Thursday, March 27, 2008

இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா?

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.

கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன.

யாழ்பாணத்தில் கிளாலி,முகமாலை ,நாகர் கோவில்ஆகிய பகுதிகளிலும் வவுனியா,மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளிலும் களமுனைகள் திறக்கப்பட்டுள்ளன.

பல மாதங்களாக இரு தரப்பும் இப்பகுதிகளில் மோதி வருகின்றனர்.இராணுவத்தை பொருத்தவரையில் அது விடுதலைப்புலிகளை கள முனைகளுக்குள் வலிந்திழுத்து தாக்குவதாக கூறுகிறது.

விடுதலைப்புலிகளோ மாறாக தாங்கள் தற்காப்பு நகர்வுகளை மாத்திரமே முன்னெடுப்பதாக கூறுகின்றனர். இரு தரப்பும் கனரக ஆயுதங்களை போர் முனைகளில் பயன்படுத்துகின்றனர்.

இரு தரப்பினரதும் யுத்த யுக்திகள் மாறுபட்டதாகவே உள்ளன. இதேவேளை வன்னியில் உள்ள விதலைப்புலிகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாங்கள் குறிவைத்து வருவதாக இலங்கை விமானப்படை மார்தட்டி வருகிறது, இதில் உண்மை இருக்காலாம். களமுனைகளில் விடுதலைப்புலிகளும் அவ்வபோது தங்களது கனமான சமரினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரையில் இருதரப்பினரும் வட போர்முனையில் வெற்றிக் கனிகளை பறிக்கவில்லை என்பது தான் உண்மை.வட போர் முனைப்பற்றிய கள தகவல்களை இராணுவ தரப்பு எப்போதுமே முந்திக்கொண்டு தங்களுக்கு சாதகமாகவே கூறிவருகிறது. விடுதலைப்புலிகளை பொருத்தவரையில் பல சந்தர்ப்பங்களில் மௌனிகளாக இருந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் தாங்கள் பெறுகின்ற வெற்றிகளை உடனடியாகவே அம்பலப்படுத்தியும் விடுகின்றனர்.

விடுதலைப்புலிகளை பொருத்தவரையில் அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை பதுங்கி இருப்பதையே கைங்கரியமாக கொண்டுள்ளனர். கண்டப்படி தாக்குவது என்பது அவர்களை பொருத்தவரையில் சாத்தியமற்றது. இலங்கை இராணுவத்துக்கு இருக்கின்ற சர்வதேச நாடுகளின் பக்க பலம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை.எனவே இலங்கை இராணுவம் நவீன ஆயுதங்களுக்குள் மிதக்கிறது என்று கூட சொல்லலாம்.

எது எப்படி இருப்பினும் வடபோர் முனை இரு தரப்புக்கும் இறுக்கமாக இருப்பது போலவே தெரிகிறது.

எனவே வெற்றி ,வெற்றி என்று கூறிக்கொண்டு காலம் இழத்தடிக்கப்படுமா?இப்படி தொடர்ந்தால் வடபோர் முனையில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர் பாரிய மனித பேரவலங்களுக்கு வழிசமைக்க போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

காலவரையறையின்றி தொடரப்போகும் போரால் என்ன பலன் கிடைக்க போகிறது. எனவே இன்னொரு பேச்சை தீர்மானிக்கபோவது வட போர் முனை என்பது உறுதியாக தெரிகிறது.

வட போர் முனை ஏற்படுத்தும் வெற்றி அல்லது தோல்வி கண்டிப்பாக மற்றொரு பேச்சுவார்த்தியை தீர்மானிக்கும் என்பது ஐயமில்லை. காலவரையறையின்றி தொடரும் போர் ஒருபோதும் யுத்தத்தின் மீது நம்பிக்கையை தோற்றுவிக்காது .இதை தெரிந்து கொண்டுதான் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இனப்பிரசினை தீர்ப்பதற்கு யுத்தம் தீர்வாகாது என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இதை யாரும் கேட்டப்படில்லை.இலங்கை இராணுவத்தினரின் ஆட்புல தொகை வடகிழக்கை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருபத்தற்கு போதாததாகவே இருக்கின்றது. எனவே களமுனைமாற்றங்களால் நிரந்தரமான வெற்றியை இலங்கை இராணுவத்தால் ஈட்டமுடியாது என்பதும் உறுதியாக உள்ளது.களங்கள் நாளந்தம் மாறி கொண்ட போகும் வெற்றி என்பதும் அப்படிதான்?

எனவே இதிலிருந்து இன்னொரு பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் இடப்போவது வடபோர் முனையே என்பது தெட்ட தெளிவாகிறது. இரு தரப்புக்கும் வட போர் முனை கொடுக்கப்போகும் வெற்றி அல்லது தோல்வி பேச்சு மேசையில் அவர்களை இருத்த போகிறது . அதன் அடிப்படையில் தான் உறுதியான தீர்வினை வலியுறுத்த முடியும்.சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஆக்கம் வீரகேசரி இணையம்

0 Comments: