்தத்திலேயே ஈடுபட்டோம்.
கிழக்கிலிருந்த எமது போராளிகளும் தளபதிகளும் வந்துசேர்ந்துவிட்டார்கள். அவர்கள் அதிகரித்துள்ள எமது படையணிகளை வழிநடத்திவருகின்றனர். எனவே இனிவரும் சமர் சிறிய சிறிய சமர்களாக அமையப்போவதில்லை.

இனிக்கடும் சமர்களே நடைபெறப்போகின்றன. இதில்த்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படப்போகிறது. எனவே நாம் ஓர் இறுக்கமான முடிவை எடுத்துள்ளோம். அதாவது வன்னி நிலப்பரப்பினுள் சிங்கள இராணுவம் காலடி எடுத்துவைப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அந்தநோக்குடனும் இலக்குடனுமே நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே எமது மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற சமராக அடுத்துவரப்போகும் சமரே அமையவுள்ளது.

உலகில் பலநாடுகளில் இவ்வாறு யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ரஷ்யாவில் போர்நடைபெறும்போது வயதுமுதிர்ந்தவர்களும் குழந்தைகளும் மட்டுமே வீடுகளில் இருந்தனர். ஏனையோர் அனைவரும் களமுனைகளில் நின்றனர். ஆண், பெண் என்ற பேதமின்றி சகலரும் போர் முனைக்கே சென்றனர். அவ்வாறான ஒருகாலம் நிச்சயமாக எமதுபகுதியிலும் உருவாகும்.

அப்போது நிச்சயமாக அனைவரும் போராடியே ஆகவேண்டும். இங்கு நூற்றுக்கணக்கில் விமானங்கள் குண்களை வீசினாலும் இராணுவம் அனைத்துப் பகுதிகளிலும் முன்னேறினாலும் சண்டைநடைபெற்றே தீரும். எனவே மக்கள் அவற்றை எதிர்கொள்ளத்தயாராக இருக்கவேண்டும் என்றார்.

0 Comments: