Wednesday, January 2, 2008

பேயரசு செய்யும் நாட்டின் பிணம் தின்னும் சாத்திரங்கள்

"பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!' துரியோதனன் சபையில் திரௌபதி கூறியவை என "பாஞ்சாலி சபதத்தில்' பாரதியார் குறிப்பிட்ட இந்த வாசகம் தாம் இன்றைய அவல நிலையில் நினைவுக்கு வருகின்றது.
நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி முறையும் அதன் கீழ் இடம்பெறும் சம்பவங்களும் இதனைத்தான் உறு திப்படுத்துகின்றன.

தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மிதவாதத் தலைவர்கள் வரிசையாகக் கொன்றொழிக் கப்படுகின்றார்கள். அவர்கள் புலிகள் சார்புடையவர்கள் என்றாலும், எதிரானவர்கள் என்றாலும் ஈழத் தமிழர்க ளின் நியாயமான உரிமைக்குக் குரல் எழுப்புவார் களாயின் கொல்லப்படுவார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சட்டம் சாஸ்திரம் போலும்.
அதுவும் தமிழ்த் தலைவர்கள், இந்த இலங்கைத் தீவின் சட்டத்தை யாக்கும் உயர்பீடமான நாடாளுமன் றின் அங்கத்தவர்களாக இருக்கும்போதே படுகொலை செய்யப்படுவது என்பதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

அவர்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களின் பிர தான இரு கட்சிகளில் இருந்தால் கூட அவர்கள் தமிழர் களின் உரிமை குறித்துக் குரல் எழுப்புவராயின் உரிய பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்பது இப்போது நிதர்சனமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அரசுக்கு ஆதரவ ளிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உச்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசினால், ஜனநாயகரீதியில் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஏனைய மிதவா தத் தலைவர்களுக்கு, பாதுகாப்பை விலக்கி, அவர்களை ஆபத்தில் ஆழ்த்தத்தான் முடியும் என்பதும் இப்போது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக அவர்களுக்கு எதிராக பௌத்த, சிங்களப் பேரினவாத அரசுகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப் பிவரும் மனோ கணேசன் மற்றும் மகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு திடீரென பெருமளவில் வெட்டிக் குறைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக வரவு செலவுத்திட்டத்தின்போதும், அவசர காலச் சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பின் போதும் எதிர்த்து வாக்களித்து, அரசைக் கடுமையாக விமர்சித்த குற்றத்துக்காக மனோ கணேசன் எம்.பி. நாட்டை விட்டு வெளியேற வேண்டியவரானார். மகேஸ்வரன் எம்.பி. உலகை விட்டே வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.

தமிழர் தம் அவலத்தை அகிலத்துக்கு எடுத்துரைத்த குற்றத்துக்காக ஜோஸப் பரராஜசிங்கம் எம்.பி. தேவாலயத்துக்குள் வைத்து கிறிஸ்மஸ் ஆராதனை யின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மகேஸ்வரன் எம்.பி. புதுவருட வழிபாட்டில் ஆலய வழிபாட்டின் பின்னர், உள்வீதியைச் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டி ருந்தவேளை சுட்டுக் கருவறுக்கப்பட்டார். ரவிராஜ் எம்.பி. தலைநகர் கொழும்பில், பட்டப்பகலில், உயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் கொன்றொழிக்கப்பட்டார். இதேபோல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் படுகொலை செய்யப்பட்டார்.
யாழ். குடாநாட்டில் கோரமாகத் தலைவிரித்தாடும் படுகொலைகள், ஆள்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணி குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவரங் களோடு அம்பலப்படுத்துவேன் என மூன்று நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும், சிங் கள இணையத்தளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் கூறிய பின்னரே அவர் இவ்வாறு படுகொலை செய்யப் பட்டிருக்கின்றார்.
இந்த அறிவிப்பு.

இதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராகத் தலைநகரி லும் பிற இடங்களிலும் அரச அராஜகம் அரங்கேறிய போது அவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து நாடாளு மன்றிலும் வெளியிலும் பட்டவர்த்தனமாகக் கடும் எதிர்ப்பைக் காட்டி வந்த மகேஸ்வரனின் உறுதியான போக்கு
ஏற்கனவே ஒரு தடவை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி காயங்களுடன் தப்பிய மகேஸ்வரனின் உயிருக் குப் பெரும் அச்சுறுத்தல் இருந்தபோதும் அது குறித்து அண்மையில் கூட நாடாளுமன்றில் மகேஸ்வரன் சுட் டிக்காட்டிய நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை வேண்டுமென்றே விலக்கி, அவரை ஆபத்தில் ஆழ்த்திய அரச பாதுகாப்புத் தரப்பின் சூழ்ச்சி நடவடிக்கையாகும்.

கதிர்காமர் படுகொலைக்கும், நுகேகொடை குண்டு வெடிப்புக்கும் காரணமானவர்கள் யார் என்பது உறுதிப் படுத்தப்பட முன்னரே சூத்திரதாரிகளைக், "கண்டுபிடித்து' , கண்டித்து, நடவடிக்கை எடுத்து, விரைந்து செயற்பட்ட சர்வதேச சமூகம் இப்போது மகேஸ்வரன் படுகொலைக்கு என்ன செய்யப்போகிறது? வெறும் கண்டனத்துடன் அமைந்து விடப் போகின்றதா? அல்லது நியாயத்துடன் நடந்து கொள்ளப்போகின்றதா?
ரவிராஜ் படுகொலைக்கு "ஸ்கொட்லண்ட்யார்ட்' பொலிஸாரைக் கூட்டி வந்து விசாரணை செய்வோம் என்று "காதில் பூச்சுற்றியமை' போல, இப்போதும் சர்வ தேசம் உட்பட சகலரின் காதிலும் அரசு வைக்கப் போகும் பூவைச் சந்தோஷமாகச் சூடிக்கொண்டு சர்வதேசம் வாளாவிருக்கப் போகின்றதா? சர்வதேசத்தின் பிரதி பலிப்பை நன்கு அவதானத்துடன் பார்த்திருக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள்.


Uthayan.com

0 Comments: