Sunday, February 24, 2008

ஊடகப் போக்கிரித்தனம்

"விமானத் தாக்குதலில் யாராவது கொல்லப்பட்டிருந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந் தவர்கள்தான்.
""திட்டவட்டமாக விடுதலைப் புலிகளின் இலக்கு களைத்தான் தாக்குகிறோம். உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் அவை மேற்கொள்ளப்படுகின்றன.
""எவ்வித ஆதாரமும் இல்லாமல் சில போலியான மாற் றப்பட்டபுகைப்படங்களை வெளியிட்டு விமானத் தாக் குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று காட்ட முனைகிறது விடுதலைப் புலிகள் இயக்கம்.''
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இவ்வாறு கூறியிருக்கின்றார்.
பூநகரியில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சில் கொல்லப்பட்டமை தொடர்பாக லண்டனிலிருந்து சிங்கள பி.பி.ஸி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
நேற்றுமுன்தினம் பூநகரியில் விமானப் படை மேற் கொண்ட கொடூரத்தில் எட்டு அப்பாவிகள் பலியாகி பத்துப் பொதுமக்கள் காயமடைந்தமை பற்றிய தகவல்கள் கொழும் பிலிருந்து வெளியாகும் ஊடகங்களில் தமிழ்ப் பத்திரிகை களில் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுக்கு விமானக் குண்டு வீச்சில் காலில் காயம்', "பிரபாவின் நிலைமை மோசம்', "பிரபாவின் மனைவி வன் னியிலிருந்து புறப்பட்டு தமிழ் நாட்டில் தஞ்சம்' என் றெல் லாம் தகவல்களை எடுத்து செய்தி வெளியிடும் கொழும்பு ஊடகங்களுக்கு
"நோய் வாய்ப்பட்டு சாவின் விளிம்பில் பிரபாகரன்' என்று தொடங்கி, பிரபாவின் குருதி அழுத்த அளவு இது, குருதியில் வெல்லத்தின் வீதம் இவ்வளவு அவருக்கு இரத்தக் கொதிப்பு, கண்பார்வை மங்கல் என்பது உட்பட நெருங்க முடியாத பிரபாவின் மருத்துவ அறிக்கைகளை ஏதோ பக்கத் தில் தமது மருத்துவரை வைத்து, பரிசோதித்து அறிந்து கொண்ட மாதிரித் தகவல்களை வெளியிடும் கொழும்புப் பத்திரிகைகளுக்கு
பிரபாகரனின் படுக்கை அறை எங்கிருக்கின்றது, மல சல கூடம், குளியல் அறை, சாப்பாட்டு அறை என்பன எங்கி ருக்கின்றன என்பதுவரை சகலதையும் அத்துப்படியாக அறிந் தவை போல வரைபடங்களோடு பாதுகாப்பு இல்லத்தின் விவரங்களை அம்பலப்படுத்துகின்ற மோப்ப சக்தியுள்ள கொழும்பு இதழ்களுக்கு
பூநகரிக் கொடூரம் தெரியவரவில்லை அல்லது அதனை உறுதிப்படுத்தி, தகவல் பெறமுடியவில்லை.
அப்பாவிகளுக்கு எதிரான இத்தகைய கொடூரங்கள் பற் றிய தகவல்கள் தன்னும் தென்னிலங்கை மக்களுக்கு சென் றடைவதைத் திட்டமிட்டே தடுக்கும் தமது நாசகாரப் பணி மூலம் தென்னிலங்கை அரசை மட்டுமல்ல, தென்னிலங்கை மக்களையே இனப்பாகுபாட்டுக் கொடூரத்துக்கு நெட்டித் தள்ளித் தூண்டுகின்றன கொழும்பு ஊடகங்கள்.
அரச கெடுபிடிகளுக்குப் பயந்து அல்லது தென்னி லங்கை இனவாதத்தைத் தாமும் வரித்துக் கொண்ட கார ணத்தால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதத்தை மூடி மறைத்து, ஒழிப்பதற்கு துணை போகும் பெரும் வர லாற்றுக் குற்றத்தைத் தென்னிலங்கை ஊடகங்கள் இழைத்து வருகின்றன.
ஆனால் அத்தகைய ஊடகங்களும் அவற்றை வழி நடத்து வோரும் நினைப்பது போல அல்லது நம்புவது போல மூடி மறைத்து சப்புக்கட்டுக் கட்டக்கூடிய விடயங்கள் அல்ல இவை.
இராணுவப் பேச்சாளர் வேண்டுமென்றால் அரசிடம் தாம் வாங்கும் சம்பளத்துக்காக முழுப் பூசணிக்காயை சோற்றுக் குள் மூடி மறைக்க முயலலாம். ஆனால் நவீன தொழில் நுட்ப வசதிகளும் நுணுக்கமான தொடர்பாடல் முறைமை களும் விருத்தி அடைந்துள்ள இக்காலகட்டத்தில் இத் தகைய கொடூரங்களை வாய் ஜாலம் மூலமாகவோ, ஊடக மறைப்பு மூலமோ ஒளித்து விட முயல்வது சூரியனை சாக் குப் போட்டு மூடிமறைத்து ஒளித்துவிட எத்தனிப்பதற்கு ஒப்பானதாகும்.
தென்னிலங்கை ஊடகங்களின் இத்தகைய பக்கச் சார் புப் போக்கு மூலம் அரச பயங்கரவாதம் பற்றிய உண்மை கள் தென்னிலங்கை அப்பாவிச் சிங்களவர்களின் மனதை எட்டாமல் தடுக்கலாம்.
ஆனால், சர்வதேச மட்டத்தில் இத்தகைய விடயங் களைச் சிந்தித்துப் பார்த்து, மதிப்பிட்டு, முடிவுகளைத் தீர் மானிக்கும் தரப்புக்களை இத்தகவல்களும் உண்மைகளும் எட்டாமல் தடுத்து விடவே முடியாது.
எனவே, இவ்விடயங்களைஒட்டி தெற்கு மக்கள் ஏதோ ஓர் உலகில் கற்பனை எண்ணத்தில் சஞ்சரித்துக் கொண் டிருக்க உலகம் இவ்விடயம் குறித்துப் புரிந்து கொள்ளும் யதார்த்தமும், கள நிலைமைகளும் வேறாக இருக்கப் போகின்றன.
அதன் விளைவு தென்னிலங்கைக்குத்தான் இறுதியில் பாதகமாக அமையும்.
ஆகவே, விமானக் குண்டுவீச்சுக் கொடூரம் போன்ற மோசமான அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் முயற்சி மூலம் முழு உலகுக்குமே காதில் பூச்சுற்றலாம் என்று தென் னிலங்கை ஊடகங்கள் கருதினாலும் கூட, உண்மையில் தமது தெற்கு மக்களைத் தவறாக வழி நடத்தி அவர்களின் காதில் பூச்சுற்றும் கைங்காரியத்தையே அவை மேற்கொள் கின்றன.
இத்தகைய அரச பயங்கரவாதச் செயல்களின் ஒட்டு மொத்த விளைவு, கொசோவோ பூகம்பம் போல வெடிக்கும் நிலையை ஒரு நாள் எட்டும்போதுதான், இந்த ஒளிப்பு மறைப்புகளின் பெறுபேறையும் ஊடகப் போக்கிரித்தனத் தின் விளைவையும் தென்னிலங்கை புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்படும்.
ஆனால் அவ்வேளையில் தென்னிலங்கை தனது கடைசி பஸ்ஸையும் தவற விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கும். அது தான் நடக்கப் போகின்றது.

நன்றி:-உதயன்

0 Comments: