Sunday, October 28, 2007

இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல்

இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர்.

நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. இதற்கு அண்மையில் நடைபெற்ற பல்க்கன் போர், ஈராக் போர், ஆப்கான் போர் என்பவற்றை உதாரணமாக கொள்ளலாம். இந்த உத்திகளைத்தான் இலங்கை அரசும் பின்பற்றி வருகின்றது.

அதாவது எதிர்கால போரில் விமானப்படையின் முக்கியத்துவத்தை அறிந்த அரசு இந்த மிலேனியத்தின் முதல் 3 வருட காலப்பகுதியில் 07 உலங்குவானூர்திகளையும் (எம்.ஐ 35P) 36 விமானங்களையும் (03 யுn 32, 02 130 மு ர்நஉரடநள ஊ-1, 06 மிக்-27 ஆ, 01 மிக் 23 ருடீஇ 06 மு-8ளஇ 10 Pவு-6ளு, 04 கிபீர் ஊ-2, 04 கிபீர் ஊ-7) கொள்வனவு செய்து விமானப்படையின் பலத்தை 30 விகிதத்தால் அதிகரித்திருந்தது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் 03 கே-8 ரக நவீன பயிற்சி வானூர்திகள் அழிந்த போதும், உடனடியாகவே மேலதிகமாக 03 விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. கடந்த வருடம் மேலதிகமாக 04 மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள், 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதுடன், இந்தியாவும் 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியை விமானப்படை தனக்கு மூச்சுவிடும் காலப்பகுதியாக பயன்படுத்தியிருந்தது. இந்த அவகாசத்தில் தனது படையை மீள ஒழுங்குபடுத்தியிருந்ததுடன், புதிய விமானிகளுக்கு பயிற்சி அளித்ததுடன், பயிற்சி நடவடிக்கைகளையும் புதிய கொள்வனவுகளையும் முடுக்கி விட்டிருந்தது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக விமானிகள் அனுப்பப்பட்டதுடன், அமெரிக்காவின் வான்படை அதிகாரிகளுடன் இணைந்து பல கூட்டு பயிற்சிகளையும் அது மேற்கொண்டிருந்தது.

விமானப்படையின் கட்டளை மையங்களும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வடபகுதி கட்டளை மையம் இந்த கட்டளை மையத்தின் கீழ் வவுனியா, அனுராதபுரம், பலாலி விமானப் படைத்தளங்கள் உள்ளடக்கப்பட்டன.

எனினும் பலாலி மீது 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் பெல்-212 ரக உலங்கு வானூர்தி ஒன்று அழிக்கப்பட்டதனாலும், அதனை அண்டிய பகுதிகளில் அவ்ரோ விமானங்கள் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதனாலும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. வவுனியா தளத்தை பொறுத்தவரை அங்கு ஸ்குவாட்றன்-06 (6 ர்நடiஉழிவநசளுஙரயனசழn: ஆi-17இ ஆi-171) உலங்குவானூர்தி பிரிவும், ஸ்குவாட்றன் (11 ருயுஏ குடiபாவ: ஐயுஐ ளுஉழரவ) உளவு விமான பிரிவும் நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் கடந்த ஆண்டு வவுனியாவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து ஸ்குவாட்றன்-11 பிரிவு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டது.

எனவே அனுராதபுரமே வடபகுதி போர்முனையின் பிரதான விமானப்படைத்தளமாக மாற்றம் பெற்றது. இது பயிற்சி விமானங்கள் ஸ்குவாட்றன்-1 (குடலiபெ வுசயiniபெ றுiபெ: Pவு-6ஃஊது-6இ ஊநளளயெ 150இ ளுகு.260வுP) விமானங்களின் தளமாக இருந்ததுடன், வட போர்முனையின் முக்கியத்துவம் கருதி தாக்குதல் உலங்குவானூர்திகளும், போக்குவரத்து வானூர்திகளும், விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்கு என கே-8 பயிற்சி விமானமும் அங்கு நிறுத்தி வைக்கப்படுவதுண்டு. மேலும் கனரக போக்குவரத்து விமானங்களான அன்ரனோவ்-32பி, அன்ரனோவ்-24பி என்பனவும் அங்கு தங்கிச் செல்வதுண்டு.

மேற்குப் பிராந்திய கட்டளை மையத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளமே பிரதான தளம். இது முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் உலங்குவானூர்திகளை கொண்ட ஸ்குவாட்றன்-04 (டீநடட 412இ டீநடட 212), அதிவேக தாக்குதல் விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-05 (துநவ ளுஙரயனசழn: கு-7டீளுஇ குவு-7இ குவு-5இ ஆiபு-23ருடீஇ ஆiபு-27) குவாட்றன்-10 (குiபாவநச ளுஙரயனசழn: முகசை வுஊ.2இ முகசை ஊ.7) ஜெற் பயிற்சி விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-14 (மு-8) என்பவற்றின் தளமாகும். இவை தவிர ஏக்கல விமானப்படைத் தளமும் மேற்குப் பகுதி கட்டளை மையத்தின் கீழ் அமைந்துள்ள போதும் அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை.

தென்பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் இரத்மலானை, கட்டுக்குருந்த, கேகாலை, வீரவில, தியத்தலாவை ஆகிய விமானப் படைத்தளங்கள் உள்ள போதும் இரத்மலானை பகுதியில்தான் விமானங்கள் தரித்து நிற்பதுண்டு. இது இலகுரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-8 (டுiபாவ வுசயnளிழசவ ளுஙரயனசழn: டீநநஉh 200இ லு-12) கனரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-2 (ர்நயஎல வுசயnளிழசவ ளுஙரயனசழn: யுn-32இ ஊ-130முஇ டீயுந ர்ளு.748இ ஊநளளயெ 421) என்பவற்றின் தளமாகும்.

கிழக்குப் பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் ஹிங்குராங்கொட முக்கிய தளமாகும். அங்கு தாக்குதல் உலங்குவானூர்திகளின் ஸ்குவாட்றன் - 09 (யுவவயஉம ர்நடiஉழிவநச ளுஙரயனசழn: ஆi-24ஏஇ ஆi-35P) உலங்குவானூர்தி பிரிவான ஸ்குவாட்றன்-7 (டீநடட 206இ டீநடட 212) என்பன நிலைகொண்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு, அம்பாறை, சீனன்குடா விமானப்படைத்தளங்கள் இந்த பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்ட போதும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. 1997 ஆம் ஆண்டு சீனன்குடாவில் குறுகிய நேரம் தரித்து நின்ற வை-12 இலகுரக போக்குவரத்து விமானத்தை விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி தாக்கி அழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேற்கூறப்பட்ட நான்கு கட்டளைப்பீடங்களிலும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளின் பிரதான கட்டளைப் பீடங்களான கட்டுநாயக்கா, அனுராதபுரம் விமானப்படை தளங்கள் மிகவும் முக்கியமானவை என்பதுடன், இலங்கையிலேயே மிகவும் பாதுகாப்பான தளங்களும் இவையே. நான்கு பிராந்தியங்களிலும் இந்த இரு பிராந்தியங்களின் முக்கியத்துவம் அதிகமானது.

எனினும் இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ கரும்புலிகள் அணி மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்திருந்தது.

இந்த வாரம் வான்படையின் வடபிராந்திய பிரதான கட்டளை மையம் மீது விடுதலைப் புலிகளின் அதிரடி இடியாக வீழ்ந்துள்ளது. அதிகாலை வேளை அநுராதபுரத்தின் காடு களினூடாக நகர்ந்த விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகளின் கொமாண்டோ பிரிவு மிகவும் நுட்பமாக முகாமின் முக்கிய பகுதிகளுக்குள் அதன் வடமுனையினூடாக ஊடுருவியுள்ளது.

அநுராதபுரத்தின் வான் படைத்தளத்தைப் பொறுத்தவரையில் அதற்கு அண்மையாக நுவரவெள குளம் உள்ளதுடன், அதனைச்சூழ மேலும் இரு சிறிய குளங்களும், இரண்டு அல்லது மூன்று இராணுவ முகாம்களும் உள்ளன. சாலியபுர மற்றும் கல்குளம படைமுகாம்கள் அவற்றில் அடங்கும். எனினும் விடுதலைப்புலிகளின் அணி நுவரவௌ காட்டுப்பகுதியின் ஊடாக விமானப்படைத்தளத்தை அடைந்ததுடன், படையினரின் கண்களில் படாமல் தளத்திற்குள் நகர்ந்து முக்கிய இடங்களில் நிலையெடுத்தும் இருந்துள்ளனர். தமது நிலையிடங்களை உறுதி செய்த அணி, முதலாவது தாக்குதலை இலகு ரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை தாக்குதலுடன் (டுiபாவ யுவெவையமெ றுநயிழn-டுயுறு) 3.15 மணியளவில் ஆரம்பித்தது.

படைத்தரப்பின் தகவல்களின் படி தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்னராகவே விடுதலைப் புலிகள் முகாமின் உட்பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியின் மீது நடத்தப்பட்டதுடன் மோதல் உக்கிரமடைந்தது.

உந்துகணையின் வெடிப்பதிர்வு, தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்களால் படையினர் அதிர்ச்சியடைந்த போது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் தளத்தின் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மையங்கள், ராடர் மையம் போன்றவற்றை கைப்பற்றிக்கொண்டனர்.

12.7 மி.மீ கனரக துப்பாக்கி நிலை ஒன்று மற்றும் இரண்டு 23 மி.மீ (ணுரு-23 யுவெயைசைஉசயகவ புரn) விமான எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனை கொண்டும் படையினரை தாக்கியதுடன், விமானங்களின் தரிப்பிடங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். விமான ஓடுபாதையில் நின்ற விமானங்கள் விடுதலைப் புலிகளின் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகியதுடன், விமானங்களின் தரிப்பிடத்தில் நின்ற விமானங்கள் விமான எதிர்ப்புத் தூப்பாக்கியின் எறிகணைகளினால் வெடித்து சிதறியுள்ளன.

விமானப் படைத்தளத்தின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ராடர் மையம் என்பவற்றை கைப்பற்றிய அணியினர் தமது கட்டளைப் பீடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் வான்புலிகளின் இரண்டு விமானங்கள் வவுனியா வான்பரப்பினூடாக உள்நுழைந்து 50 கிலோ நிறையுடைய மூன்று குண்டுகளை வீசிவீட்டு சென்றுள்ளன. இவற்றில் ஒரு குண்டு விமான ஓடுபாதையில் வீழ்ந்து அதனை சேதமாக்கியதுடன், மற்றையது எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் மீது வீழ்ந்த போது இரண்டு வானூர்திகள் அழிந்து போயின. இந்த குண்டு வீச்சில் இரண்டு அதிகாரிகள் உட்பட 4 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் பாடுகாயமடைந்தனர்.

மூன்றாவது குண்டு முகாமிற்கு வெளியில் வீழ்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் படையின் தாக்குதலை அடுத்து வவுனியா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் தளத்தை நோக்கி தென்பகுதியினால் வந்துள்ளது. போக்குவரத்து வானூர்தியான இந்த உலங்குவானூர்தியை, 7.62 மி.மீ, 12.7 மி.மீ துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட தாக்குதல் உலங்குவானூர்தியாக இலங்கை விமானப் படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அநுராதபுர விமானத்தளத்தை தென்பகுதியினால் அண்மித்த இந்த வானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தளத்தின் தென்திசையில் 12 கி.மீ தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. உலங்குவானூர்தி மீதான இந்த தாக்குதல் அநுராதபுரம் படைத்தளத்தின் சுற்றாடலில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தளத்தை அண்மித்த உலங்குவானூர்தி மீது விடுதலைப் புலிகளே படையினரின் விமான எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் மற்றுமொரு கொமாண்டோ அணியினர் உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.

பலாலியில் இருந்து 36 படையினரை ஏற்றிச் சென்ற அன்ரனோவ்-24 ரக விமானம் 2000 ஆம் ஆண்டு மாசி மாதம் சாம்-16 ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி அநுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அநுராதபுரம் காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அநுராதபுரம் தளத்தில் ஏற்பட்ட சேதம் மிகவும் பாரியது. ஏறத்தாழ அங்கிருந்த பெரும்பாலான விமானங்களும், உலங்குவானூர்திகளும் அழிக்கப்பட்டு விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 விமானங்கள் முற்றாக அழிக்கப் பட்டுள்ளதுடன், 7 விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பிரி-6 ரக பயிற்சி விமானம்-01 (யேnஉhயபெ Pவு-6), கே-8 ரக நவீன பயிற்சி விமானம்-01, எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-02, எம்ஐ-17 கனரக போக்குவரத்து உலங்கு வானுர்தி-01, பெல்-212 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-01, பீச்கிராப்-01, ஆளில்லாத உளவு விமானங்கள்-03, செஸ்னா ரக கண்காணிப்பு விமானம்-01 என்பன அடங்கும்.

அழிவடைந்த மற்றும் சேதமடைந்த விமானங்களின் மொத்த பெறுமதி 439 மில்லியன் டொலர்களாகும். இது அதிக எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசினால் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் 500 மில்லியன் கடன் தொகைக்கு சமனானது.
இவற்றில் முக்கியமானது அமெரிக்க அரசினால் வழங்கப்பட்ட 40 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராப் கண்காணிப்பு விமானமாகும் (டீநநஉhஉசயகவ 200 ர்ஐளுயுசு). இலங்கை அரசிடம் உள்ள கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்களில் இதுவே நவீனமானது. இரு விமானங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்திருந்த போதும் அவற்றில் ஒன்றே தற்போது பாவனையில் இருந்து வந்தது. அதுவும் தற்போது அழிந்து போயுள்ளது.
இந்த விமானம் பாதகமான கால நிலையிலும், இரவிலும் பகலிலும் தொழிற்படும் ராடார்களையும் (ர்ரபாநள ளுலவொநவiஉ யுpநசவரசந சயனயச ளலளவநஅ) வெப்ப உணர்திறன் உள்ள கண்காணிப்பு மற்றும் ஒளிப்பட கருவிகளையும் கொண்டிருந்ததுடன், தாழ்வாக பறக்கும் விமானங்களை கண்டறியும் திறனும் கொண்டது. ஏறத்தாழ 8-9 மணிநேரம் தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபடக்கூடியதனால் இது ஆழ்கடல் கண்காணிப்பு பணிகளிலும் முக்கிய பங்காற்றி வந்தது.

மேலும் இந்த விமானத்துடன் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லாத உளவு விமானங்களும், செஸ்னா விமானங்களும் அழிந்து போனது அரசின் புலனாய்வு மற்றும் உளவு நடவடிக்கைக்கு பலத்த பின்னடைவாகும். தற்போது இலங்கை விமானப்படையிடம் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லாத உளவு விமானங்களே உள்ளன.

தாக்குதல் உலங்குவானூர்திகளை பொறுத்த வரையில் வான்படையிடம் இயங்கு நிலையில் உள்ள 11 எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக வானூர்திகளில் இரண்டு இழக்கப்பட்டதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது டன், கே-8, பிரி-6 பயிற்சி விமானங்களின் இழப்பும் விமானப்படையின் பலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இழக்கப்பட்ட விமானங்களை ஈடு செய்வது என்பது ஏற்கனவே 164.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ள பாதுகாப்பு செலவினத்தை 200 பில்லியனை விட அதிகமாக உயர்த்தலாம்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலும் தாக்குதல் அணியானது மிகவும் சிறந்த பயிற்சி பெற்ற கொமாண்டோக்களை உள்ளடக்கியது என்பது தெளிவானது.

பொதுநோக்கு கனரக இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், ஜிபிஎஸ் சாதனங்கள், செய்மதி தொலைத் தொடர்பு சாதனங்கள், டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள், வெடிமருந்துகள் என அதிக ஆயுதங்களை சுமந்து சென்ற இந்த அணி காட்டுப்புறச் சமருக்கும், நகர்ப்புறச் சமருக்கும் என சிறப்பாக பயிற்றப்பட்ட அணியாகும்.

விமானப் படைத்தளத்தின் முக்கிய பகுதிகளை அதிகாலை 3.20 இற்கு கைப்பற்றிய இந்த அணி அதனை காலை 11.00 மணி வரையிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், காலை 9.30 மணிவரையிலும் தமது கட்டளை பீடத்துடன் தொடர்புகளை பேணிவந்தது மிகப் பெரும் ஆச்சரியங்களை உலகின் போரியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் தரைப்படை கொமாண்டோக்களையும், விமானப்படையையும் இணைத்து விடுதலைப் புலிகள் நடத்திய இணைந்த நடைவடிக்கையானது போரியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பிரேசன் தவளை, 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு தளம் மீதான தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் தமது தரைப்படை மற்றும் கடற்படைகளை ஒருங்கிணைத்ததுடன் அந்த தாக்குதல்களில் பெரும் வெற்றியும் ஈட்டியிருந்தனர்.

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 ரக முப்பரிமாண ராடர்கள் வவுனியாவில் இருந்து தென்னிந்தியா வரையிலும் விமானங்களை கண்காணிக்கும் எனவும், அரசினால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவான விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என்பவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுதலைப் புலிகளின் விமானங்கள் எதிர்காலத்தில் தப்ப முடியாது எனவும் படைத் தரப்பு தெரிவித்து வந்திருந்தது.

மேலும் விடுதலைப் புலிகளின் கடல் விநியோக மார்க்கங்கள் மூடப்பட்டதனால் விமானங்களுக்குரிய எரிபொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு பலத்த பற்றக்குறை நிலவுவதாகவும் தென்னிலங்கையில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

ஆனால் மற்றுமொரு வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக நடத்தினால் அரசின் பிரச்சாரங்கள் அதற்கு எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும் என பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத௼br />. தற்போது அதுவே நிகழ்ந்துள்ளது.

இன்றைய போரியல் உத்திகளில் வான்படையும், சிறப்புப் படையணிகளும் முக்கியமானவை. உலகின் முன்னணி நாடுகள் இந்த இரு படையினரின் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளில் முக்கிய கவனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரின் போது தரைப்படையினரை களத்தில் இறக்கும் முன்னர் வான்படையின் பலம் ஈராக்கிய நிலைகளின் வலிமையை குறைக்க போதும் என அமெரிக்கப் படைகளின் பிரதம தளபதி ஜெனரல் நோர்மன் ஸ்வார்ஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

ஆனால் வான்படையினரினதும், சிறப்பு படையினரினதும் இணைந்த நடவடிக்கையே மிகவும் சிறந்தது என பிரித்தானியாவின் தளபதி ஜெனரல் பீற்றர் டி ல பில்லியர் தெரிவித்திருந்தார்.

பின்னர் பிரித்தானியா தளபதியின் கருத்தே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் போரும் இலகுவில் வெற்றி கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய பரிணாமமும் அதுவே. அதாவது 'எல்லாளன் நடைவடிக்கை" ஈழப்போரில் ஒரு புதிய பரிணாமத்தின் ஆரம்பம்.

ஆனால் அதன் தாக்கம் என்ன என்பது தான் இன்று எழுந்திருக்கும் முக்கிய கேள்வி. படைபலத்தில், பொருளாதாரத்தில், அரசியலில் என அதன் தாக்கம் பல காலம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் அதன் உடனடியான தாக்கமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை கண்டுவிடலாம் என்ற கனவை அது கலைத்திருக்கும் என்பதுடன் தமிழ்மக்களின் உளவுரனில் மிகப்பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (28.10.07)

0 Comments: