Friday, November 30, 2007

ஐ.நாவுக்கு இது வெட்கம்!

"இலங்கை இனப்போரின் போக்கை ஆழமாக அவதானித்து வருகின்றவர்களுக்கு, வன்னியில் கடந்த செவ்வாயன்று அரசுப் படைகளின் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக் கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் பேர வலம் தரும் மோசமான விளைவை உருவாக்கும் என்ற அச்ச உணர்வையே ஏற்படுத்துகின்றன'' என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த ஆசிரிய தலையங்கம் அச்சாகிக்கொண்டிருந்த சமயத்திலேயே நேற்று முன்தினம் மாலை கொழும்பு நுகேகொடையில் 19 அப்பாவிப் பொதுமக்களின் உயி ரைக் குடித்து, சுமார் நாற்பது அப்பாவிகளைப் படுகாயப் படுத்தி, பெருமளவு உடைமைகளுக்கு அழிவை ஏற்படுத் தும் கோரகொடூரகுண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது.

கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானப் படை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டமையைக் கண்டிப்பதுபோல
அடுத்தநாள் அநுராதபுரம் மாவிலாச்சியவில் நான்கு அப்பாவிகளும், கடந்த செவ்வாயன்று வன்னியில் கிளை மோர்த் தாக்குதலில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட 11 அப்பாவிகளும், அதேநாள் விமானக்குண்டு வீச்சில் பத்துப் பொதுமக்களும் கோரமாகக் கொல்லப் பட்டமையையும் கண்டிப்பது போல
நுகேகொடைக் குண்டுத் தாக்குதலையும் வன்மையாகவும் கவலையோடும் கண்டிக்கிறோம்.
வன்முறைக்கு எதிரான நீதியாளர்கள் என்று தங்க ளைக் காட்டிக் கொள்ளும் தனித்தரப்புகள் ஒவ்வொன்றும் தொடக்கம், சர்வதேசத் தரப்புகள் வரை அனைவருமே இந் தத் தாக்குதல்கள் அனைத்தையுமே ஒரே விதமாகவே கண் டிக்க முன்வரவேண்டும். நாம் முன்னர் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல "ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறுகண்ணில் வெண்ணெய்யும் தடவுவது போல' இவ் விவகாரத்தில் நடந்துகொள்வது முறையற்றது.

வேண்டுமானால் ஆனந்தசங்கரி போன்ற அரசியல் பிர கிருதிகள் தென் னிலங்கை எஜமானர்களுக்கு வாலாட்டு வதற்காக, வன்னி யில் ஒன்பது மாணவர்கள் உட்பட பதினொரு அப்பாவிகள் கிளைமோர்க் குண்டில் கொல்லப்பட்டனர் என்ற தகவலைப் புனைகதையாகவோ, கட்டுக்கதையாகவோ காட்டிப் புறந்தள்ளலாம். ஆனால், ஐ.நா. போன்ற சர்வதேச நடுநிலை அமைப்புகள் அப்படி நடந்து கொள்ள முடியாது. அவை நீதியுடன் செயற்படுவது மட்டு மல்ல, நீதியுடன் செயற்படுகின்றவையாகத் தம்மைக் காட்டிக்கொள்ளவும் வேண்டும்.
ஆனால்
நுகேகொடையில் நடந்த கோரக் குண்டுவெடிப்பை யும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக் குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பையும் கண்டித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், கிளிநொச்சியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் தில் ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அலுவலகம் சேத மடையக் காரணமாக இருந்த விமானக்குண்டு வீச்சுக் குறித்து வெறும் கவலை சிரத்தை மட்டும் வெளியிட்ட தோடு அடங்கிவிட்டார். அந்தத் தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டமை குறித்தோ, அதற்கு சற்று முன்னர் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் உட்பட பதினொரு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தோ கண்டனமோ கவலையோ தெரிவிக்கும் நியாயம் கூட அவருக்குத் தெரியவில்லை; நீதி புரியவில்லை.

இதனைத்தான் எமது நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில்
""பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல் போக்குக்கு அப் பாவிகள் இலக்காகும் இரையாகும் கொடூரம் இலங் கைத் தீவில் தீவிரம் பெறுமானால், இவ்விடயத்தில் பொறுப் புடனும், நீதியுடனும், நடுநிலையுடனும் செயற்படத் தவறிழைத்த சர்வதேசமும் அக்குற்றத்துக்குப் பெரும் பொறுப் பேற்க வேண்டி நேருவது தவிர்க்க முடியாதது.'' என்று குறிப்பிட்டிருந்தோம்.
அந்தக் குற்றச்சாட்டில் உள்ள வலுத் தன்மையை ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் சுமத்திய குற்றச்சாட்டை நாற்பத்தியெட்டு மணி நேரத் திற்குள் உண்மை என்று தமது ஒரு பக்கச் சார்பான கண்டன அறிக்கை மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார் ஐ.நா. செயலாளர் நாயகம்.

கொழும்புக் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர் களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் குடும்பத்தவர்களுக் கும் அனுதாபம் தெரிவிக்க முன்வந்துள்ள ஐ.நா. செய லாளர் நாயகத்துக்கு, அதற்கு முதல்நாள் தமிழர் தாயகத் தில் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல் லப்பட்ட ஒன்பது பாடசாலை மாணவர்கள் உட்பட இருபதுக்கும் அதிகமான அப்பாவிகளினதும் படுகாயமடைந்த டசினுக்கும் மேற்பட்ட பொதுமக்களினதும் குடும்பத்த வர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுதாபம் தெரிவிக் கும் நியாயம் தெரிந்திருக்கவில்லை.
"" எமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக் கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.'' என்று பிரபாகரன் கூறியதை இவ்வளவு விரைவில் ஐ.நா. செய லாளர் நாயகம் உண்மையாக்கிக் காட்டியிருக்கின்றார்.
அனைத்து மக்களுக்கும் பொதுவான நடுநிலை யான அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஐ.நாவுக்கு இத்தகைய நிலைப்பாடு முற்றிலும் பாரபட்சமானது; வெட்கக் கேடானது.

uthayan.com

0 Comments: