Sunday, June 29, 2008

இலங்கை அரசை அரவணைத்து தமிழரைப் புறந்தள்ளும் பாரதம்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப் பின் பிரதிநிதியான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தீண்டத்தகாத தரப்பினர் போல நமது அயல் பாரத தேசம் கருதுகின்றது. ஈழத்தமிழர்களின் மனதைப் பெரிதும் புண் படுத்தும் விடயம் இது.

ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தைக் காட்டி புலி களையும் தமிழர்களையும் விரோதிகள் போலத் தள்ளி வைத்து நடக்கும் இந்திய தேசத்திற்கு உறைப்பாகக் கொடுத்திருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன்.

கொழும்புக்கு வந்திருந்த இந்திய உயர்மட்ட இராஜந் திரிகள் குழுவினரைத் தாம் ஒருவராக தனியாக சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதாடிய சமயமே இது விடயத்தில் இந்நியத் தரப்புக்கு சில விடயங்களையும் காட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் அவர் என்று அறிய வந்திருக்கின்றது.

ராஜீவ்காந்தியை புலிகளே கொன்றனர் என்று குற்றம் சுமத்தும் இந்தியா, அதனால் புலிகளுடன் தான் எந்தத் தொடர்பாடலையும் வைத்திருக்க மாட்டாது என்று கூறு கின்றது.
ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தை தனி ஒரு கொலைச் சம்பவமாகப் பார்க்கக் கூடாது. அந்தக் காலகட் டத்தில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்ந்த இந்திய அமைதிப் படைகளின் இராணுவ நடவடிக்கை உட் பட்ட போரியல் போக்கினதும் அரசியல், இராஜதந்திரக் காய் நகர்த்தலின் பின்புலத்திலும் வைத்து, ஒட்டு மொத்த சூழ் நிலைக்கு அமையவே, அச்சம்பவத்தை நோக்க வேண் டும் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதை விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அமரர் அன்ரன் பாலசிங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு, கவனிக்கத்தக்கது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயம் அவர் இந்தியப் பிரதமராக பதவி வகிக்கவில்லை. அடுத்த இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அவ ருக்கு அதிகம் இருந்தது அவ்வளவே.

ஆனால், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்தி யாவின் அரசுத் தலைவராக பொறுப்பு வகித்த சமயமே படு கொலை முயற்சிக்கு உள்ளானார் அதுவும் பட்டப் பகலில் பலரும் பார்த்திருக்க அந்த முயற்சி நடந்தது.

அதுவும் வேறெங்கும் அல்ல. இலங்கையின் தலை நகர் கொழும்பில்தான் இந்திய அரசின் தலைவராக இலங் கைக்கு விஜயம் செய்து, இலங்கைத் தரப்பின் வர வேற்பை படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்ற சமயமே, இலங்கையின் அரசுத் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கண்முன்னாலேயே அந்தக் கொலை முயற்சி நடந்தது. நல்ல வேளையாக முன் னெச்சரிக்கையாக அணி வகுப்பு மரியாதையில் பங்கு பற்றி, அணி வகுப்பில் ஈடுபட்ட இலங்கைப் படையினரின் துப் பாக்கிகளுக்கு உயிர்ப்பான ரவைகள் கொடுக்கப்பட்டிருக் கவில்லை. அதனால் ராஜீவ் தப்பிப்பிழைத்தார்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட பேரினவாத சிங் களச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியில் ரவைகளோ சன்னங்களோ இல்லாத நிலையில் வேறு வழியின்றி தனது துப்பாக்கியால் தாக்கி ராஜீவ்காந்தியை கொல்ல முயன்றார். அதிவேக பிரதிபலிப்பு எதிர் விளைவைக் காட் டும் உசார் நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி இருந் தமை யால் அவர் சடார் என விலகித் தப்பிக்கொண்டார். துப்பாக்கி மடலின் அடி அவரின் தோள் மூட்டில் விழுந்ததால் அவர் தப்பினார். வலுவேகமாக கணப்பொழுதில் ராஜீவ் விலகி இருக்காவிட்டால் துப்பாக்கியின் கனமான பிடி ராஜீவ்காந் தியின் நடு மண்டையில் இறங்கி இருக்கும். அவர் அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கிடந்திருப்பார்.

சரி இலங்கை அரசின் படைச் சிப்பாயாக இருந்து அயல் தேசத்தின் அரசுத் தலைவரை இலங்கை வர வேற்று உபசரித்த ஒரு நிகழ்வில் வைத்து, அவரைப் படு கொலை செய்ய முயன்ற அந்த நபர் என்னவானார்?

நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட அவ ருக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி யும் என்ன செய்தார்கள்?

தமது நாட்டுக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமரை பலர் பார்த்திருக்க பகிரங்கமாக படுகொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த சிறைத் தண் டனையை ரத்துச்செய்து, அவருக்கு மன்னிப்பு அளித்து விடுவித்தமையும் மாத்திரம் அல்லாமல், அவரை ஒரு தேசிய வீரராக தேசப்பற்றுள்ள ஹீரோவாக காட்டப் பெற்று, அரசியல் உரிமைகளை வழங்கி, தேர்தலிலும் போட்டியிட்டு செல்வாக்குப் பெறுவதற்கு இலங்கை அரசுத் தலைமை வழியும் செய்து கொடுத்திருக்கின்றது.

பிரதமராக இருந்த ராஜீவை, கொழும்புக்கு அழைத்து அங்குவைத்து படுகொலை செய்ய அதுவும் பலரும் நேரில் பார்த்திருக்கப் படுகொலை செய்ய முயன்ற வருக்கு அவரின் சிறைத்தண்டனையை ரத்துச் செய்து, அவரை தேசிய ஹீரோவாகக் கொண்டுபோய் நிறுத்தியது இலங்கை அரசு.

அத்தகைய இலங்கை அரசுடன் வேற்றுமை பாராட் டாது ஒரு தரப்பினராக அதை ஏற்று கௌரவம் வழங்கிப் பேசும் இந்தியா
இந்தியப் படைகள் மூலம் ஈழத்தமிழ் மண்ணை ஆக் கிரமித்துப் பெரும் கொடூரங்களை அளவு கணக்கின்றி ஈழத்தமிழருக்கு புரிந்த இந்தியாவை ஈழத்தமிழர்கள் அந்தக் கசப்புக்களை மறந்து மன்னித்துவிட்டு, அரவணைக்க முயலும்போது அவர்களை உதாசீனம் செய்து அவர்களது நட்புக் கரங்களை நிராகரித்து விட்டு
தென்னிலங்கைத் தரப்போடு போய் பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு கொஞ்சிக் குலாவுவது அபத்தத்தி லும் அபத்தம்.
இதை கொழும்பு வந்திருந்த இந்திய உயர்குழுவிடம் காட்டமாக எடுத்துரைத்து உறைப்பாக கொடுத்தார் சம்பந்தர்.
அது இந்தியத் தரப்புக்கு புரிந்ததோ என்னவோ...!


நன்றி :- உதயன்

0 Comments: