Sunday, March 30, 2008

இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை

""எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக் கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.''

இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத் தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன்.

""இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித் தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலி களை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் அதேசமயத்திலேயே இலங்கைக்கான இந்திய இராணுவ உதவியும் தொடர்கின்றது.

பேரழிவு ஏற்படுத்தாத ஆயுதங்கள் என்ற பெயரில் இராணு வத் தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்குகின்றது; "ராடர்' போன்ற இராணுவச் செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் வான்வழிப் பாதுகாப்புக் கருவிகளை இந்தியா கொடுத்து உதவு கின்றது; இலங்கையுடன் கூட்டுக் கடல்ரோந்திலும் கண்காணிப் பிலும் ஈடுபடுகின்றது. இலங்கைப் படையினருக்கு இந்தியா வில் விசேட பயிற்சி வசதிகள் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் தமிழர் தரப் புக்கு எதிரான கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைப் போற்றித் துதிப்பது போல அதன் இராணுவத் தளபதியை வரவேற்று விசேட கௌரவமளிக் கின்றது இந்தியா. அவருக்கு அணி நடை மரியாதைகள், குதூகல வரவேற்பு என்று தூள் கிளப்புகிறது புதுடில்லி.
அவரது வருகையை ஒட்டி இந்தியாவில் தகவல் வெளியிட்ட இந்தியப் படைகளின் மூத்த அதிகாரி ஒருவர் ""புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் கைகள் நலிவடை வதை இந்தியா விரும்பவில்லை'' என்பதைப் பகிரங்கப்ப டுத்தியதன் மூலம் இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட் டைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்திருக்கின்றார்.

இவ்வாறு யுத்த வெறித் தீவிரத்தோடு இராணுவ வழித் தீர் வில் முனைப்புக் கொண்டு நிற்கும் கொழும்புக்கு "வீடு எரிக்கும் ராஜாவுக்குக் கொள்ளிக்கட்டை தூக்கிக் கொடுக்கும் மந்திரி போல' இந்தியா செயற்படுகின்ற பின்னணியில், நடேசனின் குற் றச்சாட்டு மிக அர்த்தமுள்ளதாகவே படுகின்றது.

இந்தச் சமயத்தில் ஈழத் தமிழர் தரப்பில் ஒரு முக்கிய விடயத்தை இந்திய ஆளும் தரப்புக்கு இங்கு நினைவூட்டி சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

ஈழத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்திய உயர்மட்டத் தலை வர்களை 2006 டிசெம்பர் 22 ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்தி ருந்தனர். தமிழர்கள் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் இந்திய அரச உயர் பீடத்தின் சார்பில் பிரதமர் மன்மோன்சிங், வெளியு றவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் போன்றோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
இந்தச் சந்திப்புக்குச் சற்றுக்காலம் முன்னர்தான் பொது நல அமைப்பு நாடுகளின் கம்பாலா மாநாட்டுக்குச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை இனப்பிரச்சினை குறித்து அங்கு விரிவாக உரையாடியிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் பெறுபேறுகளும் ஈழத் தமிழர்களின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சந்திப்பின்போது ஆராயப் பட்டன.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப் பதற்குக் கொழும்பு அரசு கங்கணம் கட்டி நிற்பதை இந்தச் சந்திப்பின்போது முறைப்பாடாகத் தமிழர் தலைவர்கள் முன் வைத்தனர்.
"இது குறித்துக் கொழும்புடன் பேசியிருக்கின்றோம். வடக்கு கிழக்கு பிரிக்கப்படமாட்டாது என எமக்கு உறுதி தந்திருக்கின் றார்கள். வடக்கு கிழக்கு ஒன்றணைந்திருப்ப தன் முக்கியத்து வத்தைக் கொழும்புக்கு விளக்கி, அதனை அவர்கள் ஏற்கச் செய்திருக்கின்றோம்.' என்ற சாரப்பட இந்தியத் தலைவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் தெளி வாகப் பதில் தந்தனர்.

"கொழும்பின் உறுதி மொழிகளில் எமக்கு நம்பிக்கையில்லை. அதுதான் எமது அனுபவப் பாடம்; பட்டறிவு. வழமையான தனது பாணி யில் தன்னுடைய இந்த வாக்குறுதியையும் கொழும்பு தவறவிட்டு காற்றில் பறக்கவிட்டு ஏமாற்றி, வடக்குக் கிழக்கைப் பிரிக்க முயன் றால் என்ன செய்வீர்கள்?' என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள்.
"எங்களுக்கு எல்லா வழிமுறைகளும் திறந்தே வாயப்பாகவே உள்ளன.'(All the options are open for us!) என்று இந்திய ஆளும் வர்க்கம் அப்போது உறுதியாகப் பதில் சொன்னது.
ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? வடக்கு கிழக் கைத் தனித்தனியாகப் பிரித்து, அதை உறுதிப்படுத்துவதற் காகக் கிழக்கிற்கு தனியாக மாகாண சபைத் தேர்தலை அவசர அவசரமாக நடத்தி முடிக்கத் துடிக்கிறது இலங்கை. அதற்கான நடவடிக்கைகளை விழுந்தடித்து வேகமாக எடுக்கின்றது.

ஆனால், "எமக்கு எல்லா வழிகளும் திறந்தே இருக்கின்றன!' என்று அப்போது தமிழ்த்தலைவர்களிடமே நேரில் மார்தட்டிய இந்தியத் தலைமை, கொழும்பு அரசின் தற்போதைய காய்நகர்த் தலை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் முழுசிக் கொண்டு அந்தரிக்கின்றது.

கொடுத்த வாக்குறுதியையும் கோட்டை விட்டுவிட்டு எதையும் செய்ய முடியாது கையைப் பிசைகிறது புதுடில்லி.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாதிக் கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்கள் பெரும்பான்மையின ரான சிங்களவரால் பலமுறை வாக்குறுதி கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.இந்த ஏமாற்றுதல் புராணத்தை இப்போது கொழும்பிடமிருந்து புதுடில்லியும் கற்றுக்கொண்டு இறக்குமதி செய்திருக்கிறது போலும்.
ஏற்கனவே, இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முதல்நாள் இரவு புலிகளின் தலைவர் பிரபாகரனை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்து நீண்ட நேரம் பேசியபோது, எழுதப்படாத கனவான் ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டு பல வாக்குறுதிகளை வழங்கினார் இந்தியப் பிரதமர். ஆனால் பின்னர்அவை காற்றில் பறக்க விடப்பட்டன. இதன் பெறுபேறாகவே திலீபனின் உண் ணாவிரதமும், மரணமும், இந்தியப் படைகள் புலிகள் யுத்த மும் நேர்ந்தன என்பது சரித்திரம்.

அதுபோலவே, வடக்குகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்த எல்லாவிதமான வழிகளும் தங்களுக்குத் திறந்திருக்கின்றன என்று ஈழத் தமிழர்களுக்கு உறுதியளித்த இந்தியத் தலைவர், இப்போது வடக்குகிழக்குப் பிரிப்பு உறுதிப்படும்போது வாக்குறுதியை மறந்து வாளாவிருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர், சுமத்தும் குற்றச்சாட்டும் புதுடில்லி குறித்து ஆழமான சந்தேகங் களையே தமிழருக்கு எழுப்புகின்றன.


நன்றி :- உதயன்

0 Comments: