Monday, June 30, 2008

இந்தியப் படைகளின் வருகையின் பின்னணியில் சில காரணங்கள்

சரித்திரம் தலைகீழாகத் திரும்புகின்றது என்ப தையே நிகழ்வுகள் காட்டுகின்றன.
1980 களின் கடைசியில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதி பதி பிரேமதாஸா, அவ்வேளையில் "சார்க்' உச்சி மாநாட்டை இலங்கையில் நடந்த வேண்டியவரானார்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் துருப்புகள் "அமைதி காக்கும் படை' என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்றமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பெரும் யுத்தம் ஒன்றையும் மேற்கொண் டிருந்தன.

""ஓர் ஆக்கிரமிப்புப்படை(இந்தியப்படை) இலங் கையில் பலவந்தமாக நிலை கொண்டிருக்கும்போது, "சார்க்' மாநாடு போன்ற ஒரு மாநாட்டை இங்கு நடத்த முடியாது. ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் இலங் கையின் இறைமைக்குத் தீங்கிழைக்கப்பட்டிருக் கையில் எந்த முகத்துடன் இந்த "சார்க்'கை நடத்துவது? ஆகவே நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் எனது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஆக்கிரமிப்புப் படைகள் இங்கிருந்து வெளியேறிய பின்னர்தான் "சார்க்' மாநாட்டை இலங்கையில் நடத்த முடியும்.'' என்று அப்போது அறிவித்தார் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸா.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை இங்கிருந்து வெளியேற்றுவதற்கான தனது தந்திர முயற்சிக்கு "சார்க்' மாநாட்டை அன்று பயன் படுத்தினார் அவர். அதில் அவர் வெற்றியும் கண்டார்.

"இந்திய (ஆக்கிரமிப்பு) இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய' சூழ்நிலையில் "இறைமை உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில்' சார்க் மாநாட்டை நடத்திக்காட்டினார் பிரேமதாஸா.

அன்று இந்தியப் படையை வெளியேற்ற "சார்க்' மாநாட்டை இலங்கை ஜனாதிபதி வசமாகப் பயன்ப டுத்தினார் என்றால்
இன்றோ, "சார்க்' மாநாட்டை இன்றைய இலங்கை ஜனாதிபதி நடத்துவதற்கு நிபந்தனை போட்டு, அந்த நிபந்தனை மூலம் தனது இந்தியப் படைகளைக் கொழும்புக்குள் இறக்குவதில் வெற்றி காணும் நிலையில் இந்தியத்தரப்பு வந்திருக்கின்றது.
"சார்க்' உச்சி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டு மானால் அதில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளின் தலைவர்களும் அதில் பிரசன்னமாகி இருக்கவேண்டும். ஒரு தலைவர் சமுகம் தராத நிலையில் கூட "சார்க்' மாநாட்டை நடத்த முடியாது என்பதுதான் வழமையான ஏற்பாடு.

எனவே "சார்க்'கின் முக்கிய உறுப்பு நாடான இந்தி யாவை விட்டு விட்டு அந்த மாநாட்டை இலங்கை நடத்திவிட முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆகவே, 1989 இல் பிரேமதாஸா அரசு "இந்தி யப் படையை வெளியேற்றினால்தான் இலங்கையில் சார்க் மாநாடு' என்று விதித்த நிபந்தனைக்கு மாற்றாக "இந்தியப் படைகளை இலங்கைக்குள் அனுமதித்தால் தான் இங்கு சார்க் மாநாடு' என்ற கட்டாயத்தை இலங் கைக்கு இப்போது ஏற்படுத்தி அதில் வெற்றியும் காணும் நிலையை எட்டியிருக்கின்றது இந்தியா.
இலங்கைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் செய்வதா யின் இந்தியாவே அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடு களையும் படைகளையும் இலங்கையில் நிறுத்த வேண் டும் என்று இந்தியா போட்ட நிபந்தனைக்கு இலங்கை மண்டியிட்டிருக்கின்றது.

இத்தகைய நிபந்தனையை விதித்து, அதற்குக் கொழும்புத் தலைமையை இணங்கச் செய்ததன் மூலம் இலங்கை தொடர்பான ஓர் உண்மையை இந்தியா சர்வதேச ரீதியில் பிரசித்தம் செய்திருக்கின்றது என்ப தும் நாம் கவனிக்கத்தக்கது.

அதாவது முக்கிய உலகத் தலைவர் ஒருவர் கொழும் புக்கு விஜயம் செய்வதற்கான பாதுகாப்பு நிலை மையோ, அல்லது அவருக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புக் கொடுக்கும் என்ற உறுதிப்பாடோ இலங் கையில் இல்லை என்பதுதான் அது. அத்தகைய நாடு களின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதானால் தங்களுக்குரிய பாதுகாப்பையும், ஏனைய ஏற்பாடுகளையும், பாதுகாப்புக்கான காவலர்களையும் கூட தத்தமது நாடு மூலமே இலங்கையில் செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய நடவ டிக்கை மூலம் துலாம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்துக் கான உதவி என்ற பெயரில் இந்தப் பிராந்தியத்தில் இந் தியாவுக்குச் சவாலாக இருக்கக்கூடிய நாடுகளையும் சக்திகளையும் இலங்கைக்குள் அதிகம் இழுத்து வந்து ஈடுபடுத்தியிருக்கின்றது கொழும்பு அரசு.
இந்தப் பின்புலத்தில், இந்தியத் தலைவர்கள் இலங் கைக்கு விஜயம் செய்யும்போது அந்த இந்திய எதிர்ப்பு சக்திகள், "விடுதலைப் புலிகளின் பெயரில்' தாங்களே சில மோசமான விளைவுகளைத் தரக்கூடிய காரியங் களை செயல்களை ஒப்பேற்றி விட்டு, இலகுவாகப் பொறுப் பைப் புலிகளின் தலையில் சுமத்திவிட்டுத் தப்பிக் கொள்ள முயலலாம் என்ற சந்தேகமும் புதுடில்லிக்கு உண்டு.

இத்தகைய வீண் விபரீதங்களுக்கு எள்ளளவும் இடம் கொடுக்காமல், கொழும்புக்கு வரும் இந்தியப் பிரத மரின் பாதுகாப்பைத் தானே நேரடியாகத் தலையிட்டு நூறுவீதம் உறுதிப்படுத்தவும், இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை சர்வதேச சமூகத்துக்குப் பகி ரங்கப்படுத்திக் காட்டவுமே, இத்தகைய சொந்தப் பாது காப்பு நடவடிக்கைத் திட்டம் என்ற இந்தக் காய்நகர்த் தலை இந்தியா முன்னெடுத்திருக்கின்றது என்பது திண்ணம்.

நன்றி:- உதயன்

0 Comments: